search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Red banana"

    • செவ்வாழையில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் கருவுறுதல் மற்றும் ஆண்மை தன்மைக்கு நலம் சேர்க்கும்.
    • செவ்வாழை பழத்தில் வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் இருக்கின்றன.

    தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட செவ்வாழை பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்டது. இந்த பழத்தை சாப்பிட உகந்த நேரம் காலை 6 மணி. அது சாத்தியமில்லை என்றால் காலை 11 மணி அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடலாம் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதேவேளையில் உணவு சாப்பிட்ட உடன் செவ்வாழை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சோம்பல் உணர்வை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலிலும் சிக்கல் நேரும்.

    செவ்வாழையில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் கருவுறுதல் மற்றும் ஆண்மை தன்மைக்கு நலம் சேர்க்கும். இதில் டெஸ்டோஸ்டிரோன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமான துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. துத்தநாகம் புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு உதவும். உடல் ஆற்றலையும் வலுப்படுத்தும்.

    லுடீன் மற்றும் பீட்டா கரோட்டினாய்டுகள் நிறைந்திருப்பதால் வயது தொடர்பான மாகுலர் சிதைவு, இரவு பார்வை இழப்பை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தையும், பார்வை திறனையும் மேம்படுத்த செவ்வாழை உதவும்.

     

    செவ்வாழை பழத்தில் வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் இருக்கின்றன. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும், தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும். போதுமான அளவு கொலாஜன் இருப்பது தசைகளை பலப்படுத்தும். கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்தும்.

    செவ்வாழையில் வைட்டமின் பி6 இருப்பது, ரத்த சிவப்பணு உருவாக்கத்திற்கு உதவும். ரத்தத்தை சுத்திகரிக்கவும், ரத்த சோகைக்கு தீர்வு காணவும் துணை புரியும்.

    செவ்வாழையை சரியான நேரத்தில் சாப்பிடுவது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை உறுதி செய்யும். கூடுதல் நன்மைகளை வழங்கும்.

    • விளைநிலங்களில், தனிப்பயிராகவும், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகவும் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
    • நல்ல விலை கிடைக்கும் செவ்வாழை ரகத்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதியில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொழிவு காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து காய்கறி மற்றும் இதர சாகுபடி பரப்பு கடந்த சீசனில் அதிகரித்தது.அதே போல், நீர் வளம் மிகுந்த பகுதிகளில்வாழை சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விளைநிலங்களில், தனிப்பயிராகவும், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகவும் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.

    முன்பு நேந்திரன் மற்றும் இலைத்தேவைக்கான வாழை ரகங்களே உடுமலை பகுதி விவசாயிகளின் தேர்வாக இருந்தது.தற்போது பிற ரகங்களையும் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக நல்ல விலை கிடைக்கும் செவ்வாழை ரகத்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் செவ்வாழை ரகங்களுக்கான கன்றுகள் போதுமான அளவு கிடைப்பதில்லை. எனவேவிவசாயிகள் தேவையறிந்து பிற மாவட்டங்களில் இருந்து கன்றுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    அதில் தேனி மாவட்டம் வருஷநாடு பகுதியிலிருந்து கொண்டு வந்து ஒரு கன்று 120 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், 'அதிக நீர் தேவையுள்ள வாழை சாகுபடியை இந்தாண்டு பலர் தேர்வு செய்துள்ளனர். சீசனுக்கேற்பதோட்டக்கலை பண்ணை வாயிலாக வாழைக்கன்று உற்பத்தி செய்து, மானிய விலையில் விற்பனை செய்யலாம். இதனால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவார்கள் என்றனர்.

    ×