search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகை"

    • ராமநாதபுரம் அருகே உள்ள மல்லல் கண்மாய்க்கு வைகை தண்ணீர் வேண்டும்.
    • அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் மழை சரிவர பெய்யாததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய், ஊருணிகளும் தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளித்து வருகின்றன. ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் மல்லல் கிராமம் உள்ளது.

    இந்த கிராமம் ராமநாத புரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வருகின்றது. இந்த மல்லல் கிராமத்தில் உள்ள கண்மாயும் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றது. கண்மாய்க்கு அருகில் உள்ள திருஉத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, களக்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்க்கு வைகை தண்ணீர் வருகிறது.

    ஆனால் மல்லல் கண்மாய்க்கு வைகை தண்ணீர் வராததால் கண்மாய் தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டு காட்சி யளிக்கிறது. அருகில் உள்ள திருஉத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, உள்ளிட்ட பல கிராமங்களில் வைகை தண்ணீரை பயன்படுத்தி அந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் மிளகாய் மற்றும் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    ஆனால் மல்லல் கிராமத்தில் கண்மாயில் தண்ணீர் இல்லாமல் வறண்டதால் நெல் விவசா யம், மிளகாய், பருத்தி விவசாயமும் அடியோடு பாதிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக வைகை தண்ணீர் வராததால் இந்த கிராம மக்கள் மழையை மட்டும் நம்பி இருக்கிறார்கள். மழை பெய்து கண்மாய் நிரம்பினால் தான் விவசாய பணியை தொடங்கி வந்தனர்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால் கண்மாய் வறண்டு விவசாய பணி மேற்கொள்ள முடியாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கண்மாயில் தண்ணீர் இல்லாததால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் அலைந்து வருகின்றன. எனவே இந்த மல்லல் கிராமத்திற்கு வைகை தண்ணீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிர மிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். தண்ணீர் வரத்து வரும் கால்வாயை தூர்வார வேண்டும்.

    மல்லல் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு வைகை தண்ணீர் கொண்டு வருவ தற்கு தேவையான நடவ டிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட கலெக்டரும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 127.70 அடியாக உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 67.32 அடியாக உள்ளது.

    கூடலூர்,

    பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை, முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனவே மழை வரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பொதுமக்களை ஏமாற்றி சென்றது.

    நீர்வரத்து குறைந்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 127.70 அடியாக உள்ளது. 184 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1333 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 1267 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 67.32 அடியாக உள்ளது. 804 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1249 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனம் மற்றும் குடிநீருக்காக 1199 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.57 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. 

    • 13 ஊருணிகளுக்கு வைகை தண்ணீரை கொண்டு சேர்க்க திட்டம் நடந்து வருகிறது.
    • இந்த தண்ணீர் வைகை ஆற்றில் ஓடி வந்து ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைந்து உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து நகரில் உள்ள ஊருணிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க வைகை தண்ணீர் திறந்து விடப்பட்டது. உபரிநீர் வைகை அணை நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போதைய நிலையில் 618 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 328 மில்லியன் கனஅடி தண்ணீர் சேர்ந்து உள்ளது.

    இந்த தண்ணீர் வைகை ஆற்றில் ஓடி வந்து ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைந்து உள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளதால் நகரின் நிலத்தடி நீர் ஆதாரத்தை உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக பெரிய கண்மாயில் தேக்கப்பட்டுள்ள வைகை தண்ணீரை நகரின் தேவைக்காக ஊருணிகளில் நிரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    நேற்று காலை ராமநாதபுரம் பெரிய கண்மாயின் 6-வது மடை அமைந்துள்ள காவனூர் முதுனாள் பகுதியில் இருந்து ஊருணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ராமநாதபுரம் கோட்டாட்சியர் சேக்மன்சூர், நகரசபை தலைவர் கார்மேகம் ஆகியோர் தண்ணீரை திறந்து விட்டனர்.

    இதில் தாசில்தார் முருகேசன், நகராட்சி துணைத்தலைவர் பிரவீன்தங்கம் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். விநாடிக்கு 20 கனஅடி திறந்து விடப்பட்டுள்ள இந்த தண்ணீர் நொச்சிவயல், மானாங்குண்டு ஊருணிகளுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக பெரிய கண்மாயின் 5-வது மடை பகுதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. இந்த தண்ணீர் முகவை ஊருணி, நீலகண்டி ஊருணி, சிதம்பரம் பிள்ளை ஊருணி, லட்சுமிபுரம் ஊருணிகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இது தவிர, பம்பிங் முறையில் மோட்டார் வைத்து சாயக்கார ஊருணி, செம்மண்குண்டு ஊருணி, கிடாவெட்டி ஊருணிகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இவ்வாறு நகரில் உள்ள ஏறத்தாழ 13 ஊருணிகளுக்கு வைகை தண்ணீரை கொண்டு சேர்த்து நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க திட்டமிட்டு உள்ளதாக ராமநாதபுரம் நகரசபைத் தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

    • வைகை அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி.‌உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • தென்மாவட்டத்தில் முக்கிய அணையாக வைகை அணை திகழ்கிறது.

    மதுரை

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை யை தூர்வாரியது போல் வைகை அணையை தூர்வார வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த 1934-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகள் மிக பழமையான அணையான மேட்டூர் அணையை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தூர்வாரினார். இதன் மூலம் சிறு குறு விவசாயிகளின் நிலங்கள் உயிர்ச்சத்து பெறும் வண்ணம் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு கட்டணம் இல்லாமல் வழங்கினார்

    அதேபோல் பொது மக்களின் சொந்த பயன் பாட்டிற்காகவும், மண்பானை தொழிலாள ர்களு க்கும் வண்டல் மண், சவுடுமண் ,சரளைமண் ஆகியவற்றை கட்டணம் இல்லாமல் வழங்கினார்.

    தென்மாவட்டத்தில் முக்கிய அணையாக வைகை அணை திகழ்கிறது. இதில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் ஒரு போக பாசன பரப்பு, 45,000 ஏக்கர் இருபோக பாசன பரப்பு,ஒரு லட்சத்து 30ஆயிரம் ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசனமாக மதுரை திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பயன்பற்று வருகின்றனர்.மேலும் குடிநீர் ேதவை யைப் பூர்த்தி செய்து வருகிறது.

    ஆகவே மேட்டூர் அணையை தூர்வாரி அதன் மூலம் கிடைத்த வண்டல் மண்ணை சிறு குறு விவசாயிகளுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தற்போது வைகை அணையை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் வண்டல் மண்ணை வருவாய் ஈட்ட ஒருபுறம் இருந்தாலும் அதில் எழை எளிய விவசாயிகள் பயன் பெறும் வகையில் வண்டல் மண்ணை இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×