search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pandian express"

    பாண்டியன், சோழன், மலைக் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை கொண்ட பெட்டிகளின் (சிலிப்பர்) எண்ணிக்கையை தென்னக ரெயில்வே குறைக்கிறது. #Pandian Express
    சென்னை:

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    நெல்லை எக்ஸ்பிரஸ், பாண்டியன், சோழன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்கின்றன. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. இதில் 864 படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் உள்ளன.

    தற்போது 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனாலும் முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே டிக்கெட் தீர்ந்து விடுகிறது. பஸ்களை விட கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிகள் ரெயிலை விரும்புகிறார்கள்.

    இதற்கிடையே பாண்டியன், சோழன், மலைக் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை கொண்ட பெட்டிகளின் (சிலிப்பர்) எண்ணிக்கையை தென்னக ரெயில்வே குறைக்கிறது. 2-ம் வகுப்பு பெட்டிகளை குறைத்து 3-ம் ஏ.சி. பெட்டிகளை அதிகரிக்க முடிவு செய்து இருக்கிறது.

    இப்போது இயக்கப்படும் ஒரு ரெயில் பெட்டியில் 72 படுக்கை இருக்கைகள் உள்ளன. எக்ஸ்பிரஸ் ரெயிலில் இணைக்கப்படும் 12 பெட்டிகளில் சேர்த்து 864 படுக்கை வசதி இருக்கைகள் பயணிகளுக்கு கிடைக்கும்.

    தற்போது புதிதாக தயாரிக்கப்படும் ஒரு ரெயில் பெட்டியில் 78 இருக்கைகள் உள்ளன. ஆனால் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி பாண்டியன், சோழன், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இணைக்கப்படும் 12 ரெயில் பெட்டிகள் எண்ணிக்கையை 9 ஆக குறைக்கப்படுகிறது. இதனால் படுக்கை வசதி இருக்கை கணிசமாக குறையும்.

    சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள் இயக்கப்படுகின்றன. வருகிற 20-ந்தேதி முதல் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கை 9 ஆக குறைக்கப்படுகிறது. இதனால் சுமார் 162 படுக்கை வசதி இருக்கைகள் குறைகின்றன.

    இந்த மாற்றம் மதுரையில் இருந்து எழும்பூருக்கு புறப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 20-ந்தேதியும், எழும்பூரில் இருந்து செல்லும் ரெயிலில் 23-ந்தேதியும் அமல்படுத்தப்படுகிறது.

    இதே போல் எழும்பூரில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் குறைக்கப்படுகின்றன.


    அதற்கு பதிலாக 3 அடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படுகிறது. இதன் மூலம் 10 முதல் 15 சதவீதம் 2-ம் வகுப்பு படுக்கை வசதி இருக்கைகள் மூன்று அடுக்கு ஏ.சி. இருக்கைகளாக மாற்றப்பட்டுள்ளது என்று பயணிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல மூன்று அடுக்கு ஏ.சி.யில் ஒரு டிக்கெட் விலை ரூ.815 ஆகும். 2-ம் வகுப்பு படுக்கை வசதி இருக்கை கட்டணம் ரூ.315 ஆகும். இந்த டிக்கெட் தக்கலில் 2-ம் வகுப்பு படுக்கை வசதியில் ரூ.415-ஆகவும், ஏ.சி.யில் ரூ.1130 ஆகவும் உள்ளது.

    தற்போது 2-ம் வகுப்பு இருக்கைகளை குறைத்து விட்டு 3-ம் வகுப்பு ஏ.சி. இருக்கைகளை அதிகப்படுத்தி இருப்பது சாதாரண பயணிகளை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

    இதே போல் நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் புதிதாக தயாரிக்கப்படும் 2-ம் வகுப்பு படுக்கை பெட்டிகள் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.
    சென்னை எழும்பூர்- மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், எழும்பூர்- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் மற்றும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ஆகியவற்றில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி நீக்கப்பட உள்ளது. #Train

    சென்னை:

    சென்னை எழும்பூர்- மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், எழும்பூர்- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் மற்றும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ஆகியவற்றில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி நீக்கப்பட உள்ளது. அதற்கு பதிலாக 3 அடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது.

    இந்த மாற்றம் மதுரையில் இருந்து எழும்பூருக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரசில் 20-ந்தேதியும், எழும்பூர்- மதுரைக்கு புறப்படும் பாண்டியன் எக்ஸ்பிரசில் 23-ந்தேதியும் அமல்படுத்தப்பட உள்ளது.

    எழும்பூர்- திருச்சிக்கு இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரசில் 21-ந்தேதியும், திருச்சி- எழும்பூருக்கு இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரசில் 23-ந்தேதி பெட்டி மாற்றம் செய்யப்படுகிறது.

    எழும்பூர்- திருச்சிக்கு இயக்கப்படும் மலைக்கோட்டை ரெயிலில் 22-ந் தேதியும், திருச்சி- எழும்பூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரசில் 21-ந்தேதியும் அமல்படுத்தப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

    ×