search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் உயிரிழப்பு
    X

    அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் உயிரிழப்பு

    • பொதுமக்களுக்கு மேலும் அச்சுறுத்தல் இல்லை என அன்னாபோலிஸ் போலீசார் தெரிவித்தனர்.
    • சந்தேகத்திற்குரிய ஒரு நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

    அன்னாபோலிஸ்:

    அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்திலுள்ள, அன்னபோலிஸ் பிராந்தியத்தில் உள்ள ஒரு இல்லத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர் என்றும் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்து.

    அமெரிக்காவின் பிரபலமான மற்றும் முக்கியமான கேபிட்டல் ஹில் பகுதியிலிருந்து அன்னாபோலிஸ் 30 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

    அன்னபோலிஸ் காவல்துறைத் தலைவர் எட் ஜாக்சன் கூறுகையில், மாநிலத்தின் தலைநகரான பேடிங்டன் பிளேஸ் பகுதியின் 1000வது பிளாக்கில், துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும், இது தொடர்பாக ஒரு நபர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

    குறைந்தபட்சம் ஒருவர் இறந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், குறைந்தது மூன்று பேர் இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து தற்பொழுது எதுவும் தெரியவில்லை என்றும், பலத்த காயமடைந்த ஒருவர் தலைக்காய சிகிச்சை மையத்திற்கு விரைந்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

    இருப்பினும் அன்னாபோலிஸ் போலீசார் கூறும்போது, 'பொதுமக்களுக்கு மேலும் அச்சுறுத்தல் இல்லை' என சம்பவ இடத்திலும், இணையத்தின் வாயிலாகவும் தெரிவித்தனர்.

    துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் பல போலீஸ் கார்கள் தென்பட்டன. இந்த இடம் நகரின் மையத்திற்கு தெற்கே, நீர்நிலைக்கு அருகே உள்ளது.

    'சமூகத்திற்கு எனது செய்தி இதுதான். இது ஒரு தற்செயலான வன்முறைச் செயல் அல்ல' என காவல்துறை தலைமை அதிகாரி ஜாக்சன், சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

    மேலும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகத்திற்குரிய ஒரு நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், சம்பவ இடத்தில் இருந்து ஒரு ஆயுதம் கைப்பற்றப்பட்டதாகவும், காவல்துறை தலைவர் கூறியிருக்கிறார்.

    துப்பாக்கிச் சூடு குறித்து முகநூலில் கருத்து பதிவேற்றம் செய்திருக்கும் மாநில செனட்டர் சாரா எல்ஃப்ரெத், இந்த சம்பவத்தை "வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம்" என குறிப்பிட்டுள்ளார்.

    இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் ஒரு பட்டமளிப்பு விழா நடந்ததாகவும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இதனுடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.

    Next Story
    ×