search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Powerloom Association"

    • மின் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.
    • நிலுவை கட்டணத்தை செலுத்த கால அவகாசம் மற்றும் பிரித்து கட்ட தவணை முறை வேண்டும்.

    மங்கலம் :

    சென்னையில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எல். கே. எம். சுரேஷ், செயலாளர் ஆர். வேலுசாமி, ஒருங்கிணைப்பாளர் டி. எஸ்.எ சுப்பிரமணியம், பொருளாளர் கே. பாலசுப்பிரமணியம், செய்தி தொடர்பாளர் கந்தவேல், கோவை மண்டல பொறுப்பாளர் எம்.பாலசுப்பி ரமணியம், கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார், மங்கலம் பகுதி விசைத்தறி சங்கத் தலைவர் ஆர்.கோபால், பல்லடம் பொருளாளர் முத்துகுமாரசாமி ஆகியோர் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் கூறியிரு ப்பதாவது:-

    மின் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். நிலுவை கட்டணத்தை செலுத்த கால அவகாசம் மற்றும் பிரித்து கட்ட தவணை முறை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்பாக நேரடியாகவும் கோரிக்கை வைத்தனர். அமைச்சரை சந்தித்த பின்பு விசைத்தறி சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; மின் கட்டண உயர்வால் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கூறினோம். முதலமைச்சரிடம் இது குறித்து பேசி நல்ல முடிவை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார் என்றனர். 

    • கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தனர்
    • 50 மரக்கன்றுகள் நட்டு பசுமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பல்லடம் :

    கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி கருப்பாத்தாள் ஆகியோர் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தனர். சாவிலும் இணைபிரியாத அந்த தம்பதியருக்கு, காரணம்பே ட்டை மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் 50 மரக்கன்றுகள் நட்டு பசுமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை ,திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் குமாரசாமி தலைமை தாங்கினார். கோடாங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிசாமி,விசைத்தறி சங்க பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மகிழ்வனம் அமைப்பின் செயலர் சோமு என்ற பாலசுப்பிர மணியம், தாவரவியல் அறிஞர் மாணிக்கம், கூப்பிடு பிள்ளையார் கோயில் கமிட்டி தலைவர் சின்னசாமி, ஊராட்சி செயலர் கண்ணப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது.
    • தமிழக அரசு முன்வந்து சாதா விசைத்தறி டேரிப்க்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்

    மங்கலம் :

    கோவை ,திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சோமனூர் சங்க பொதுக்குழு கூட்டம் சாமளாபுரம் அருகே உள்ள கோம்பக்காட்டு புதூர் -தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. விசைத்தறி சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு சங்கத்தலைவர் சி.பழனிச்சாமி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் பி.கோபாலகிருஷ்ணன், துணைச்செயலாளர் ஈஸ்வரன், சங்க பொருளாளர் பூபதி மற்றும் கிளை நிர்வாகிகள் ,விசைத்தறி உரிமையாளர்கள் உள்பட பலர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    சோமனூர் விசைத்தறி சங்க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- அரசு அறிவித்துள்ள 30 சதவீதம் மின் கட்டண உயர்வு விசைத்தறியாளர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. ஒரு யூனிட்டிற்கு ரூ.1.40 பைசா உயர்வு என்பது ஒவ்வொரு விசைத்தறி யாளருக்கும், 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. எனவே கூலிக்கு நெசவு செய்யும் எங்களால் எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத சூழ்நிலையில் உயர்த்திய மின் கட்டண உயர்வை அரசு சாதா விசைத்தறிகளுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் .

    வருகிற 16-8-2022ந்தேதி காலை 10 மணியளவில் கோவை தனியார் கல்லூரியில் நடைபெறும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்பு கூட்டத்தில் ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் குடும்பத்தோடு கட்டாயம் கலந்து கொண்டு தங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும், அரசும் மின்வாரியமும் ,தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் சாதா விசைத்தறி டேரிப்-க்கு மின் கட்டணத்தை உயர்த்தினால் மின் கட்டண உயர்வை வேறு எந்த வகையிலும் செலுத்த இயலாது. ஆகவே விசைத்தறிகளை நிறுத்தி போராடுவதை தவிர வேறு வழியில்லை. ஆகவே தமிழக அரசு முன்வந்து சாதா விசைத்தறி டேரிப்க்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் எனவும், தமிழக அரசு இலவச வேட்டி,சேலை,சீருடை ரகங்களை விசைத்தறிகளுக்கு கொடுத்து உதவ வேண்டும் எனவும், மேலும் சாதா விசைத்தறிகளுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவருக்கும் அனைத்து விசைத்தறி யாளர்களும் பதிவு அஞ்சல் அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×