search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Melmaruvathur railway station"

    ஆடிப்பூர விழாவையொட்டி மேல்மருவத்தூரில் ரெயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    ஆடிப்பூர விழாவையொட்டி மேல்மருவத்தூரில் ரெயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மதுரை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆடிப்பூர விழா வருகிற 13-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தாம்பரம்- நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 1.24 மணிக்கும், எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் 3.04 மணிக்கும், எழும்பூர்- செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 10.29 மணிக்கும், எழும்பூர்- மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 11.04 மணிக்கும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

    இதேபோல் மதுரை- எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் அதிகாலை 2.59 மணிக்கும், செங்கோட்டை - எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் அதிகாலை 3.59 மணிக்கும், மேல்மருவத்தூரில் 10-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை நின்று செல்லும்.

    மதுரை-எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை இரவு 12.49 மணிக்கு மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×