என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "KV Kuppam"
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் அருகே கொசவன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கலாநாதன் (வயது 60). இவரது வீட்டின் கதவை நேற்று முன்தினம் நள்ளிரவில் சிலர் தட்டியுள்ளனர்.
தூக்கத்தில் இருந்து எழுந்த கலாநாதன், கதவை தட்டுபவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த கலாநாதனின் உறவினர்கள் வீட்டின் முன்பு நின்றிருந்தவர்களை பார்த்து சத்தம் போட்டுள்ளனர். கூட்டமாக வருவதை பார்த்து 2 பேர் தப்பி ஓடினர். குஞ்சணன் மட்டும் சிக்கினார். பிடிபட்ட அவரை மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கினர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கலாநாதனின் உறவினர்கள் உடலை அருகில் இருந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
இது தொடர்பான தகவல் கே.வி.குப்பம் போலீசாருக்கு நேற்று காலை தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று குஞ்சணன் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அவரை கட்டி வைத்து அடித்து கொலை செய்ததாக கலாநாதன் (60), முரளி (40), விஜயன் (58) ஆகியோரை கைது செய்தனர்.
குஞ்சணன் பர்கூருக்கு வேலைக்கு வந்துள்ளார். வழிதவறி கொசவன் புதூருக்கு சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்ததால் திருடன் என நினைத்து தாக்கியுள்ளனர்.
இதனால் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர்.
குடியாத்தம்:
கே.வி.குப்பத்தை அடுத்த கொசவன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி பத்மாவதி (வயது 49). நேற்று காலையில் பத்மாவதி வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர் உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து அவரிடம் தங்க நகைகளை வைத்துதான் தோஷம் கழிக்க வேண்டும் என கூறி பத்மாவதியிடம் இருந்து ½ பவுன் நகையை வாங்கி உள்ளார்.
பின்னர் நகையை புளியில் வைத்து தோஷம் கழிப்பது போல் செய்துவிட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து பத்மாவதி புளியில் பார்த்தபோது நகை இல்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பத்மாவதி உடனடியாக உறவினர்கள் துணையுடன் அந்த வாலிபரை தேடினர்.
அப்போது வடுகந்தாங்கல் பகுதியில் நின்றிருந்த அந்த வாலிபரை மடக்கி பிடித்து கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் வாலாஜா பகுதியை சேர்ந்த செல்வம் (21) என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைசெல்வன் வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து ½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்