search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parlaiment"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய இணை மந்திரி அஷ்வினி குமார் சவுபே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
    • விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிடுவார்கள்.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் பருவமழையால் ஏற்பட்ட சரக்கு போக்குவரத்து பாதிப்பு, விளைச்சல் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. எனினும் இது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைப்பதால், பெரிய அளவில் பலன் கொடுக்கவில்லை.

    இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை மந்திரி அஷ்வினி குமார் சவுபே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறிருப்பதாவது:-

    மகாராஷ்டிராவின் நாசிக், நரியங்கான் மற்றும் அவுரங்காபாத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்கும்போது தக்காளி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது தக்காளி விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிடுவார்கள். எனவே வரும் மாதங்களில் தக்காளி வரத்து அதிகரித்து விலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பருவகால விலை ஏற்ற இறக்கம், கோலாரில் வெள்ளை ஈ நோய் தாக்குதல், நாட்டின் வடக்குப் பகுதியில் திடீர் பருவ மழையின் தாக்கம் ஆகியவை அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தக்காளி பயிர்களை மோசமாகப் பாதித்துள்ளது. மழையால் சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×