search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் சாகுபடிக்காக செவ்வாழை கன்றுகள் விற்பனை
    X

    விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள செவ்வாழை கன்றுகள்.

    உடுமலையில் சாகுபடிக்காக செவ்வாழை கன்றுகள் விற்பனை

    • விளைநிலங்களில், தனிப்பயிராகவும், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகவும் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
    • நல்ல விலை கிடைக்கும் செவ்வாழை ரகத்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதியில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொழிவு காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து காய்கறி மற்றும் இதர சாகுபடி பரப்பு கடந்த சீசனில் அதிகரித்தது.அதே போல், நீர் வளம் மிகுந்த பகுதிகளில்வாழை சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விளைநிலங்களில், தனிப்பயிராகவும், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகவும் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.

    முன்பு நேந்திரன் மற்றும் இலைத்தேவைக்கான வாழை ரகங்களே உடுமலை பகுதி விவசாயிகளின் தேர்வாக இருந்தது.தற்போது பிற ரகங்களையும் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக நல்ல விலை கிடைக்கும் செவ்வாழை ரகத்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் செவ்வாழை ரகங்களுக்கான கன்றுகள் போதுமான அளவு கிடைப்பதில்லை. எனவேவிவசாயிகள் தேவையறிந்து பிற மாவட்டங்களில் இருந்து கன்றுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    அதில் தேனி மாவட்டம் வருஷநாடு பகுதியிலிருந்து கொண்டு வந்து ஒரு கன்று 120 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், 'அதிக நீர் தேவையுள்ள வாழை சாகுபடியை இந்தாண்டு பலர் தேர்வு செய்துள்ளனர். சீசனுக்கேற்பதோட்டக்கலை பண்ணை வாயிலாக வாழைக்கன்று உற்பத்தி செய்து, மானிய விலையில் விற்பனை செய்யலாம். இதனால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவார்கள் என்றனர்.

    Next Story
    ×