search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Patanjali Ayurved"

    • 2022 நிதியாண்டில் ரோல்டா, ரூ.7100 கோடி கடன்களை கட்ட தவறியது
    • அஷ்தன் பிராபர்டீஸ், ரோல்டாவிற்கு அதிக விலை தர முன்வந்தது

    1989ல் கமல் சிங் என்பவரால் தொடங்கப்பட்ட மென்பொருள் சேவை நிறுவனம், ரோல்டா (Rolta).

    மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள ரோல்டா, ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, மின்சாரம், நிதி உள்ளிட்ட பல துறைகளில் மென்பொருள் சேவைகளை வழங்கி வந்தது.

    2016ல் முதல் முறையாக அன்னிய செலாவணி கடன்களை கட்ட தவறியது.

    2022 நிதியாண்டுக்கு ரோல்டா ரூ.1000 கோடி நஷ்டத்தை பதிவு செய்தது.

    இந்திய யூனியன் வங்கிக்கு ரோல்டா, ரூ.7100 கோடி கடன்பாக்கி வைத்துள்ளது.

    2023 ஜனவரி மாதம் ரோல்டா, கடனை திருப்ப செலுத்த இயலாத நிறுவனம் என அறிவிக்கப்பட்டு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    கடனை சரி கட்ட, தீர்ப்பாயம், ரோல்டாவை விற்பனை செய்ய முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டது.

    ரோல்டாவை வாங்க முன்வந்தவர்களில் மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த அஷ்தன் பிராபர்டீஸ் (Ashdan Properties) எனும் நிறுவனம்தான் அதிக தொகையை தர முன்வந்தது.

    இந்நிலையில், 2006ல் ஹரித்வாரை மையமாக கொண்டு பிரபல யோகா வல்லுனர், பாபா ராம்தேவ் உருவாக்கி தற்போது ரூ.9 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி வரும் பதஞ்சலி ஆயுர்வேத் (Patanjali Ayurved) நிறுவனம், ரோல்டாவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

    தீர்ப்பாயத்தில், ரோல்டாவை வாங்க ரூ.830 கோடி வரை தர பதஞ்சலி ஆயுர்வேத் முனைந்துள்ளது.

    மும்பையில் ரோல்டாவிற்கு உள்ள கட்டிடங்களை வினியோகத்திற்கு பயன்படுத்தவோ அல்லது மென்பொருள் துறையில் நுழையவோ பதஞ்சலி திட்டமிடலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
    • தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது.

    இதற்கிடையே, பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில், அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    நீதிபதிகள் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, பதஞ்சலி நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் இதுபோன்ற தவறான விளம்பரங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அத்தகைய மீறலை சுப்ரீம் கோர்ட் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும்.

    தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் ஒவ்வொரு தயாரிப்புக்கும் பொருந்தும் என எச்சரிக்கை விடுத்துள்ள சுப்ரீம் கோர்ட், எதிர்காலத்தில் பத்திரிகைகளில் அறிக்கைகள் வெளியிடுவதை பதஞ்சலி நிறுவனம் உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

    ×