search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sambath MLA"

    • முதலியார் பேட்டை தொகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய 2 ஏரிகள் உழந்தை மற்றும் முருங்கப்பாக்கம் ஏரிகள்.
    • புதுவை மாநிலம் தற்பொழுது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இருப்பினும் வேல்ராம்பட்டு ஏரியில் நீர் தேக்கி நிலத்தடி நீரை உயர்த்த பல நூறு கோடி ரூபாய் செலவிடுகிறது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சம்பத் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணனை சந்தித்து வேல்ராம்பட்டு ஏரி நீரை வெளியேற்ற அனுமதி கொடுத்ததை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    முதலியார் பேட்டை தொகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய 2 ஏரிகள் உழந்தை மற்றும் முருங்கப்பாக்கம் ஏரிகள். இந்த 2 ஏரிக்கும் நீர் நிரப்ப மழை நீரை பல பகுதிகளில் இருந்து கொண்டு வர உங்கள் துறையே பல கோடி ரூபாய் செலவிட்டு கட்டுமானப் பணியையும் மேற்கொண்டு வருகிறது.

    இந்த 2 ஏரிகளிளும் நீர்த்தேக்கி படகு போக்குவரத்து ஏற்படுத்தி பெரிய சுற்றுலா மையமாக சுற்றுலாத் துறை தொலைநோக்கு திட்டத்துடன் பல கோடி ரூபாய் செலவில் பணி தொடங்கியுள்ளது.

    புதுவை மாநிலம் தற்பொழுது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இருப்பினும் வேல்ராம்பட்டு ஏரியில் நீர் தேக்கி நிலத்தடி நீரை உயர்த்த பல நூறு கோடி ரூபாய் செலவிடுகிறது.

    நிலைமை இப்படி இருக்க வேல்ராம்பட்டு ஏரியின் மீன்பிடிக்க ஒப்பந்தம் எடுத்தவர் மீன் பிடிக்க சுயலாபத்திற்காக ஏரியின் நீரை வெளியேற்றி வருகிறார். இதற்கு தங்கள் துறையே அனுமதி வழங்கி உள்ளது.

    இதை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் இனியும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது.

    தங்கள் துறை மூலம் நீர் வெளியேற்ற கொடுத்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லையெனில் முன்னறிவிப்பு ஏதும் கொடுக்காமல் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 2030-க்கு பிறகு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என எச்சரிச்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சாலை விரிவாக்க பணியின் போது மின் கம்பங்களை நகர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் பேசியதாவது:-

    2030-க்கு பிறகு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என எச்சரிச்கை விடுக்கப் பட்டுள்ளது. எனவே குடிநீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுமதி தரும்போது நிலத்தடி நீரை சேகரிக்க அறிவுறுத்த வேண்டும்.

    தியாகுமுதலியார் நகர், பாரதிதாசன் நகர் குடியிருப்பில் மூடப்பட்ட பூங்காக்ககளை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சாலை விரிவாக்க பணியின் போது மின் கம்பங்களை நகர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுபட்டுள்ள பகுதிகளில் பாதாள சாக்காடை அமைத்து தர வேண்டும்.

    வேல்ராம்பட்டு ஏரியை படகு குழாமாக மாற்ற வேண்டும். ஒரே செயலியல் புதுவையின் அனைத்து சுற்றுலா தலங்களும் அமையு மாறு வடிவமைக்க வேண்டும். இதனால் சுற்றுலா பயணிகள் அனைத்து இடங்களையும் எளிதில் சென்று பார்வையிடுவர்.

    சேமநல நிதியை உயர்த்தி வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். நீதிமன்றத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.

    இவ்வாறு சம்பத் பேசினார்.

    • முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
    • ஏழைகள் அந்த நேரத்தில் பணம் இல்லாமல் தவிக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டடசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் பேசியதாவது:-

    வேல்ராம்பட்டு ஏரி ஒப்பந்தத்தை ரத்து செய்து ஏரியை காப்பாற்ற வேண்டும். முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.

    இயற்கை பேரிடர் காலங்களில் அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இறந்தவர் உடலை அடக்கம் செய்ய பணம் முக்கிய தேவையாக உள்ளது. ஏழைகள் அந்த நேரத்தில் பணம் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே மயான வசூலிக்கும் கட்டண தொகையினை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

    அரசு மருத்துவ மனைகளில் இருதய அறுவை சிகிச்சை 2 வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கிறது. தினமும் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.சிடி ஸ்கேன் எந்திரம் மேலும் 2 வாங்க வேண்டும்.

