search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாய்க்கால் தூர்வாரும் பணி-சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    கோப்பு படம்.

    வாய்க்கால் தூர்வாரும் பணி-சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • வில்லியனூர் தொகுதியில் பருவ மழை பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க , எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் சாலைப்பணிகள், குடிநீர் பராமரிப்பு, வடிகால் வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
    • வாய்க்கால்கள் ரூ.10 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது. இதனை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதியில் பருவ மழை பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க , எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் சாலைப்பணிகள், குடிநீர் பராமரிப்பு, வடிகால் வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    அந்தவகையில் பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டப் பிரிவு சார்பில் ஆத்துவாய்க்கால், கருப்பட்டி வாய்க்கால், மாதா கோவில் , பாலாஜி நகர், ஒதியம்பட்டு, பெரம்பை வாய்க்கால், பெரியபேட் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் ரூ.10 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது. இதனை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி கலியமூர்த்தி, தொகுதி இளைஞர் அணி மணிகண்டன், தொகுதி துணை செயலாளர் அங்காளன், பழனிசாமி, வேலு, ஜெகன்மோகன், தட்சணாமூர்த்தி, தேசிங்கு, ரமேஷ், ஹரி, கிருஷ்ணன், ராஜி, தர்மராஜ், ரமணன், சபரி, ரபிக், செல்வநாதன், கே.வி.ஆர்.பாலு, நாகப்பன், திலகர், சுப்பிரமணி, ஏழுமலை, ராமஜெயம், கிருஷ்ணசாமி, கோபி, வீரா, முத்து, ரகு, அருள், சுரேஷ், அய்யனார், வேதாச்சலம், செல்வம், நாகராஜ், மிலிட்டரி முருகன், நாதன், எம்.ஜி.ஆர். சிலை முருகன், வரதன், விக்னேஷ் அருண் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×