search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mass shooting"

    • கடைகளுக்கு சென்று மக்கள் எளிதாக துப்பாக்கிகளை விலைக்கு வாங்கலாம்
    • 14 பேரை கொன்ற அந்த மாணவனிடம் 7 துப்பாக்கிகள் இருந்தது தெரிய வந்தது

    மத்திய ஐரோப்பாவில் உள்ள 1.25 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு, செக் குடியரசு (Czech Republic). இதன் தலைநகரம் பிரேக் (Prague).

    செக் நாட்டில், பொதுமக்கள் துப்பாக்கிகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று எந்த கட்டுப்பாடும் இன்றி அதனை வாங்குவது மிக எளிது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னை காத்து கொள்ள துப்பாக்கி வைத்திருப்பதை அடிப்படை உரிமையாக அந்நாட்டு அரசியல் சட்டம் அனுமதிக்கிறது.

    கடந்த டிசம்பர் மாதம், செக் குடியரசின் பிரபலமான சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு 24 வயது பட்டதாரி மாணவன், திடீரென அங்கு இருந்தவர்களை நோக்கி தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.

    மாணவன் சுட்டதில், சக மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

    பிறகு, அந்த மாணவன் வேறு ஒரு ஏஆர்-10 ரக துப்பாக்கியை எடுத்து பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு வாசலில் அங்கும் இங்கும் நடந்தவாறு பிறரை மிரட்டினான்.

    கொலை வெறியுடன் சுற்றிய மாணவனிடமிருந்து தப்பிக்க பல மாணவர்கள் பல்கலைக்கழக் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஜன்னல்களுக்கு கீழே ஒளிந்து கொண்டனர்.


    காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர். அவனை பிடிக்க சிலர் முயலும் முன்பாக வேறு ஒரு சிறு துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தான்.

    இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.


    விசாரணையில், மன அழுத்தம் காரணமாக அவன் இவ்வாறு செய்ததாகவும், அவனிடம் 7 துப்பாக்கிகள் இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து, செக் குடியரசின் 281 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் அவசர அவசரமாக கூடியது.

    சம்பவம் நடந்து சுமார் 1 மாதம் கடந்த நிலையில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் ஒரு சட்ட திருத்தத்திற்கு கீழ் சபை முன்மொழிந்துள்ளது. மேல்சபையான "செனட்" ஒப்புதல் அளித்து, ஜனாதிபதி கையெழுத்திட்டால் இது சட்டமாகி விடும்.

    2026ல் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

    "உலகின் அமைதியான நாடுகள்" பட்டியலில் ஐரோப்பிய நாடுகளில் செக் குடியரசு, 8-வது நாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்களுக்கு மேலும் அச்சுறுத்தல் இல்லை என அன்னாபோலிஸ் போலீசார் தெரிவித்தனர்.
    • சந்தேகத்திற்குரிய ஒரு நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

    அன்னாபோலிஸ்:

    அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்திலுள்ள, அன்னபோலிஸ் பிராந்தியத்தில் உள்ள ஒரு இல்லத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர் என்றும் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்து.

    அமெரிக்காவின் பிரபலமான மற்றும் முக்கியமான கேபிட்டல் ஹில் பகுதியிலிருந்து அன்னாபோலிஸ் 30 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

    அன்னபோலிஸ் காவல்துறைத் தலைவர் எட் ஜாக்சன் கூறுகையில், மாநிலத்தின் தலைநகரான பேடிங்டன் பிளேஸ் பகுதியின் 1000வது பிளாக்கில், துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும், இது தொடர்பாக ஒரு நபர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

    குறைந்தபட்சம் ஒருவர் இறந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், குறைந்தது மூன்று பேர் இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து தற்பொழுது எதுவும் தெரியவில்லை என்றும், பலத்த காயமடைந்த ஒருவர் தலைக்காய சிகிச்சை மையத்திற்கு விரைந்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

    இருப்பினும் அன்னாபோலிஸ் போலீசார் கூறும்போது, 'பொதுமக்களுக்கு மேலும் அச்சுறுத்தல் இல்லை' என சம்பவ இடத்திலும், இணையத்தின் வாயிலாகவும் தெரிவித்தனர்.

    துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் பல போலீஸ் கார்கள் தென்பட்டன. இந்த இடம் நகரின் மையத்திற்கு தெற்கே, நீர்நிலைக்கு அருகே உள்ளது.

    'சமூகத்திற்கு எனது செய்தி இதுதான். இது ஒரு தற்செயலான வன்முறைச் செயல் அல்ல' என காவல்துறை தலைமை அதிகாரி ஜாக்சன், சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

    மேலும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகத்திற்குரிய ஒரு நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், சம்பவ இடத்தில் இருந்து ஒரு ஆயுதம் கைப்பற்றப்பட்டதாகவும், காவல்துறை தலைவர் கூறியிருக்கிறார்.

    துப்பாக்கிச் சூடு குறித்து முகநூலில் கருத்து பதிவேற்றம் செய்திருக்கும் மாநில செனட்டர் சாரா எல்ஃப்ரெத், இந்த சம்பவத்தை "வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம்" என குறிப்பிட்டுள்ளார்.

    இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் ஒரு பட்டமளிப்பு விழா நடந்ததாகவும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இதனுடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.

    ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள் உள்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #MassShooting
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது ஆஸ்மிங்டன் நகரம். இங்குள்ள ஒரு வீட்டின் வெளியே இரண்டு துப்பாக்கிகள் கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு 7 பேரின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர். அதில் நான்கு குழந்தைகளும் அடக்கம்.



    தொடர்ந்து 7 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர்கள் 7 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

    அவர்கள் என்ன காரணத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 22 ஆண்டுகளில் நடைபெற்ற மிக பெரிய துப்பாக்கி சூடு சம்பவம் இது என போலீசார் தெரிவித்துள்ளனர். 

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது ஆஸ்திரேலியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #MassShooting
    ×