search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mullai Periyaru Dam"

    • முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 127.70 அடியாக உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 67.32 அடியாக உள்ளது.

    கூடலூர்,

    பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை, முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனவே மழை வரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பொதுமக்களை ஏமாற்றி சென்றது.

    நீர்வரத்து குறைந்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 127.70 அடியாக உள்ளது. 184 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1333 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 1267 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 67.32 அடியாக உள்ளது. 804 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1249 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனம் மற்றும் குடிநீருக்காக 1199 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.57 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. 

    முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தார்மீகம் இல்லை என்றார் அமைச்சர் துரைமுருகன்.
    தேனி:

    கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கடந்த  29-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்தார். சொன்னபடியே, மொத்தமுள்ள 13 மதகுகளில், 8 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இதற்கிடையே, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, சக்ரபாணி உள்ளிட்டோர் உடன் சென்றனர். அணையைப் பார்வையிட்டபின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    முல்லைப் பெரியாறு அணை

    தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை ஓ.பி.எஸ் ஒருநாள் கூட பார்வையிடவில்லை. இப்போது போராட்டம் நடத்துகிறார்களா?

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை.

    முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தார்மீகம் இல்லை. 80 வயதிலும் நான் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன்.

    30 ஆண்டு சராசரி கணக்கீட்டு படி நவம்பர் 30-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை நீரை தேக்கலாம் என தெரிவித்தார்.

    முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறந்துவிட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தமிழக அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வுசெய்கிறார்.
    சென்னை:

    கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கடந்த  29-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்தார். சொன்னபடியே, மொத்தமுள்ள 13 மதகுகளில், 8 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இதற்கிடையே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனத் தேவையையும், குடிதண்ணீர் தேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசின் நிலைப்பாட்டினையும், மாநில மக்களின் உரிமைக்காகப் போராடுவதில் தி.மு.க. அரசு காட்டும் ஏனோதானோ மனநிலையையும் கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் வரும் 9-ம் தேதி அந்த 5 மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

    அமைச்சர் துரை முருகன்

    ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் இயக்கம் குறித்துத் தவறான செய்தி தெரிவித்திருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதுபோலத் தோன்றுகிறது. தமிழக அரசுதான் முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருகிறது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தார்.

    இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர்.தியாகராஜன், ஐ.பெரியசாமி, மூர்த்தி, சக்ரபாணி உள்ளிட்டோர் முல்லைப் பெரியாறு அணையை இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
    ×