search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rowdy murder case"

    சோழவரத்தில் ரவுடி கொலையில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    வியாசர்பாடி, கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் திவாகர் (36) ரவுடி. கடந்த 30-ந்தேதி இரவு அவர் சோழவரம் ஏரிக்கரையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது தொடர்பாக செங்குன்றத்தை அடுத்த பாலகணஷ் நகரைச் சேர்ந்த சுரேஷ் என்கிற பாபா சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். நண்பரின் கொலைக்கு பழிக்கு பழியாக திவாகரை தீர்த்து கட்டியதாக கூறி உள்ளார். இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    செங்கல்பட்டில் இன்று காலை ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murdercase

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு டவுன், நாவலர் நெடுஞ்செழியன் தெரு, மலைப்பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் சீனு என்கிற குள்ளசீனு (வயது40). ரவுடி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இன்று காலை சீனு வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றார். சிறிது தூரம் சென்ற போது 5 பேர் கும்பல் திடீரென அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த சீனு அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட முயன்றார். ஆனாலும் சுற்றி வளைத்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த சீனு சம்பவ இடத்திலேயே பலியானார். குடியிருப்புக்கு மத்தியில் நடந்த இந்த சம்பவம் கண்டு அங்கு இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    கொலை திட்டத்தை முடித்த கும்பல் சர்வ சாதாரணமாக அருகில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.

    சீனு கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறியபடி அங்கு வந்தனர். செங்கல்பட்டு டவுன் போலீசார் சீனு உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட சீனு மீது செங்கல்பட்டு அ.தி.மு.க. நகர செயலாளர் குமார் கொலை வழக்கு, பிரபல ரவுடி பட்டரைபாக்கம் சிவாவை கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று தெரிகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Murdercase

    வியாசர்பாடியில் ரவுடி கொலை வழக்கில் 8 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் பரத் என்கிற தக்காளி பரத் (வயது 38). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் மீது வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், செம்பியம், திரு.வி.க. நகர் போன்ற போலீஸ் நிலையங்களில் கொலை, கொலைமுயற்சி, திருட்டு வழக்குகள் உள்ளன. ரவுடி மாமூலும் கேட்டு பலருக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

    அந்த பகுதியில் லாரியில் தண்ணீர் விற்பனை செய்யும் விகாஸ் (20) என்பவரிடம் மாமூல் கேட்டு ரவுடி தக்காளி பரத் தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் விகாசை தனது வீட்டுக்கு தக்காளி பரத் அழைத்து மதுபாட்டில் வாங்கித் தருமாறு கூறினார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று விகாஸ் மறுத்தார். இதனால் அவரை தக்காளி பரத் சரமாரியாக தாக்கினார்.

    இது தொடர்பாக விகாஸ் செம்பியம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து தக்காளி பரத்தை கைது செய்தார். ஜெயிலில் அடைக்கப்பட்ட தக்காளி பரத் கடந்த 15-ந் தேதி வெளியே வந்தார். அவரை கொலை செய்ய விகாசும், அவரது நண்பர்கள் 7 பேரும் திட்டமிட்டனர்.

    இதை அறிந்த தக்காளி பரத் தனது வீட்டுக்கு செல்லாமல் மறைவான இடத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு தக்காளி பரத் வீட்டுக்கு திரும்பினார். நேற்று முன்தினம் இரவு அவர் கக்கன்ஜி காலனியில் உள்ள ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது விகாசும், அவரது நண்பர்கள் பார்த்திபன், லோகேஸ்வரன், கணேசன், வசந்தகுமார், நிர்மல்குமார், தேவராஜ், தீபக்குமார் ஆகியோரும் தக்காளி பரத்தை கத்தியால் குத்தினார்கள். 12 இடங்களில் கத்திக் குத்துப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே 8 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    அக்கம் பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தக்காளி பரத்தை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தக்காளி பரத் இன்று அதிகாலை இறந்தார்.

    இது தொடர்பாக செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தார். இந்த நிலையில் கொலையாளிகள் பெரியபாளையத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பெரியபாளையம் சென்று 8 பேரையும் கைது செய்தனர்.

    ஓசூர் ரவுடி கொலையில் கைதான 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஓசூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராஜ் (வயது 32). பிரபல ரவுடி. இவர் மீது இரட்டை கொலை வழக்கு உள்பட மொத்தம் 3 கொலை வழக்குகள் இருந்தன.

    இவர் சூளகிரி அட்ட குறுக்கியில் உள்ள ஒரு தனியார் கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 17-ந் தேதி இரவு வெங்கட்ராஜ் காமன்தொட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் கிரானைட் நிறுவனத்தில் காண்டிராக்ட் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் வெங்கட்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இந்த கொலை தொடர்பாக சூளகிரி அருகே உள்ள ஒட்டர்பாளையத்தை சேர்ந்த கேசவன் (26), அவரது தம்பி சந்தோஷ் (23), கர்நாடக மாநிலம் ஆவேனக்கல்லை சேர்ந்த பாலாஜி (25), சூளகிரி ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்த எர்ரமுனியப்பா என்பவரின் மகன் மாதேஸ்வரன் (27), அவரது சகோதரர் மல்லேகவுடு ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர். அவர்களில் கேசவன், அவரது தம்பி சந்தோஷ், மாதேஸ்வரன் ஆகிய 3 பேரும் கடந்த 19-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் போலீசார் தேடி வந்த பாலாஜி, மல்லேகவுடு ஆகிய 2 பேரையும் சூளகிரி போலீசார் நேற்று கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் ஓசூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×