search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thatchanallur"

    • அக்சா வின்சி பெனிட்டாவுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
    • கடந்த 23-ந் தேதி மாலை காரில் வெளியே சென்ற அக்சா வின்சி மீண்டும் வீடு திரும்பவில்லை.

    நெல்லை:

    தச்சநல்லூர் சுகர் மில் காலனியை சேர்ந்தவர் மைக்கேல் பிரபாகர். இவரது மகள் அக்சா வின்சி பெனிட்டா (வயது 34). இவருக்கு திருமணம் ஆகி 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது அவரை பிரிந்து தனது தந்தை மைக்கேல் பிரபாகர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 23-ந் தேதி மாலை வீட்டில் இருந்து காரை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டு சென்ற அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

    இது தொடர்பாக அவரது தந்தை தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெனிட் டாவை தேடி வருகின்றனர்.

    • மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை புரிந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

    தற்பொழுது தச்சநல்லூர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக தச்சநல்லூர் மாநகராட்சி வரி வசூல் மையத்தில் மின் இணைப்பு எண்னணுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதனை இன்று காலை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு நெல்லை நகர் புறக்கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி தலைமை தாங்கினார். பழைய பேட்டை உபகோட்ட உதவி செயற் பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.

    மேலும் உதவி மின் பொறியாளர்கள் சரவணகுமார், சரவணன், அருணன், மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஏற்கனவே நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் 103 சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தியாகராஜநகரில் நெல்லை மத்திய அலுவலகத்திலும், தற்பொழுது தச்சநல்லூர் மாநகராட்சி வரி வசூல் மையத்திலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை புரிந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • குளத்துக்கு செல்லும் பாதையில் சிலர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனருக்கு தகவல் கிடைத்தது.
    • ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாட்டு தொழுவத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தச்சநல்லூர் போலீஸ் நிலையம் எதிரே தேனீர் குளம் உள்ளது. இந்த குளத்துக்கு செல்லும் பாதையில் சிலர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.

    புகார்

    இது தொடர்பாக ஏற்கனவே அப்பகுதி மக்கள் அடிக்கடி புகார் அளித்து வந்தனர். இதை அடுத்து இன்று தச்சை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் உதவி பொறியாளர் லெனின் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அங்கே சென்றனர்.

    அப்போது அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாட்டு தொழுவத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். இதனையொட்டி அங்கு தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மின்பாதையை பாராமரிக்க ஒத்துழைப்பு வழங்கும்படி மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் தச்சநல்லூர் மற்றும் தியாகராஜ நகர் துணை மின்நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வ விக்னேஷ் நகர், பாலாஜி அெவன்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்திஸ்வரம், இருதய நகர், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, முத்தூர், கொடிக்குளம் மற்றும் ஸ்ரீராமன்குளம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    அன்றைய தினம் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையை பாரமரிக்க ஒத்துழைப்பு வழங்கும்படி மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×