search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Junior Women's World Cup"

    • டைட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
    • தொடக்கத்தில் அதிரடி காட்டிய கேப்டன் ஷபாலி வர்மா 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    போட்செப்ஸ்ட்ரூம்:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக ரியானா மெக்டொனால்ட் 19 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் டைட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்கத்தில் அதிரடி காட்டிய கேப்டன் ஷபாலி வர்மா 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஸ்வேதா செஹராவத் 5 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனையடுத்து சௌமியா திவாரி -கோங்காடி த்ரிஷா ஜோடி நிதானமாக விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    கடைசி 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், கோங்காடி த்ரிஷா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இந்திய அணி 69 ரன்கள் எடுத்து, ஜூனியர் உலக கோப்பையை ருசித்தது.

    • டைட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
    • இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ரியானா மெக்டொனால்ட் 19 ரன்கள் எடுத்தார்.

    போட்செப்ஸ்ட்ரூம்:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக ரியானா மெக்டொனால்ட் 19 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் டைட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    • முதல் அரையிறுதியில் இந்தியாவும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்தும் வென்றது.
    • இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    போட்செப்ஸ்ட்ரூம்:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த முதலாவது அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

    டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் ஷபாலி வர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 107 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்தியா 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடக்க வீராங்கனை சுவேதா செராவத் 61 ரன்னுடனும், திரிஷா 6 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 3 விக்கெட்டு வீழ்த்திய பார்ஷவி சோப்ரா ஆட்டநாயகி விருது பெற்றார்.

    மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் சந்தித்தன. டாஸ் ஜெயித்து முதலில் ஆடிய இங்கிலாந்து 19.5 ஓவரில் 99 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 18.4 ஓவரில் 96 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஹன்னா பாகேர் 3 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகியாக ஜொலித்தார்.

    இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 5.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    https://www.dailythanthi.com/Sports/Cricket/india-england-clash-in-junior-womens-20-over-world-cup-cricket-final-today-888357

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 99 ரன்னில் ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 96 ரன்னில் சுருண்டது.

    போப்செப்ஸ்ட்ரூம்:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

    டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் 99 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் 25 ரன்னும், கேப்டன் கிரேஸ் 20 ரன்னும், ஜோசி குரோவ்ஸ் 15 ரன்னும், செரேன் ஸ்மேல் 10 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

    அதன்பின் ஆடிய ஆஸ்திரேலியா அணி 18.4 ஓவரில் 96 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் இங்கிலாந்து அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஹன்னா பாகேர் 3 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகியாக ஜொலித்தார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    • இந்திய அணி தரப்பில் ஸ்வேதா செஹராவத் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • இன்று மாலை ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிக்கு 2-வது அரையிறுதி போட்டி நடக்க இருக்கிறது.

    19 வயது உட்பட்டவருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று அரை இறுதி போட்டி நடைபெற்றது. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


    106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனையாக ஷஃபாலி வர்மா - ஸ்வேதா செஹராவத் களமிறங்கினர். ஷஃபாலி வர்மா 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சவுமியா திவாரி ஸ்வேதா செஹராவத்துடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர்.

    அதிரடியாக விளையாடிய ஸ்வேதா செஹராவத் 39 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த உலக கோப்பையில் இது இவருக்கு 3-வது அரை சதம் ஆகும். இந்திய அணி 95 ரன்கள் இருந்த போது சவுமியா திவாரி போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். 

    இறுதியில் இந்திய அணி 14.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இன்று மாலை ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிக்கு 2-வது அரையிறுதி போட்டி நடக்க இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் மோதும்.

    • இந்திய அணி தரப்பில் பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜியா 35 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    19 வயது உட்பட்டவருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று அரை இறுதி போட்டி நடைபெறுகிறது. இன்றைய அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதனையடுத்து ஜார்ஜியா ப்ளிம்மர் - இசபெல்லா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.


    இசபெல்லா 26 ரன்னில் பார்ஷவி சோப்ரா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் இஸி ஷார்ப் 13 ரன்னிலும் நிதானமாக விளையாடி வந்த ஜார்ஜியா 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    ×