search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்கள்"

    பாலக்காட்டில் இருந்து வந்த ரெயில் காலை7.15மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    உடுமலை:

    வெளியூர்களுக்கு குடும்பத்துடன் செல்லும் பயணிகள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை பொறுத்தவரை, பாலக்காடு-திருச்செந்தூர், பாலக்காடு-சென்னை, கோவை-மதுரை, திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு, உடுமலை வழியாக மதுரை வரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் உடுமலை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

    தினசரி இயக்கப்பட்டு வரும் இந்த ரெயில்கள் மறு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக நெல்லை வரை வாராந்திர சிறப்பு ரெயிலாக வாரத்தில் ஒருநாள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

    உடுமலை வழியாக இயக்கப்பட்டு வரும் இந்த ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதிலும் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் இந்த ரெயில்களில் பயணிகள் கூட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது. இதில் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, கோவில்பட்டி, நெல்லை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.

    அதன்படி நேற்று முன்தினம் பாலக்காட்டில் இருந்து வந்த ரெயில் காலை 7.15மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு வரும்போதே ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    அதனால், உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஏறிய பயணிகள் பலர் உட்காருவதற்கு இடம் கிடைக்காமல் நின்று கொண்டு சென்றனர். அவர்கள் பழனி உள்ளிட்ட அடுத்தடுத்த ரெயில் நிலையங்களில் பயணிகள் இறங்கும் போது தங்களுக்கு உட்காருவதற்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றனர். இந்த நிலையில்திருச்செந்தூர் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்கவேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர். 

    ×