search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MIT College"

    • புதுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில் நுட்பப் கல்லூரியின் டீன் டாக்டர் சிவசத்யா தொடக்க உரையாற்றினார்.
    • புதுச்சேரி மாநில மையத்தின் கவுரவ செயலாளர் டாக்டர் கணேசன் என்ற சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

     புதுச்சேரி:

    புதுவை கலிதீர் தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட்ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி), தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் (இந்தியா), புதுச்சேரி மாநில மையத்துடன் இணைந்து, கணினி அறிவியல் பொறியியல் பிரிவு வாரியம் கீழ் "இயந்திர கற்றல் கருத்துக்கள் மற்றும்பயன்பாடுகள்", என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடத்தியது.

    பயிலரங்கில் தலைமை விருந்தினராக புதுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில் நுட்பப் கல்லூரியின் டீன் டாக்டர் சிவசத்யா தொடக்க உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் மற்றும்பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண், தலைமையுரை ஆற்றினார்.

    புதுச்சேரி மாநில மையத்தின் தலைவர் திருஞானம் வரவேற்பு ரையாற்றினார்.

    எம்.ஐ.டி. கல்லூரி இயந்திரவியல் துறை தலைவரும் புதுச்சேரி மாநில மையத்தின் கவுன்சில் உறுப்பினருமான ராஜாராம் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சிவக்குமார் பயிலரங்கம் பற்றிய அறிமுக உரையாற்றினார்.

    முடிவில் புதுச்சேரி மாநில மையத்தின் கவுரவ செயலாளர் டாக்டர் கணேசன் என்ற சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • கருத்தரங்கத்தை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்து வரவேற்புரை ஆற்றினார்.
    • 10 நிபுணர்கள் மற்றும் 120 விமர்சகர்களின் மறு ஆய்வு பணி மற்றும் இரட்டை தர மதிப்பாய்வு மூலம் 194 ஆய்வுக்கட்டுரை கள் விளக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி)யில் அனைத்து பொறியியல் துறை சார்பில் ஐ.இ.இ.இ. ஐ.சி.ஸ்கேன் 2023" சிஸ்டம்ஸ், கம்ப்யூ டேஷன், ஆட்டோமேஷன் மற்றும் நெட்வொர்க்கிங் என்ற 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதன் தொடக்க விழா வில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளா ளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர்.

    சென்னை கிரெசென்ட் பல்கலைக்கழக ஆலோசகர் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான முருகேசன், தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். ஐ.இ.இ.இ. சென்னை பிரிவு தலை வரும் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வருமான மூத்த பேராசிரியர் பொற்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கருத்தரங்கத்தை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்து வரவேற்புரை ஆற்றினார்.

    முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், கல்லூரி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை தலைவர் வள்ளி, கருத்தரங்க செயல் பாடுகள் பற்றி விளக்கவுரை ஆற்றினார்.

    இந்த 2 நாள் கருத்தரங்கில், சர்வதேச அளவில் ஆறு நாடுகள் மற்றும் இந்தியாவி லிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 602 ஆய்வுக் கட்டுரைகளில், 50-க்கும் மேற்பட்ட சர்வதேச தர மதிப்பாய்வு நிபுணர்கள், 10 நிபுணர்கள் மற்றும் 120 விமர்சகர்களின் மறு ஆய்வு பணி மற்றும் இரட்டை தர மதிப்பாய்வு மூலம் 194 ஆய்வுக்கட்டுரை கள் விளக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

    • மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி னார்.
    • புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களி டையே உரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி (எம்.ஐ.டி) இயந்திரவியல் துறை, இந்திய பொறியாளர் அமைப்பு மாணவர் பிரிவு சார்பில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங் கம் நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி, பொரு ளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார். இயந்திர வியல் துறை தலைவர் ராஜாராம் வரவேற்றார். புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களி டையே உரையாற்றினார்.

    கருத்தரங்கில் அனைத்து துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். இயந்திர வியல் துறை உதவி பேரா சிரியர் இளஞ்செழியன் நன்றி கூறினார். கருத்த ரங்கிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சுமித்ரா, சிவராமகிருஷ் ணன் ஆகியோர் செய்தி ருந்தனர்.

    • மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவரும் நிர்வாக இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.
    • ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, கலிதீர்த்தா ள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ் டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில் சென்னை சதர்லேண்ட் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவரும் நிர்வாக இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.

    கல்லூரி முதல்வர் மலர்க் கண் முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் அந்நிறுவனத்தின் மனித தவளத்துறை மேலாளர் அக்ஷயா கலந்து கொண்டு நிறுவனத்தின் விவரங்கள் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவ ரங்களையும் விளக்கி கூறினார்.

    இம்முகாமில், அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள், கல்லூரியின் இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவ-மாணவி கள் மற்றும் 2023-ம் ஆண்டு இளங்கலை பட்டதாரிகள் உட்பட 300-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்திருந்தார்.

    கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் தொடர்பு திட்டம் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக் னாலஜி மற்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இணைந்து சிறப்பு பயிலரங்கத்தை நடத்தியது.

    இதில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மற்றும் மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் தொடர்பு திட்டம் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது.

    இந்த பயிலரங்கத்தில் தக வல் தொலைத்தொடர்பு, அதனை சார்ந்த முக்கிய அறிவு சார் கலந்துரையாடல் நடைபெற்றது.

    இப்பயிலரங்கத்தை எம்.ஐ.டி கல்லூரி தலை வர் மற்றும் நிர்வாக இயக் குனர் தனசேகரன், செய லாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர ராஜராஜன், கல்லூரி முதல்வர் மலர்க்கண் ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சி யினை தொடங்கி வைத்தனர்.

    பிக்ஷாம் வர வேற்றார். தொடர்ந்து இந் திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தின் நடவடிக்கை கள் குறித்து ராஜு விளக்கினார். மேலும் இந்திய தொலைத் தொடர்பு சேவை இயக் குனர் விநனையா மற்றும் ஸ்ரீகாந்த் சைபர் செக்யூ ரிட்டி குறித்து சிறப்புரையாற்றினர்.

    இப்பயில ரங்கில் பி.எஸ்.என். எல், ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் பிரதிநிதி கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.

    • அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
    • இந்திய பொறியாளர் அமைப்பின் மாநில கவுரவ செயலாளர் சீனு திருஞானம் நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    இந்திய பொறியாளர் அமைப்பு, புதுச்சேரி மாநில மையம் மற்றும் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லுாரி இயந்திரவியல் துறை இணைந்து அகில இந்திய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் நடந்தது. மேம்படுத்தப்பட்ட உலோகங்களின் தொழில் நுட்ப வளர்ச்சி, தன்மை மற்றும் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்தி பேசினார். இந்திய பொறியாளர் அமைப்பின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ராஜாராமன் வரவேற்றார். இந்திய பொறியாளர் அமைப்பு மெட்டலர்ஜிக்கல் மெட்டீரியல்ஸ் பொறியியல் பிரிவு அகில இந்திய தலைவர் புவனேஸ்வர், தலைமை விஞ்ஞானி பாக்யத்தார் போய் ஆகியோர் பசுமை இரும்பு உலோக உற்பத்தி குறித்து பேசினர்.

    கருத்தரங்கில் புதுச்சேரி பல்கலை கழக இயற்பியல் துறை உதவி பேராசிரியர் முத்துக்குமார், நானோ சயின்ஸ் துறை பேராசிரியர் சுப்ரமணியா, வெங்க டேஸ்வரா பொறியியல் கல்லுாரி முதல்வர் பிரதீப் தேவநேயன், புதுச்சேரி தொழில்நுட்ப பலகலைக் கழக இயந்திரவியல் துறை பேராசிரியர் செந்தில்வேலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி முதல்வர் வெங்கடாசலபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்திய பொறியாளர் அமைப்பின் மாநில கவுரவ செயலாளர் சீனு திருஞானம் நன்றி கூறினார்.

    • ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
    • மாணவர்கள் ஒரு பிரிவிலும் 9, 10 என்று ஒரு பிரிவிலும் 11 மற்றும் 12 ஒரு பிரிவிலும் தலா 3 பரிசுகளும் ஒவ்வொரு பிரிவிலும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மணக்குள விநாயகர்தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை சார்பில் உலக சுற்றுசூழல் தினம் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம் எனும் தலைப்பில் ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் மருத்துவர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்தி பேசினார்.

    இந்திய பொறியாளர் அமைப்பின் புதுவை மாநில தலைவர் மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் முனைவர் ராஜாராமன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 75 பள்ளிகளிடமிருந்து 2500 மேற்பட்ட ஓவியங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. அவைகளில் இருந்து சிறந்த ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு 6,7,8-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவிலும் 9, 10 என்று ஒரு பிரிவிலும் 11 மற்றும் 12 ஒரு பிரிவிலும் தலா 3 பரிசுகளும் ஒவ்வொரு பிரிவிலும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    கல்லூரி முதல்வர் மலர்கண் முன்னிலை வகித்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்கினார்.

    விழாவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.

    மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் புதுச்சேரி ஈட்டன் நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. அந்நிறுவன மனிதவளத்துறை மேலாளர் சந்தோஷ், ஜெய்குமார், ஆகாஷ், மற்றும் முத்துலட்சுமி நிறுவனத்தின் விவரங்கள், வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிகோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    முகாமில், புதுவை மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அணைத்து பொறியியல் கல்லூரிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட இறுதியாண்டு படிக்கும் மற்றும் 2022-2023 பொறியியல் முடித்த மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்திருந்தார்.

    • வேலை செய்வதற்கு உண்டான சூழல் எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.
    • முகாமில் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூாரி மேலாண்மை துறை மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில் சென்னை சைடஸ்பெக்டரம் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமில் சைட்ஸ் பெக்ட்ரம் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவன மனிதவள துறை மேலாளர் ரமேஷ், அதிகாரி ஜோஸ்வின், விற்பனை துறை மேலாளர் கிரிஷ் ஆகியோர் நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல் எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.

    தொடர்ந்து குழு கலந்துரையாடல் நேர்காணல் மற்றும் வேலைவாயப்பு முகாம் நடந்தது.

    மணக்கு விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் தலைமை தாங்கினர்.

    கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூாரி மேலாண்மை துறை மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

    ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன் பேராசிரியர் வைத்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை எஸ்.ஏ.இ. இந்தியா உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள்.
    • துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன்,மற்றும் பொருளாளர் டி.ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்.ஏ.இ இந்தியா அமைப்புடன் காலேஜியேட் கிளப் திறப்பு விழா நடைப்பெற்றது.

    மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்.எம்.தனசேகரன், துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன்,மற்றும் பொருளாளர் டி.ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அனைத்து துறைத்தலை வர்கள், கல்லூரி மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவர் எஸ்.அருண்மொழி, கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி எம்.ஜெயக்குமார், கல்லூரி ரோபோட்டிக்ஸ் அன்ட் ஆடோ மேஷன் துறை தலைவர் கோ. ரேணுகா தேவி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் எஸ். மலர்க்கண் மற்றும் தலைமை விருந்தினர் ரெனால்ட் நிசான் டெக்கின் துணைத் தலைவர் அனந்த ராமன் பிரகாஷ், கெஸ்ட் ஆஃப் ஹானர் டிசைன் டெஸ்க் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சண்முகம், எஸ்.ஏ.இ. இந்தியா தலைவர் பாஸ்கர சேதுபதி மற்றும் உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    இந்த திறப்பு விழாவின் ஒப்பந்தத்தின்படி மாணவர்களை இன்டெர்ன்ஷிப், இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங், வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை எஸ்.ஏ.இ. இந்தியா உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் ரோபோட்டிக்ஸ் அன்ட் ஆடோமேஷன் துறை தலைவர் கோ. ரேணுகா தேவி செய்திருந்தார்.

