search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISS"

    • உயிரினங்களுக்கான சாத்தியம் பற்றிய ஆய்வு விண்வெளியிலும் நடத்தப்பட்டு வருகிறது.
    • கோபிசந்த் தொடகுரா உள்பட 6 பேர் விண்வெளிக்கு சுற்றுலா செல்லவுள்ளனர்.

    புதுடெல்லி:

    அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ், விண்வெளிக்கு சுற்றுலாவாசிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தினைச் செயல்படுத்தி வருகிறார். அவரது புளூ ஆரிஜின் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியூ ஷெப்பர்டு திட்டத்தின்படி இதுவரை 31 மனிதர்கள் விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.

    நியூ ஷெப்பர்டு என்ற பெயரிலான ராக்கெட்டுகள் உதவியுடன் விண்வெளிக்கு மனிதர்கள் கொண்டு செல்லப்படுவர். இதன்படி, என்.எஸ்-25 என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதில், மேசன் ஏஞ்சல், சில்வெய்ன் சிரான், எட் டுவைட், கென் ஹெஸ், கரோல் ஸ்காலெர் மற்றும் கோபி தொட்டகுரா ஆகிய 6 பேர் விண்வெளிக்கு சுற்றுலா செல்லவுள்ளனர். இவர்களில் கோபி இந்தியாவை சேர்ந்த தொழில் முனைவோர்களில் ஒருவர். விமானியாகவும் இருந்துவருகிறார்.

    1984-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ விங் கமாண்டராக செயல்பட்ட ராகேஷ் சர்மா முதன்முறையாக விண்வெளிக்குச் சென்றார். அவருக்கு அடுத்து விண்வெளி பயணம் மேற்கொள்ளும் 2-வது இந்தியர் என்ற பெருமையை கோபி பெற உள்ளார். இந்தப் பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஆந்திர பிரதேசத்தில் பிறந்த கோபி தொடகுரா, எம்பிரி-ரிடில் ஏரோநாடிகல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்றவர். ஜெட் விமானங்கள் மட்டுமின்றி சீபிளேன் எனப்படும் நீரிலும், வானிலும் செல்லக்கூடிய விமானங்கள், கிளைடர் வகை விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான விமானங்கள், ஏர் பலூன்கள் உள்ளிட்டவற்றிலும் அவர் விமானியாக செயல்பட்டுள்ளார். சர்வதேச மருத்துவ ஜெட் விமானியாகவும் பணியாற்றி இருக்கிறார்.

    விண்வெளி சுற்றுலா செல்வது குறித்து கோபிசந்த் கூறுகையில், விண்வெளிக்கு அப்பால் உள்ள விஷயங்களை அறிந்துகொள்வதற்காக அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன. அதற்காகவே இந்த பயணம். என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. ஏனெனில் அது அகராதியில் இல்லை. அது என்னுடன் நான் எடுத்துச் செல்லக்கூடிய விஷயம் என தெரிவித்தார்.

    • விண்கலம் மீது கடந்த டிசம்பர் மாதம் சிறிய விண்கல் மோதியதால் விண்கலம் லேசான சேதம் அடைந்தது
    • பைகானூர் ஏவுதளம் அருகில் உள்ள கசாக் புல்வெளியில் விண்கலம் தரையிறங்கியது.

    மாஸ்கோ:

    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான சோயுஸ் எம்எஸ்-22 விண்கலம் மீது கடந்த டிசம்பர் மாதம் சிறிய விண்கல் மோதியது. இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன், குளிரூட்டியில் கசிவு ஏற்பட்டது.

    இதையடுத்து விண்கலத்தில் தங்கியிருக்கும் 3 வீரர்களையும் ஏற்றி வருவதற்காக கடந்த மாதம் சோயுஸ் எம்எஸ்-23 என்ற விண்கலத்தை ரஷியா அனுப்பியது.

    அதேசமயம், சேதமடைந்த சோயுஸ் எம்எஸ்-22 விண்கலத்தை ஆட்கள் இன்றி பூமிக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிக்கப்பட்ட சோயுஸ் எம்எஸ்-22 விண்கலம் நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பியது. பைகானூர் ஏவுதளம் அருகில் உள்ள கசாக் புல்வெளியில் விண்கலம் தரையிறங்கியது. விண்கலத்தில் சிறிய அளவிலேயே சேதம் ஏற்பட்டுள்ளதால், அதை சரிசெய்து மீண்டும் பயன்படுத்தலாமா? என்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    • விண்வெளி வீரர்களை அழைத்து வருவதற்கான எம்எஸ்-22 விண்கலம் மீது விண்கல் மோதியதால் சேதம்.
    • சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது 7 விண்வெளி வீரர்கள் உள்ளனர்.

