search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MH17"

    • விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர்.
    • இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த சர்வதேச விசாரணைக்குழு 4 பேர் மீது குற்றம் சுமத்தியது.

    ஆம்ஸ்டர்டாம்:

    நெதர்லாந்தில் இருந்து 2014, ஜூலை மாதம் 17-ம் தேதி மலேசியாவுக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் உக்ரைன் வான்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன் ராணுவத்துக்கும் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையே உக்கிரமாக சண்டை நடைபெற்று வந்த போது ரஷிய எல்லைப் பகுதி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், 15 விமான ஊழியர்கள் உள்பட விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர்.

    விமானத்தை ரஷியா ஆதரவு பிரிவினைவாதிகள் தான் சுட்டு வீழ்த்தினர் என உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால், உக்ரைன் படைகள்தான் பொறுப்பு என ரஷியாவும் பிரிவினைவாதிகளும் கூறின.

    இதுதொடர்பாக விசாரணை நடத்திய சர்வதேச விசாரணைக்குழு தனது விசாரணை அறிக்கையில் மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக 4 பேர் மீது குற்றம் சுமத்தியது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும், லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை சுட்டு வீழ்த்தி 298 பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கு நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ரஷியர்களான இகோர் கிர்கின் மற்றும் செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் உக்ரைனைச் சேர்ந்த லியோனிட் கார்சென்கோ ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நான்காவது நபர் விடுவிக்கப்பட்டார்.

    298 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தை, ராக்கெட் மூலம் ரஷ்யாதான் தாக்கி அழித்ததாக வெளியான தகவலை நெதர்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி உறுதிபடுத்தியுள்ளார். #MH17investigation #Russianinvolvement #StefBlok
    ஆம்ஸ்டர்டாம்:

    உக்ரைனில் கடந்த 2014-ம் ஆண்டு அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்ட போது, கிரீமியா பகுதி மக்கள் ரஷ்ய கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதனால், ரஷ்யா ராணுவ படைகள் கடந்த 2014-ம் ஆண்டு கிழக்கு உக்ரைன் பகுதிக்குள் ஊடுருவி கிரீமியா பகுதியை மீண்டும் ரஷ்யாவுடன் இணைத்தது.

    அந்தாண்டில் ஜூலை 17-ம் தேதி, மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச்-17 விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பயணிகளுடன் சென்றது.அப்போது ஒரு ஏவுகணை இந்த விமானத்தை தாக்கியதில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.



    விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார் என அறிய சர்வதேச அளவில் கூட்டு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் விசாரணை அறிக்கையின்படி, ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை பிரிவிலிருந்துதான் பக்-டெலர் ரக ஏவுகணை ஏவப்பட்டு, மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதாகவும், ஆனால் ஏவுகணையை உபயோகித்தது யார் என்பது குறித்து தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, நெதர்லாந்து நாட்டின் அமைச்சரவையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த நெதர்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஸ்டெப் பிளாக், விமானம் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவிற்கு நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஸ்டெப் பிளாக்கின் இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெப் பிளாக்கின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த ரஷ்யா, விமானம் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளது. #MH17investigation #Russianinvolvement #StefBlok
    ×