search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shiva MLA"

    • புதுவை அருகே வில்லியனூர் ஒதியம்பட்டு வண்ணார ப்பரதேசி சித்தர் சுவாமிகள் கோவில் வளாகத்தில் சுகாதாரதுறையின் மூலமாக காச நோய் கண்டுபிடிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • மாவட்ட காசநோய் மருத்துவ அதிகாரி டாக்டர் விவேகா முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே வில்லியனூர் ஒதியம்பட்டு வண்ணாரப்பரதேசி சித்தர் சுவாமிகள் கோவில் வளாகத்தில் சுகாதாரதுறையின் மூலமாக காச நோய் கண்டுபிடிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    முகாமிற்கு காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் . சிவா முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.

    மாவட்ட காசநோய் மருத்துவ அதிகாரி டாக்டர் விவேகா முன்னிலை வகித்தார். வில்லியனூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் திலகம் காச நோய் அறிகுறிகள் குறித்து விளக்கினார்.

    நிகழ்ச்சியில் சமூக நலத்துறை தலைமை அதிகாரி டாக்டர் வேத பிரியா, வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி செவிலியர்கள் ரத்னா, எட்வீனா, சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் சமூக மருத்துவ துறையைச் சார்ந்த மருத்துவ அதிகாரி மற்றும் பயிற்சி மருத்துவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று காச நோய் விவரங்களை சேகரித்தனர்.

    • ரூ. 9 லட்சத்து 48 ஆயிரத்து 858 மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • கிருஷ்ணமூர்த்தி, செந்தில், அமலா ஜெயசீலன், முருகவேல், பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை நகராட்சி மூலம் வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட கொம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பாலமுருகன் நகருக்கு ரூ. 9 லட்சத்து 48 ஆயிரத்து 858 மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

    எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதில், புதுவை நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலை பொறியாளர் ஞானசேகரன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், ஜலால் பாய், ஜெகன்மோகன், கந்தசாமி, ரமணன், அக்பர் பாய், சுப்பிரமணியன், வரதன், அருண், பரமசிவம், சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, செந்தில், அமலா ஜெயசீலன், முருகவேல், பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் 12 ஆண்டாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது.
    • கூட்டத்தில் நடப்பு நிதியாண்டில் துறைரீதியிலான நிதி ஒதுக்கீடு, செலவினங்கள், சம்பளம், ஓய்வூதியம் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் 12 ஆண்டாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது. பட்ஜெட் தொகையை இறுதி செய்வதற்கான மாநில திட்டக்குழு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.கவர்னர் தமிழிசை தலைமை வகித்தார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபி ரியங்கா, வைத்திலிங்கம் எம்.பி., எதிர்கட்சித்தலைவர் சிவா, தலைமை செயலர் ராஜீவ்வர்மா, கலெக்டர் வல்லவன், அரசு துறை செயலர்கள் பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நடப்பு நிதியாண்டில் துறைரீதியிலான நிதி ஒதுக்கீடு, செலவினங்கள், சம்பளம், ஓய்வூதியம் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. பின்னர் வரும் நிதியாண்டு பட்ஜெட்டுக்கு ரூ.11 ஆயிரத்து 600 கோடி நிர்ணயிக்கப்பட்டது.

    இதை மாநில திட்டத்துறை உறுதி செய்துள்ளது. இந்த வரையறை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் மார்ச் மாதம் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    புதுவை மாநிலத்திட்ட க்குழுவில் எதிர்க்கட்சி த்தலைவர் சிவா பேசியதாவது:-

    புதுவையில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. புதிய ஆட்சி வந்த பிறகு ஒரு தொழிற்சா லைக்கூட வரவில்லை. ஆயிரக்கணக்கான ஏக்கர் 20 ஆண்டுகளாக முடக்கி போட்டுள்ளோம். சிறப்பு பொருளாதார மண்டலம் கொண்டுவருவதாகக்கூறி நிறைய குழப்பங்கள் ஏற்பட்டன.

    இப்போதும் நடை முறைக்கு வரவில்லை. புதுவை வளர்ச்சிக்கு புதிய தொழிற்சாலை கள்கொண்டு வந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள்.

