search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pothigai express"

    • தென்னக ரெயில்வேயின் கீழ் இயங்கும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலானது தினமும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படுகிறது.
    • இதேபோல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலானது நெல்லை-சென்னை-நெல்லை இடையே தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    தென்னக ெரயில்வேயின் கீழ் இயங்கும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலானது தினமும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை வரையிலும், மறு மார்க்கமாக செங்கோ ட்டையில் இருந்து சென்னை எழும்பூர் வரையிலும் இயக்கப்படுகிறது.

    ஏ.சி. பெட்டிகள் இணைப்பு

    இதேபோல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலானது நெல்லை-சென்னை-நெல்லை இடையே தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த 2 ெரயில்களிலும் வருகிற ஜூன் மாதம் 17-ந்தேதி முதல் ஏசி பெட்டிகளில் மாற்றம் செய்யப்படுகிறது.

    அதாவது முதல் மற்றும் 2-ம் வகுப்புடன் கூடிய ஏ.சி. பெட்டிகள் இந்த 2 ரெயில்களிலும் இணைக்கப்படுகிறது. இதன் காரணமாக தூங்கம் வசதி பெட்டியில் ஒன்று குறைக்கப்படும் என ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-

    தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ெரயில்களும் பெட்டிகள் பகிர்வு முறையில் தூத்துக்குடி பராமரிப்பு பணிமனையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டும் பெட்டிகள் பகிர்வு முறையில் நெல்லையில் பராமரிக்கப் பட்டு வருகின்றன. இதில் முத்து நகர், கன்னியாகுமரி ெரயில்களில் இருந்து முதல்வகுப்புடன் கூடிய 2 அடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்று நீக்கப்பட்டு நெல்லை மற்றும் பொதிகை ெரயில்களுக்கு கொடு க்கப்பட இருக்கின்றன. முத்துநகர் மற்றும் கன்னி யாகுமரி ெரயில் களுக்கு முழுமையான முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டி வழங்கப்பட இருக்கிறது.

    8 தூங்கும் வசதி பெட்டிகள்

    இதில் வருத்தமான செய்தி, தற்போது 9 தூங்கும் வசதி பெட்டிகளுடன் இயங்கி வந்த நெல்லை மற்றும் பொதிகை ெரயில்களில் இருந்து ஒரு பெட்டி நீக்கப்பட்டு இந்த முதல்வகுப்புடன் கூடிய 2 அடுக்கு குளிர்சாதன பெட்டி இணைக்கப்பட இருக்கிறது.

    இனிமேல் பொதிகை மற்றும் நெல்லை ெரயில்களில் 8 பெட்டிகள் தான் குளிர்சாதன வசதி இல்லாத தூங்கும் வசதி பெட்டிகள் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் நாள்தோறும் மாலை 6.20 மணிக்கு செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது.
    • செங்கோட்டை ரெயில் நிலையத்தில் வைத்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் புகைப்படம் அடங்கிய கேக்கை வெட்டி பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 18-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் நாள்தோறும் மாலை 6.20 மணிக்கு செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், கடந்த 2004-ம் வருடம் தொடங்கப்பட்ட இந்த ரெயில் சேவையானது, தென்காசியில் இருந்து சென்னை வரை முதலில் இயக்கப்பட்டு வந்த சூழலில், கடந்த 2008-ம் வருடம் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்டு, அந்த நாள் முதல் செங்கோட்டை யிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டு 17 வருடங்கள் முடிந்து 18-வது ஆண்டு இன்று தொடங்குகிறது. இதனை கொண்டாடும் விதமாக செங்கோட்டை ெரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாகவும், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தி.மு.க. நகர செயலாளர் ரஹீம் உள்ளிட்டோர் சார்பாகவும் பொதிகை எக்ஸ்பிரஸ் ெரயிலுக்கு மாலை அணிவித்து தோர ணங்கள் கட்டப்பட்டன.

