search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchami land"

    • முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் அஞ்சுகம் பதிப்பகத்திற்கு சொந்தமானது என தமிழக அரசு தெரிவித்தது.
    • முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

    சென்னை:

    தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான "முரசொலி"யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1,825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பா.ஜ.க. மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இந்தப் புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக்கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனுதாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரமன் லால் ஆஜராகி, ஜெர்மன் நிறுவனத்திடம் இருந்த நிலத்தை அதன் கலைப்பிற்கு பிறகு பார்வதி மாதவன் நாயர் என்பவருக்கு விற்றதாகவும், அவரிடமிருந்து அஞ்சுகம் பதிப்பகம் வாங்கியதாகக் கூறி ஆவணங்களை தாக்கல் செய்தார். எனவே முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் அஞ்சுகம் பதிப்பகத்திற்குச் சொந்தமானது என குறிப்பிட்டார். அதன்படி இந்த நிலம் பஞ்சமி நிலம் இல்லை எனவும் விளக்கம் அளித்தார்.

    முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, 2019-ல் அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும், ஆனால் இவ்வளவு காலமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் இழுத்தடித்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தைக் கிடப்பிலேயே வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுதவற்கான செயலாகவே தெரிவதாகவும், அரசு நிதியில் செயல்படும் ஆணையத்தை தங்களுக்கு ஆதரவாக தவறாகப் பயன்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மணிப்பூர் மக்கள் பாதிக்கப்பட்டபோது என்ன செய்தது தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் எனவும் கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

    ×