    • கடல் பக்கங்களில் இயந்திர பொறியாளரின் பங்கை பற்றி விளக்கினார்.
    • மாணவர்களுக்காகப் பின்பற்றப்படும் பல்வேறு பாட அமைப்புகளை எடுத்துரைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு தரம் மற்றும் நம்பகத்த ன்மைக்கான தேசிய நிறுவனம் என்.ஐ.கியூ.ஆர் நிறுவன சங்கத்தின் கீழ் மெக்கானிக்கல் என்ஜினீயர்களுக்கான மரைன் என்ஜினீயரிங் வாய்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர், நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுகுமாறன் மற்றும் டாக்டர் நாராயணசாமி மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர், முதல்வர் டாக்டர் மலர்க்கன் வாழ்த்துரை வழங்கினார். இயந்திரவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் ராஜாராம் வரவேற்று பேசினார்.

    துறைத்தலைவர் கோபிநாத் ஏ.எம்.இ.டி பல்கலைக்கழகம் மெக்கா னிக்கல் என்ஜினீயரிங்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பேசினார்.

    4-வது என்ஜினீயர் 1-வது என்ஜினீயர் மற்றும் தலைமை என்ஜினீயர் என பல்வேறு நிலைகளில் தலைமை என்ஜினீயர் மற்றும் கேப்டனுக்கு இடையேயான அடிப்படை ஒப்பீட்டையும் அவர் பாகுபடுத்தினார்.

    கப்பலின் வழிசெலுத்தல், பாதுகாப்பு அமைப்புகள், உந்துவிசை மற்றும் மின் உற்பத்தி அலகு போன்ற கடல் பக்கங்களில் இயந்திர பொறியாளரின் பங்கை பற்றி விளக்கினார்.

    சென்னை ஏ.எம்.இ.டி நகரக் கல்லூரி முதல்வர் கேப்டன் ராமகிருஷ்ணா பேசினார்.

    சென்னை ஏ.எம்.இ.டி நகரக் கல்லூரி முதல்வர் கோபிநாத் பல்கலைக்கழகம் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவர்களுக்காகப் பின்பற்றப்படும் பல்வேறு பாட அமைப்புகளை எடுத்துரைத்தார்.

    அமர்வு கேப்டன் ராம கிருஷ்ணா, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கேள்விகளைக் கேட்டார். முடிவில் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது.

    • பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்து நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.
    • சாதி,மதம் பாராமல் உருவாகும் கல்லூரி கால நட்பு இறுதி வரை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டு கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் ஆண்டு கலாச்சார மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்து வரவேற்று பேசினார். மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி பேசினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சதீஷ், பேசியதாவது:- எல்லோருக்கும் கல்லூரி மாணவ பருவம் ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என்றும் வாழ்வின் எந்த நிலையிலும் அது இனிமையான நினைவை தரும் என்றும் குறிப்பிட்டார். சாதி,மதம் பாராமல் உருவாகும் கல்லூரி கால நட்பு இறுதி வரை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    எம்.ஐ.டி போன்ற சிறந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரி நாட்களில் தீயவை தவிர்த்து, பாடத்திட்டம் தாண்டிய செயல்பாடுகளில் கவனம் செலுத்தி, வாழ்வில் உத்வேகம் தரும் முன்மாதிரியாக விளங்கும் சிறந்த மனிதர்களை பின்பற்றி உன்னத நிலை அடைந்து, பெற்றோர்களை போற்றி அரவணைத்து, ஆசிரியர்களை மதித்து பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்து நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டு மற்றும் கலாச்சார போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கடந்த கல்வியாண்டில், தேசிய அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவ மாணவிகள் மற்றும் மில்லெட் குக்கிங் போட்டியில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பாராட்டு பெற்றனர். கல்லூரி கலாச்சார குழு மற்றும் மகளிர் அதிகாரம், மேம்பாட்டு குழு பேராசிரியர் உறுப்பினர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். விழாவின் முடிவில், கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று நிகழ்த்திய பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

    விழாவில், மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தைச் சேர்ந்த கல்வி நிறுவன இயக்குனர்கள், முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×