    தொடர்ந்து, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் 18-வது ஆண்டை கொண்டாடும் வகையில், செங்கோட்டை ரெயில் நிலையத்தில் வைத்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் புகைப்படம் அடங்கிய கேக்கை வெட்டி பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் 18-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

    பாண்டியன், சோழன், மலைக் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை கொண்ட பெட்டிகளின் (சிலிப்பர்) எண்ணிக்கையை தென்னக ரெயில்வே குறைக்கிறது. #Pandian Express
    சென்னை:

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    நெல்லை எக்ஸ்பிரஸ், பாண்டியன், சோழன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்கின்றன. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. இதில் 864 படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் உள்ளன.

    தற்போது 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனாலும் முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே டிக்கெட் தீர்ந்து விடுகிறது. பஸ்களை விட கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிகள் ரெயிலை விரும்புகிறார்கள்.

    இதற்கிடையே பாண்டியன், சோழன், மலைக் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை கொண்ட பெட்டிகளின் (சிலிப்பர்) எண்ணிக்கையை தென்னக ரெயில்வே குறைக்கிறது. 2-ம் வகுப்பு பெட்டிகளை குறைத்து 3-ம் ஏ.சி. பெட்டிகளை அதிகரிக்க முடிவு செய்து இருக்கிறது.

    இப்போது இயக்கப்படும் ஒரு ரெயில் பெட்டியில் 72 படுக்கை இருக்கைகள் உள்ளன. எக்ஸ்பிரஸ் ரெயிலில் இணைக்கப்படும் 12 பெட்டிகளில் சேர்த்து 864 படுக்கை வசதி இருக்கைகள் பயணிகளுக்கு கிடைக்கும்.

    தற்போது புதிதாக தயாரிக்கப்படும் ஒரு ரெயில் பெட்டியில் 78 இருக்கைகள் உள்ளன. ஆனால் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி பாண்டியன், சோழன், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இணைக்கப்படும் 12 ரெயில் பெட்டிகள் எண்ணிக்கையை 9 ஆக குறைக்கப்படுகிறது. இதனால் படுக்கை வசதி இருக்கை கணிசமாக குறையும்.

    சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள் இயக்கப்படுகின்றன. வருகிற 20-ந்தேதி முதல் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கை 9 ஆக குறைக்கப்படுகிறது. இதனால் சுமார் 162 படுக்கை வசதி இருக்கைகள் குறைகின்றன.

    இந்த மாற்றம் மதுரையில் இருந்து எழும்பூருக்கு புறப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 20-ந்தேதியும், எழும்பூரில் இருந்து செல்லும் ரெயிலில் 23-ந்தேதியும் அமல்படுத்தப்படுகிறது.

    இதே போல் எழும்பூரில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் குறைக்கப்படுகின்றன.


    அதற்கு பதிலாக 3 அடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படுகிறது. இதன் மூலம் 10 முதல் 15 சதவீதம் 2-ம் வகுப்பு படுக்கை வசதி இருக்கைகள் மூன்று அடுக்கு ஏ.சி. இருக்கைகளாக மாற்றப்பட்டுள்ளது என்று பயணிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல மூன்று அடுக்கு ஏ.சி.யில் ஒரு டிக்கெட் விலை ரூ.815 ஆகும். 2-ம் வகுப்பு படுக்கை வசதி இருக்கை கட்டணம் ரூ.315 ஆகும். இந்த டிக்கெட் தக்கலில் 2-ம் வகுப்பு படுக்கை வசதியில் ரூ.415-ஆகவும், ஏ.சி.யில் ரூ.1130 ஆகவும் உள்ளது.

    தற்போது 2-ம் வகுப்பு இருக்கைகளை குறைத்து விட்டு 3-ம் வகுப்பு ஏ.சி. இருக்கைகளை அதிகப்படுத்தி இருப்பது சாதாரண பயணிகளை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

    இதே போல் நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் புதிதாக தயாரிக்கப்படும் 2-ம் வகுப்பு படுக்கை பெட்டிகள் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.
    ×