    நீரழிவு நோயாளிகள் போடும் இன்சுலின் ஊசியின் பருமனை மாற்ற வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேலும் ஒரு டாக்டரை பணியமர்த்த வேண்டும். முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை புனரமைக்க வேண்டும்

    இவ்வாறு சம்பத் பேசினார்.

    • முதலியார்பேட்டை தொகுதி குமரன் நகர் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் இருந்தது.
    • இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி குமரன் நகர் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் இருந்தது. இதனால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு கடும் சிரமம் ஏற்பட்டது. இந்த சாலைகளை சீரமைத்து தருமாறு குமரன் நகர் பகுதி மக்கள் சம்பத் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள புதுவை நகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

    இதில், நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்க டாஜலபதி, இளநிலை பொறியாளர் ரமேஷ், குமரன் நகர் நல வாழ்வு சங்க நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் வருகிற 28-ந் தேதி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
    • கிறிஸ்துமஸ் தொடங்கி ஆங்கில புத்தாண்டு வரை பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் புதுவையில் தங்குவதற்கு தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    முதலியார் பேட்டை தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் வருகிற 28-ந் தேதி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இது வரை 11 முறை புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது.

    புதுவை முழுக்க முழுக்க சுற்றுலாவையே நம்பியுள்ள ஒரு யூனியன் பிரதேசம். புத்தாண்டு கொண்டா ட்டத்திற்கு ஏற்ற இடம் எது என்ற தேடலில் புதுவை மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்ற செய்தி ஒவ்வொரு புதுவை வாழ் மக்களும் புதுவையை பற்றி பெருமை கொள்ளும் வகையில் உள்ளது.

    கிறிஸ்துமஸ் தொடங்கி ஆங்கில புத்தாண்டு வரை பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் புதுவையில் தங்குவதற்கு தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்துள்ளனர்.

    தற்போது அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ள திடீர் பந்த் போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் வேறு மாநிலத்திற்கு செல்ல க்கூடிய வாய்ப்பு உள்ளது.

    ஒவ்வொரு மாநிலமும், தங்கள் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு பல ஏற்பாடு களை செய்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க காத்திருக்கின்றது.

    நமது மாநிலத்தைநோக்கி வருபவர்கள், ஒரு சிலரின் சுய அரசியல் லாபத்துக்காக பாதிக்கப்படு வதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. மாநில அந்தஸ்து கோரிக்கை என்ற பெயரில் சுயவிளம்பரம் அரசியல் செய்பவர்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு முதல்-அமைச்சர்

    அனுமதி க்கக்கூடாது. எனவே வியாபார த்தையும், சுற்றுலாவையும் பாதுகாக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி பந்த் போராட்டம் நடைபெறாமல் தடுத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆன்லைன் சூதாட்டத்தால் வயது வித்தியாசம் இல்லாமல் மாணவர்கள் உட்பட பலர் பணத்தை இழந்து வருகின்றனர்.
    • புதுவையில் விலைமதிப்பற்ற 5 உயிர்கள் இதுவரை பறிபோயுள்ளன.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி–ருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்டத்தால் வயது வித்தியாசம் இல்லாமல் மாணவர்கள் உட்பட பலர் பணத்தை இழந்து வருகின்றனர். இதனால் மனமுடைந்து தற்கொலைகளும் நடைபெற்று வருகின்றது.

    புதுவையில் விலைமதிப்பற்ற 5 உயிர்கள் இதுவரை பறிபோயுள்ளன. சூதாட்டத்தின் விபரீதத்தை உணர்ந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மக்க ளின் நலன் சார்ந்த தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றி உள்ளது.

    நடந்து முடிந்த புதுவை பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவையில் ஆன்லைன் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2022 என்ற சட்ட முன் வரைவை தனிநபர் மசோதாவாக கொண்டுவர நான் முயற்சி செய்தேன். சட்டமன்றத்தின் அனைத்து நடைமுறைகளின் படி எனது சட்ட முன்வரைவை முறையாக சட்டசபை செயலரிடம் சமர்ப்பித்தேன். சட்டசபை செயலர் அதை புதுவை அரசின் சட்டத்துறைக்கு அனுப்பி கருத்து கேட்டார்.சட்டசபை செயலாளர் மற்றும் புதுவை சட்டத்துறை செயலாளர் ஆகியோர் என்னை அழைத்து இது பற்றி சட்ட விபரங்களை கேட்டனர்.

