search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்வெளி பயணம்"

    • உயிரினங்களுக்கான சாத்தியம் பற்றிய ஆய்வு விண்வெளியிலும் நடத்தப்பட்டு வருகிறது.
    • கோபிசந்த் தொடகுரா உள்பட 6 பேர் விண்வெளிக்கு சுற்றுலா செல்லவுள்ளனர்.

    புதுடெல்லி:

    அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ், விண்வெளிக்கு சுற்றுலாவாசிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தினைச் செயல்படுத்தி வருகிறார். அவரது புளூ ஆரிஜின் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியூ ஷெப்பர்டு திட்டத்தின்படி இதுவரை 31 மனிதர்கள் விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.

    நியூ ஷெப்பர்டு என்ற பெயரிலான ராக்கெட்டுகள் உதவியுடன் விண்வெளிக்கு மனிதர்கள் கொண்டு செல்லப்படுவர். இதன்படி, என்.எஸ்-25 என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதில், மேசன் ஏஞ்சல், சில்வெய்ன் சிரான், எட் டுவைட், கென் ஹெஸ், கரோல் ஸ்காலெர் மற்றும் கோபி தொட்டகுரா ஆகிய 6 பேர் விண்வெளிக்கு சுற்றுலா செல்லவுள்ளனர். இவர்களில் கோபி இந்தியாவை சேர்ந்த தொழில் முனைவோர்களில் ஒருவர். விமானியாகவும் இருந்துவருகிறார்.

    1984-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ விங் கமாண்டராக செயல்பட்ட ராகேஷ் சர்மா முதன்முறையாக விண்வெளிக்குச் சென்றார். அவருக்கு அடுத்து விண்வெளி பயணம் மேற்கொள்ளும் 2-வது இந்தியர் என்ற பெருமையை கோபி பெற உள்ளார். இந்தப் பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஆந்திர பிரதேசத்தில் பிறந்த கோபி தொடகுரா, எம்பிரி-ரிடில் ஏரோநாடிகல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்றவர். ஜெட் விமானங்கள் மட்டுமின்றி சீபிளேன் எனப்படும் நீரிலும், வானிலும் செல்லக்கூடிய விமானங்கள், கிளைடர் வகை விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான விமானங்கள், ஏர் பலூன்கள் உள்ளிட்டவற்றிலும் அவர் விமானியாக செயல்பட்டுள்ளார். சர்வதேச மருத்துவ ஜெட் விமானியாகவும் பணியாற்றி இருக்கிறார்.

    விண்வெளி சுற்றுலா செல்வது குறித்து கோபிசந்த் கூறுகையில், விண்வெளிக்கு அப்பால் உள்ள விஷயங்களை அறிந்துகொள்வதற்காக அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன. அதற்காகவே இந்த பயணம். என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. ஏனெனில் அது அகராதியில் இல்லை. அது என்னுடன் நான் எடுத்துச் செல்லக்கூடிய விஷயம் என தெரிவித்தார்.

    ×