    புதுவையில் குடிநீர் பிரச்சினை அதிகரி த்துள்ளது. தமிழகத்தில் காவிரி குடிநீரை விழுப்புரம் வரை கொண்டு வந்துள்ளனர். தமிழக அரசுடன் பேசி குடிநீரை புதுவைக்கு கொண்டு வரலாம்.

    ரேஷன் கடை இல்லாத மாநிலம் என்ற கெட்டப்பெயர் ஏன்.? திறக்க நடவடிக்கை எடுங்கள்.

    புதுவையில் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தும் செலவுதான் அதிகமாகிறது. வேலையே ந டக்கவில்லை. ஒவ்வொரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் தொகுதியை பிரித்து கொடுங்கள். சிறப்புக்கூறு திட்டத்தில் அம்மக்களுக்கு இடம் எடுத்து நிலம் தருவதில்லை. வாரியங்களால் மக்களுக்கு பயன் இல்லாத சூழல் உள்ளது.

    புதிய தொழிற்கொள்கை யை உருவாக்கினால்தான் புதிய தொழிற்சாலைகள் வரமுடியும். மத்திய அரசின் பிரதிநிதி துணைநிலை ஆளுநர், பேரவைத்தலைவர் ஆகியோர் மூலம் கூடுதல் நிதியை பெறுங்கள். ஒத்துழைப்பு தருகிறோம். நல்ல பட்ஜெட் போடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் 3 ஸ்டார் நகரில் புதியதாக மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அதன் இயக்க நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில், மின்துறை உதவி பொறியாளர்கள் முருகேசன், பாலமுருகன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதிக்கு ட்பட்ட சுல்தான்பேட்டை புது மேட்டுத்தெரு விரிவாக்கம், அப்துல்கலாம் நகர், 3 ஸ்டார் நகர், 5 ஸ்டார் நகர், ஜாக்கீர் உசேன் நகர், சஃபா நகர், ரஹ்மத் நகர் ஆகிய பகுதியில் நிலவி வந்த குறைந்த மின் சப்ளை மற்றும் அடிக்கடி ஏற்படும் மின் தடை பற்றாக்குறையை போக்கிட ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் 3 ஸ்டார் நகரில் புதியதாக மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அதன் இயக்க நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிவா கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மரை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மின்துறை உதவி பொறியாளர்கள் முருகேசன், பாலமுருகன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத் முக்கிய ஸ்தர்கள், ஊர் பொதுமக்கள் வியாபார சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    • நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகரைச் சேர்ந்த அல்போன்ஸ் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மாநில அமைப்பாளர் சிவா முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
    • எனவே இளைஞர்களான நீங்கள் தி.மு.க.வின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகரைச் சேர்ந்த அல்போன்ஸ் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மாநில அமைப்பாளர் சிவா முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    அப்போது மாநில அமைப்பாளர் சிவா பேசியதாவது:-

    மதம், ஜாதியை வைத்து அரசியல் செய்யாத இயக்கமும், அனைவரும் சமம் என்ற அடிப்படையான திராவிட கொள்கையை கொண்டதும் திமு.க.தான், தற்போது நாட்டிற்கு அத்தியாவசியமான கொள்கையும் இதுதான்.

    எனவே இளைஞர்களான நீங்கள் தி.மு.க.வின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு சிவா பேசினார்.

    நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வேலவன், நெல்லித்தோப்பு தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, தொகுதி துணை ஒருங்கிணைப்பாளர் அருண், வில்லியனூர் தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வில்லியனூர் தொகுதியில் பருவ மழை பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க , எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் சாலைப்பணிகள், குடிநீர் பராமரிப்பு, வடிகால் வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
    • வாய்க்கால்கள் ரூ.10 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது. இதனை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதியில் பருவ மழை பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க , எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் சாலைப்பணிகள், குடிநீர் பராமரிப்பு, வடிகால் வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    அந்தவகையில் பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டப் பிரிவு சார்பில் ஆத்துவாய்க்கால், கருப்பட்டி வாய்க்கால், மாதா கோவில் , பாலாஜி நகர், ஒதியம்பட்டு, பெரம்பை வாய்க்கால், பெரியபேட் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் ரூ.10 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது. இதனை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி கலியமூர்த்தி, தொகுதி இளைஞர் அணி மணிகண்டன், தொகுதி துணை செயலாளர் அங்காளன், பழனிசாமி, வேலு, ஜெகன்மோகன், தட்சணாமூர்த்தி, தேசிங்கு, ரமேஷ், ஹரி, கிருஷ்ணன், ராஜி, தர்மராஜ், ரமணன், சபரி, ரபிக், செல்வநாதன், கே.வி.ஆர்.பாலு, நாகப்பன், திலகர், சுப்பிரமணி, ஏழுமலை, ராமஜெயம், கிருஷ்ணசாமி, கோபி, வீரா, முத்து, ரகு, அருள், சுரேஷ், அய்யனார், வேதாச்சலம், செல்வம், நாகராஜ், மிலிட்டரி முருகன், நாதன், எம்.ஜி.ஆர். சிலை முருகன், வரதன், விக்னேஷ் அருண் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • பாண்லே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளுக்கு இடையே தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதனால் நிர்வாக சீர்கேடுகளும் நடந்து வருகிறது.
    • பாண்லே நிறுவனம் இந்தியாவிலேயே தரமான பாலை கொடுப்பதாக ஆய்வில் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி–யிருப்பதாவது:-

    பாண்லே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளுக்கு இடையே தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதனால் நிர்வாக சீர்கேடுகளும் நடந்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரகாலமாக பாண்லே நிறுவனத்திற்கு கர்நாடகாவில் இருந்து வாங்க வேண்டிய பாலை வாங்காமல் இருந்து வருகின்றனர்.

    இதன் காரணமாக பாண்லே பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு முகவர்களுக்கும், பாண்லே பூத்களுக்கும் வழங்கப்படும் பாலின் அளவு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனை கண்டித்து முகவர்கள் போராட்டம் நடத்திய பின்னரும் அரசு கண்டுகெள்ளவில்லை. இதனால் குழந்தைகள், மகளிர், முதியோர், நோயாளிகள் பால் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் பாண்லே நிறுவனத்தை அமுல் நிறுவனத்திடம் விற்கப்போவதாக பேசப்பட்டு வருகின்றது. பாண்லே நிறுவனம் இந்தியாவிலேயே தரமான பாலை கொடுப்பதாக ஆய்வில் தெரியவந்தது. அப்படிப்பட்ட சிறப்பான பாண்லே நிறுவனத்தை ஆட்சியாளர்கள் தங்களின் சுயநலத்திற்காக சீரழித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது மக்களுக்கும் மிகுந்த பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

    குறிப்பாக விழாக்காலமான இந்நேரத்தில் பால் தட்டுப்பாட்டை திட்டமிட்டு உருவாக்குவது மிகுந்த கண்டனத்திற்குரியது. எனவே உடனடியாக பாண்லே நிர்வாகத்தில் உள்ள நிர்வாக சீர்கேடுகளை கலைந்து தட்டுப்பாடின்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • ஒரு காலத்தில் தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக எழுச்சியாக போராட்டங்கள் நடத்த ப்பட்டது. தற்போது கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்திக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.
    • போராட்டம் உணர்வு சார்ந்தது, இன்னும் கூட கூட்டத்தை கூட்டுவோம். இந்தி திணிப்பை கைவிடா விட்டால், போராட்டம் தொடரும்.

    புதுச்சேரி:

    புதுவை சுதேசி மில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா பேசியதாவது:-

    ஒரு காலத்தில் தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக எழுச்சியாக போராட்டங்கள் நடத்த ப்பட்டது. தற்போது கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்திக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.

    இந்தியா முழுவதும் நமது போராட்டம் பரவியுள்ளது.தி.மு.க.விற்கு ஆட்சி முக்கியமில்லை, பல முறை ஆட்சியை இழந்துள்ளோம். பூச்சாண்டிக்கு பயப்படும் கட்சி தி.மு.க. அல்ல. தி.மு.க.வை அசைத்துக்கூட பார்க்க முடியாது. தலைமை தபால் நிலையத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டபோது சூட்டிங் ஆர்டர் போடுவோம் என்றனர்.

