search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthalamman temple"

    • 1001 தீப்பந்தங்களுடன் முத்தாலம்மன் ஊர்வலம் நடந்தது.
    • களி மண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலையை கிராமத்தின் எல்லையில் வைத்து உடைத்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நாராயணபுரம் மற்றும் கல்லுபட்டி கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக இருந்து வரும் முத்தாலம்மனுக்கு பாரம்ப ரிய முறைப்படி முத்தா லம்மன் சிலை எடுப்பு திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

    முன்னதாக திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுடன் தொடங்கி யது. இக் கிராமத்து மக்கள் பிடிமண் எடுத்து ஊர்வலமாக சென்று, சிலை செய்யும் இடத்தில் அம்மன் சிலை செய்வதற்கு பிடிமண்ணை கொ டுத்தனர். பின்னர் சிலை செய்யபட்டு நேற்று முன்தினம் இரவு முத்தா லம்மன் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முத்தா லம்மன் சிலை எடுப்பு திருவிழாவில், 2கிராமத்து இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் 1001 தீ பந்தங்கள் ஏந்தி, முத்தா லம்மன் சிலை செய்யப்பட்ட கண்ணார்பட்டியில் இருந்து அம்மன் கண்ணை கட்டி ஊர்வலமாக, கமுதி பஸ் நிலையம் வழியாக மேள தாளம் வான வேடிக்கை யுடன், நாராயணபுரம் கொண்டு சென்றனர்.

    பின்னர் மாலை களி மண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலையை கிராமத்தின் எல்லையில் வைத்து உடைத்தனர்.

    நாகரீக காலத்தில் மின் சீரியல் விளக்குகள், அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகள் இருந்தாலும் பாரம்பரியம் மாறாமல் நாராயணபுரம், கல்லுபட்டி கிராமமக்கள் இன்னும் பழைய பழக்கத்தை மாற்றாமல் முத்தாலம்மன் திருவிழாவை தீ பந்தம், மேளம், வானவேடிக்கை களோடு கொண்டாடி வருகின்றனர்.

    • முத்தாலம்மன், அய்யனா ரப்பன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • பரிவாரங்களுடன் முத்தாலம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சாமி வீதியுலா நடக்கிறது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கத்தை அடுத்த தமிழக பகுதியான கோண்டூர் கிராமத்தில் உள்ள செல்வவிநாயகர், பால முருகன், முத்தாலம்மன், அய்யனா ரப்பன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 2-ம் கால யாக பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம் 9 மணிக்கு கடம் புறப்பாடாகி 9.30 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் 9.50 மணிக்கு செல்வ விநாயகர், பரிவாரங்களுடன் முத்தாலம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சாமி வீதியுலா நடக்கிறது.

    • குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டி கொடியேற்றுவிழா நடைபெற்றது .
    • அம்ம னுக்கு அபிஷேகம் செய்து மாலை 4 மணிக்கு ஊஞ்சல் செடல் உற்சவம் நடைபெற உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் நடுக்கு ப்பம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் ஆடி செடல் உற்சவம திருவிழாவை முன்னிட்டு கடந்த 13-ந் தேதி மாலை 6மணிக்கு குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டி கொடியேற்றுவிழா நடைபெற்றது . நேற்று ( வியாழக்கிழமை) அம்மனு க்கு சாகை வார்த்தல் மற்றும் அன்ன தா னம், இரவு தெருக்கூத்து நடைபெற்றது.

    இன்று (வெள்ளிகிழமை ) காலை 9 மணி அளவில் நடுக்குப்பம் குளக்கரையில் இருந்து பால் குடம் எடுத்துச் சென்று அம்ம னுக்கு அபிஷேகம் செய்து மாலை 4 மணிக்கு ஊஞ்சல் செடல் உற்சவம் நடைபெற உள்ளது. நாளை ( சனிக்கிழமை) இரவு 8 மணி யளவில் முத்தாலம்மனுக்கு தலை குளம் பம்பை சிவகுமார் தலைமையில் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    • 27-ம் ஆண்டு திருவிழா கடந்த 16-ந் தேதி காப்புக் கட்டி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
    • சிறப்பு நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம் மன் கோவில் 27-ம் ஆண்டு திருவிழா கடந்த 16-ந் தேதி காப்புக் கட்டி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உபயதாரர் நிகழ்ச்சி செய்து வந்தனர். இதில் அம்மன் வீதி உலா, மேடை நாடகம் நடந்து வந்தது. ேமலும் முத்தாலம்ம னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தானம் ஆகியன கொண்டு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கோவில் அருகில் வான வேடிக்கை மேள தாளங்களுடன் நடந்தது. பின்னர் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதனை ஏராள மான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடு ஆலப்பாக்கம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்த னர்.

    ×