search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohammad Shami"

    • இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • அர்ஜூனா விருது வென்ற வைஷாலி செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.

    புதுடெல்லி:

    விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2-வது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது.

    சமீபத்தில் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்சில் ஆடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சிறந்த பந்துவீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற விருதை சமி தட்டிச் சென்றார்.

    இதற்கிடையே, விளையாட்டு அமைச்சகத்திடம் பிசிசிஐ சிறப்பு கோரிக்கையாக முகமது ஷமியின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்திருந்தது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது டேபிள் டென்னிஸ் வீரர்களான சிராக் சந்திரசேகர் ஷெட்டி, சாத்விக் ஜெயராஜ் ஜோடிக்கு அளிக்கப்படுகிறது.


    இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி உள்பட 26 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹானை போலீசார் கைது செய்தனர். #MohammadShami #HasinJahan
    அம்ரோஹா:

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவருடைய மனைவி ஹசின் ஜஹான் கடந்த ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், முகமது ஷமியும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் போலீசில் புகார் செய்தார். முகமது ஷமி தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. முகமது ஷமி மீது அவரது மனைவி தெரிவித்த சூதாட்ட புகாரில் உண்மை இல்லை என்பது தெரியவந்ததால் அவர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். முகமது ஷமியின் குடும்பத்தினர் உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவை அடுத்துள்ள அலிபுர் கிராமத்தில் வசித்து வருகிறார்கள். அந்த வீட்டுக்கு நேற்று முன்தினம் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் சென்றார். முகமது ஷமியின் குடும்பத்தினர் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து முகமது ஷமியின் தாயார் போலீசில் புகார் செய்தார். இதனை அடுத்து ஹசின் ஜஹானை கைது செய்த போலீசார் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவரை கோர்ட்டு ஜாமீனில் விடுவித்தது. அதன் பிறகு ஹசின் ஜஹான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘முகமது ஷமி எனது கணவர். அந்த வீட்டுக்குள் நுழைய எனக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் நான் எப்பொழுது அந்த வீட்டில் தங்க முயற்சித்தாலும், எனது மாமனாரும், மாமியாரும், என்னையும் என் குழந்தையையும் வெளியே தள்ள முயற்சிக்கின்றனர்’ என்று தெரிவித்தார். 
    இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மனதளவிலும், உடலளவிலும் ஃபிட் ஆக இருக்க வேண்டும் என பிசிசிஐ விரும்புகிறது.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. டெஸ்ட் போட்டியில் பழைய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் வல்லவர். கடந்த சில மாதங்களாக அவர் குடும்ப பிரச்சினையில் சிக்கி தவித்தார். என்றாலும் ஐபிஎல் தொடரில் ஒருசில போட்டிகளில் விளையாடினார்.

    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் வருகிற 14-ந்தேதி (நாளைமறுநாள்) தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பிடித்திருந்தார். இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும்.

    முகமது ஷமி பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற டெஸ்டில் தோல்வியடைந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் முகமது ஷமி இடம்பெறவில்லை. அவருக்குப் பதில் நவ்தீப் சைனி இடம்பிடித்துள்ளார்.

    இந்தியா ஆகஸ்ட் 1-ந்தேதியில் இருந்து முக்கியமான கருதப்படும் இங்கிலாந்து தொடரில் விளையாட இருக்கிறார். இதில் முகமது ஷமியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கும். இதனால் முகமது ஷமி உடலளவிலும், மனதளவிலும் ஃபிட் ஆக வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி விரும்புகிறது.



    இதுகுறித்து அணி நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் கூறுகையில் ‘‘முகமது ஷமியின் கிரிக்கெட் திறமையில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். மனதளவிலும், உடலளவிலும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அணி விரும்புகிறது. இங்கிலாந்து தொடரில் இந்தியாவின் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்.

    அணி நிர்வாகம் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் கிரிக்கெட்டில் இன்னும் ஆர்வமாக ஈடுபட வேண்டியது தேவை. ஒருமுறை பிட்னஸ் லெவலை அவர் அடைந்து விட்டால், அணிக்கு திரும்பிவிட முடியும்’’ என்றார்.
    ×