    ஜனநாயகத்தில் கடமை, கண்ணியத்துடன் போராட்டம் நடத்த நினைக்கின்றோம், தி.மு.க. எத்தனையோ சூட்டிங் ஆர்டர்களை பார்த்துள்ளது. தி.மு.க. திருட்டுத்தனமாக ஆட்சிக்கு வந்த கட்சி அல்ல. கொள்கை இல்லாமல் விலைபேசி ஆட்களைப் பெற்று ஆட்சிக்கு வந்ததும் கிடையாது. தி.மு.க. 27 ஆண்டாக ஆட்சியில் இல்லை, ஆனாலும் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

    போராட்டம் உணர்வு சார்ந்தது, இன்னும் கூட கூட்டத்தை கூட்டுவோம். இந்தி திணிப்பை கைவிடா விட்டால், போராட்டம் தொடரும்.

    மத்திய அரசின் முகமூடி மக்களுக்கு தெரிந்துவிட்டது. புதுவையில் மின்துறை, சுற்றுலாத்துறை என அனைத்தும் குட்டிச்சுவர் ஆக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார்கள். தேர்தலில் அறிவித்தபடி துறைமுகத்தை இயக்கத்திற்கு கொண்டுவந்தீர்களா? மூடப்பட்ட சுசேதி மில், ரோடியர் மில், கூட்டுறவு சர்க்கரை ஆலை எதை திறந்தீர்கள்? கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    கவர்னர் அரசியல் செய்வதாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரவேண்டும். புதுவை வளர்ச்சிக்கு பாடுபடுவார் என்று ஜனநா யகத்தின் அடிப்படையில் மரியாதை கொடுத்து பேசி வருகின்றோம். ஆனால் கவர்னர் என்பதை மறந்து 2024 ஆட்சிக்கு பா.ஜனதா வருவதற்கான ஆலோசனை குழுவில் பங்கேற்று கருத்துக்களை கூறி வருகிறார்.

    இவர் புதுவையின் கவர்னராக பொறுப்பேற்றவுடன் செய்த காரியம், ஆட்சியை கலைத்ததுதான்.

    புதுவை சபாநாயகரும் ஜனநாயக மரபுகளை மீறுகின்றார். நாங்கள் ஆர்.எஸ்.எஸ்.தான், இந்துத்துவாதான் என்று கூறி நமச்சிவாயம் உள்ளிட்டோர் தைரியமாக வெளியில் கூறி வரவேண்டும். பா.ஜனதாவின் சித்தாந்தம் தமிழகம், புதுவையில் ஒரு காலமும் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிருந்தாவனம், விரிவாக்கம் பகுதியில் நீர்பாசன வாய்க்கால் மீது பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டாக கோரிக்கை வைத்து வந்தனர்.
    • மழை காலத்தில் மிக கடுமையாக அவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. சிவாவிடம் புகார் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிருந்தாவனம், விரிவாக்கம் பகுதியில் நீர்பாசன வாய்க்கால் மீது பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    மழை காலத்தில் மிக கடுமையாக அவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. சிவாவிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்டம் மூலம் ரூ.10 லட்சத்தில் பாலம் கட்டுமான பணியை கடந்த பிப்ரவரியில் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 6 மாதத்தில் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

    இந்த புதிய பாலத்தின் திறப்பு விழா நடந்தது. எதிர்கட்சி த்தலைவர் சிவா, பிருந்தாவனம் நகர் மக்கள் முன்னிலையில் பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப் பணித்தார்.

    நிகழ்ச்சியில், குடியிருப்போர் நல்வாழ்வுச் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், ரகுராமன், சிவாஜிராவ், செல்வகணபதி, சங்கர் சீனுவாசன், வெ ங்கடகோவிந்தன், மூர்த்தி, அன்பழகன், லதா, சுகந்தி, ஆஷா, சுஜா, புவனா, அன்பழகி, தி.மு.க. நிர்வாகிகள் செல்வநாதன், மணிகண்டன், ச பரிநாதன், ரமணன், திலகர், பாபு, செல்வம், ஏழுமலை, தங்கராசு, சர்வன், சிலம்பு, ஷர்மா, பாபு, நவணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×