search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerala accident"

    • ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்களை ஏற்றி கொண்டு ஒரு பஸ் சென்றது.
    • பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 16-ந்தேதி மாலையில் திறக்கப்பட்டது.

    17-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். நடை திறந்த முதல் நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து ஐய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சென்ற வண்ணம் உள்ளனர்.

    ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்களை ஏற்றி கொண்டு ஒரு பஸ் சென்றது. இன்று அதிகாலை அந்த பஸ் பத்தினம்திட்டாவை அடுத்த லாகா அருகே சென்று கொண்டிருந்தது.

    அப்போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

    இதில் பஸ்சில் இருந்த ஐய்யப்ப பக்தர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்து போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர்.

    விபத்தில் பஸ்சில் இருந்த குழந்தை உள்பட 18 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பத்தினம்திட்டா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேரளாவில் நடந்த விபத்து வழக்கில் ஒருவருக்கு ரூ.2.63 கோடி நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தை அடுத்த வேளி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகுமார், தனியார் நிறுவன ஊழியர்.

    ஹரிகுமார் கடந்த 2014-ம் ஆண்டு திருவனந்தபுரம் கவடியார்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிகுமார் படுகாயம் அடைந்தார்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஹரிகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் அவரது உடலில் ஒரு பகுதி செயல் இழந்தது. இதனால் அவர், படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது.

    விபத்தில் படுகாயம் அடைந்து உடல் செயல் இழந்த ஹரிகுமாருக்கு இழப்பீடு கேட்டு திருவனந்தபுரம் மோட்டார் வாகன கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஹரிகுமாருக்கு ரூ.1 கோடியே 99 லட்சம் இழப்பீடும், இந்த தொகைக்கு வழக்கு தொடரப்பட்ட 2015-ம் ஆண்டு முதல் வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும். அதோடு கோர்ட்டு செலவு உள்ளிட்டவைகளையும் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவு மூலம் ஹரிகுமாருக்கு ரூ.2.63 கோடி இழப்பீடு கிடைக்கும். இதனை இன்சூரன்ஸ் நிறுவனம் 1 மாதத்தில் வழங்க வேண்டு மென்று கோர்ட்டு கூறி உள்ளது. #tamilnews
    ×