search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "terrorists killed"

    காஷ்மீரில் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் ராணுவவீரர்கள் 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். #JKEncounter #MilitantKilled
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் தூரு சாகாபாத் என்கிற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தனர். அவர்களை தங்களிடம் சரணடைந்துவிடும் படி போலீசார் எச்சரித்தனர். மாறாக பயங்கரவாதிகள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.



    இதில் 3 ராணுவ வீரர்களின் உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை சக வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ராணுவவீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

    இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மற்றொரு பயங்கரவாதி அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இதே போல் புட்காம் மாவட்டம் பான்சான் என்கிற கிராமத்தில் மசூதி ஒன்றுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை ராணுவவீரர்கள் சுற்றிவளைத்தபோது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. அப்போது ராணுவ வீரர்கள் சுட்டதில் பயங்கரவாதிகள் 2 பேர் உயிர் இழந்தனர்.

    மற்றொரு சம்பவமாக தலைநகர் ஸ்ரீநகரில் நூர்பாக் என்கிற இடத்தில் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவவீரர்கள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார்.

    இதனையடுத்து, தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகரில் செல்போன் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. #JKEncounter #MilitantKilled
    பாகிஸ்தானில் நடந்த பயங்கர மோதலின்போது, 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். படைவீரர்கள் 2 பேரும் பலியாகினர். #Pakistan #TerroristKilled #KalatOperation
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது. அங்கு லஷ்கர் இ தொய்பா, ஹக்கானி நெட்வொர்க் அமைப்பினர், தலீபான் இயக்கத்தினர், ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர்.

    பாகிஸ்தானை சொர்க்கபுரியாக கருதி இந்த பயங்கரவாதிகள் அங்கு தங்கி பயங்கரவாத சதித்திட்டங்கள் தீட்டி, எல்லை தாண்டிய தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்ற புகாரை அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.



    இந்த நிலையில் அங்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் கலாத் என்ற இடத்தில் மங்கோசார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் அந்த மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

    இதையடுத்து நேற்று முன்தினம் அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அவர்களைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் தங்களது துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர்.

    ஆனால் அவர்களை சரண் அடையுமாறு பாதுகாப்பு படையினர் கூறியும் அவர்கள் அதைக் கேட்காமல் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர்.

    இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் இடைவிடாமல் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சண்டையின்போது 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதே போன்று பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேரும் பலியாகினர். அவர்களில் முகமது வாரிஸ், ஷாபான் ஜாங் பகுதியை சேர்ந்தவர் என்றும், மிர் ஆலம் ஜில்கித், பல்திதானை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

    பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ ஊடகப்பிரிவு ஐ.எஸ்.பி.ஆர். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாத செயல்கள் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சிலர் சதி செய்து வருவதாக உளவுத்தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில், அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். படையினர் 2 பேர் பலியாகினர். அங்கிருந்து 2 கவச உடைகள், ஏராளமான வெடிபொருட்கள், பிற ஆயுதங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பலியான பயங்கரவாதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து எந்தத் தரப்பிலும் தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  #Pakistan #TerroristKilled #KalatOperation
    ×