    மாஸ்கோ:

    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான விண்கலம் மீது சிறிய விண்கல் மோதியது. இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன், குளிரூட்டியில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து விண்கலத்தில் தங்கியிருக்கும் 3 வீரர்களையும் ஏற்றி வருவதற்காக அடுத்த மாதம் 20ம் தேதி மீட்பு விண்கலத்தை ராக்கெட்டில் அனுப்ப உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ரஷியாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் கூறியிருப்பதாவது:-

    ரஷிய விண்வெளி வீரர்களான செர்ஜி புரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் மற்றும் நாசா விண்வெளி வீரர் பிராங்க் ரூபியோ ஆகியோரை பூமிக்கு அழைத்து வர முதலில் அனுப்பட்ட எம்எஸ்-22 விண்கலம் ஒரு சிறிய விண்கல் மோதியதால் சேதமடைந்துள்ளது. எனவே, அவர்களுக்காக சோயுஸ் எம்எஸ்-23 ராக்கெட் பிப்ரவரி 20ம் தேதி ஆட்கள் யாரும் இன்றி செலுத்தப்பட உள்ளது. சேதமடைந்த சோயுஸ் எம்எஸ்-22 ஆட்கள் இல்லாமல் பூமிக்கு திரும்பும்.

    இவ்வாறு விண்வெளி நிறுவனம் கூறி உள்ளது.

    விண்வெளி நிலையத்தில் தற்போது 7 பேர் உள்ளனர். அவசர காலத்தில் வீரர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்றால் விண்வெளி நிலையத்தில் நான்கு பேரை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரே ஒரு மீட்பு விண்கலம் மட்டுமே உள்ளது. தற்போது எம்எஸ்-22 ராக்கெட் தகுதியற்றதாகக் கருதப்படுவதால் அதற்கு மாற்றாக மற்றொரு விண்கலம் ராக்கெட்டில் அனுப்பப்படுகிறது.

    விரைவில் விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டீனா கூக், விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கியிருந்த வீராங்கனை என்ற பெருமையை பெற உள்ளார். #USAstronaut #ISS #SoyuzMS13
    மாஸ்கோ:

    அமெரிக்கா, ரஷியா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. அந்த மையத்தில் 6 வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் 3 பேர் 5 அல்லது 6 மாதங்கள் அங்கு தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின்னர் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    அந்த வகையில், ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் சார்பில் ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர், இத்தாலியை சேர்ந்த லூகா பர்மிடானோ ஆகிய 2 வீரர்களும், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கூக் என்கிற வீராங்கனையும் வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்கிறார்.



    சோயூஸ் எம்-13 விண்கலத்தில் செல்லும் இவர்கள் கூடுதல் ஆராய்ச்சி பணிக்காக 11 மாதங்கள் அல்லது 392 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்துவிட்டு பூமி திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக காலம் விண்வெளியில் தங்கியிருந்த வீராங்கனை என்ற சாதனையை கிறிஸ்டீனா கூக் படைக்கப்போகிறார்.

    இதற்கு முன், அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை பெக்கிவிட்சன், அதிகபட்சமாக 289 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  #USAstronaut #ISS #SoyuzMS13
    சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று வீரர்களை சுமந்துசென்ற ரஷியாவின் சோயுஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது #Soyuz #ISS #firstmannedmission
    மாஸ்கோ:

    பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதேபோல், ஆய்வுகள் முடிந்த பின்னர் அங்கிருக்கும் வீரர்கள் பூமிக்கு திரும்பி வருவதுண்டு.

    அவ்வகையில், ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர் அலெக்சி ஓவ்ச்சின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரரான நிக் ஹாக் ஆகியோருடன் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி கஜகஸ்தானில் இருந்து சோயுஸ் விண்கலத்தை சுமந்துகொண்டு புறப்பட்ட ராக்கெட் திடீரென்று வெடித்து சிதறியது.

    அதில் சென்ற இரு வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது ரஷியாவின் விண்வெளித்துறை ஆராய்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.

    ஆனால், சற்றும் மனம்தளராத ஆராய்ச்சியாளர்கள் சோயுஸ் விண்கலத்தை வேறு சிலருடன் மீண்டும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில், ஆட்களை அனுப்பாமல் சோயுஸ் மூலம் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி விண்வெளி ஆய்வு மையத்துக்கு பல டன்கள் அளவிலான உணவு, எரிபொருள் போன்றவற்றை அனுப்பி வைத்தனர். இந்த பயணம் வெற்றிகரமாக அமைந்தது. சோயுஸ் மீண்டும் பூமிக்கு திரும்பி வந்தது.



    இதைதொடர்ந்து, ரஷிய வீரர் ஓலேக் கோனோனென்க்கோ, அமெரிக்காவின் அன்னி மெக்லைன் மற்றும் கனடாவை சேர்ந்த விண்வெளி வீரர் டேவிட் செயின்ட் ஜேக்குவெஸ் ஆகியோருடன் சோயுஸ் விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

    கஜகஸ்தான் நாட்டில் உள்ள பைக்கோனுர் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட சோயுஸ் குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது.

    இதில் சென்றுள்ள ஆராய்ச்சியாளர்கள் வரும் 11-ம் தேதி முதல் விண்வெளியில் இறங்கி நடந்து  விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை கண்டுபிடித்து அடைக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

    மேலும், விண்வெளியில் தங்கி இருக்கும்போது ஏற்படும் தசை இழப்பு தொடர்பாக அங்கு புழுக்களை வைத்து செய்யும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளிலும் இந்த வீரர்கள் இன்றிலிருந்து சுமார் ஆறரை மாதம் வரை ஈடுபடுவார்கள் என தெரிகிறது. #Soyuz #ISS #firstmannedmission
    ×