    அதற்குண்டான அனைத்து விளக்கத்தையும் அவர்களுக்கு வழங்கினேன். ஆன்லைன் தடை சட்டம் மட்டும் 14 சட்டப்பிரிவுகளை கொண்ட சட்டமாக இயற்றப்பட்டது. ஒவ்வொரு சட்டப்பிரிவை பற்றியும் வழக்கறிஞர் என்ற முறையில் முறையாக விளக்கம் கொடுத்தேன். அனைத்தையும் கேட்டுக் கொண்ட அதிகாரிகள் சட்டம் நிறைவேற்ற தேவையான நடவடிக்கையை எடுப்பதாக உறுதி கூறினர்.

    ஆனால் தி.மு.க. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மூலம் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தி.மு.க.விற்கு பெரிய அளவிலான அரசியல் புகழ் கிடைக்கும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பா.ஜனதா தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்து சட்டசபையில் எனது தனிநபர் மசோதா வரவிடாமல் செய்துவிட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் என்னிடம் தெரிவித்தனர்.

    ஆன்லைன் சூதாட்டம் தடை விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பருவநிலை மாற்றத்தால் இயற்கையாகவே அனைவருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.
    • பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக பரவுகின்றது.

    புதுச்சேரி:

    முதலியார் பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் புதுவை கல்வி துறை அமைச்சர் நமச்சிவாத்துக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் தற்போது பருவநிலை மாறி வருகின்றது. பருவநிலை மாற்றத்தால் இயற்கையாகவே அனைவருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள். அதிலும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.

    தற்சமயம் பருவநிலை காய்ச்சல் அதிக அளவில் குழந்தைகளை தாக்கி வருகின்றது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக பரவுகின்றது.

    குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதைவிட உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். மருத்துவர்களின் கருத்துப்படி இன்னும் 2-3 வாரங்களில் சகஜ நிலைக்கு திரும்பி விடும் என்கின்றனர்.

    எனவே 1-ம் வகுப்பு முதல் 5-ந் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளி மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையிருப்பின் ஆன்லைன் வகுப்பு நடத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • விபத்துகளை கட்டுப்படுத்த புதுவையில் இயங்கும் தனியார் பஸ்
    • பயண நேரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    புதுச்சேரி:

    விபத்துகளை கட்டுப்படுத்த புதுவையில் இயங்கும் தனியார் பஸ்களின் வேகத்தை குறைத்து பயண நேரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா விடம் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இந்த விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளும் உடல் ஊனமடைதல் நடக்கிறது. வாகன விபத்துகளுக்கு பொதுவாக சாலை விரிவாக்கப்படவில்லை, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, வாகன ஓட்டுனர்கள் போக்குவரத்து விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக தனியார் பஸ்களின் அஜாக்கிரதை மற்றும் அதிவேகம் காரணமாக பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக புதுவை- கடலூர் சாலையும், புதுவை-விழுப்புரம் சாலையும் மரண சாலையாகவே மாறி வருகின்றது.

    ஆனால் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலாலும் முன் செல்லும் மற்றும் பின்வரும் பஸ்களுக்கு இடையே அடிக்கடி நேரம் தொடர்பாக பிரச்சனைகள் வருகின்றது. இதனால் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் பிரச்சனை பெரிதாகி சிக்கலை ஏற்படுத்துகிறது.

    இதன் காரணமாகவே விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே இன்றைய கால சூழலுக்கு ஏற்ப போக்குவரத்து எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து புதுவையில் இயங்கும் அனைத்து வழித்தடங்களில் செல்லும் பஸ்களின் வேகத்தை குறைத்து பயண நேரத்தை நீட்டித்து உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும் இதனை தனியார் பஸ்கள் கடைபிடிக்கின்றனவா என்பதை கண்காணிக்க சிறப்பு போக்குவரத்துக் குழுவை அமைக்க வேண்டும்.

    இதனை மீறும் தனியார் பஸ்களின் வழித்தட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். எனவே உயிர் பலிகளை குறைக்க போக்குவரத்து துறை அமைச்சர் இதற்காக தனி கவனம் செலுத்தி சிறப்பு குழுவை ஏற்படுத்தி தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×