என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Former Minister Balakrishna reddy
நீங்கள் தேடியது "former minister Balakrishna Reddy"
தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. #BalakrishnaReddy #SupremeCourt
புதுடெல்லி:
பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மேலும் மேல்முறையீடு செய்ய வசதியாக தண்டனையை நிறுத்தி வைத்து உடனடியாக ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு முடியும் வரை பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
எனவே, பாலகிருஷ்ண ரெட்டி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடியும் வரை, சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. தொடர்ந்து அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். #BalakrishnaReddy #SupremeCourt
பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மேலும் மேல்முறையீடு செய்ய வசதியாக தண்டனையை நிறுத்தி வைத்து உடனடியாக ஜாமீன் வழங்கியது.
இந்த தீர்ப்பினால், பாலகிருஷ்ண ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது.
இதையடுத்து பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு முடியும் வரை பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
எனவே, பாலகிருஷ்ண ரெட்டி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடியும் வரை, சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. தொடர்ந்து அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். #BalakrishnaReddy #SupremeCourt
அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், ஓசூர் தொகுதி காலியானதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. #BalakrishnaReddy #HosurConstituency
சென்னை:
ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி 1998ம் ஆண்டு பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது. போலீஸ் ஜீப், அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தமிழக அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணரெட்டியும் ஒருவர். இந்த வழக்கில் அவர் 72வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு கோர்ட்டு நீதிபதி சாந்தி, பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேரை குற்றவாளியாக அறிவித்து, பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஜனவரி 7-ந் தேதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த இடைக்கால மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், ‘கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனை தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது’ என்று கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சய்கண்ணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் விவரங்களை பரிசீலித்துதான், அந்த தண்டனைக்கு ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்துள்ளது. எனவே, கீழ் கோர்ட்டு தண்டனைக்கு நாங்களும் தடை விதிக்க முடியாது. இந்த வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்புகிறோம்’ என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை விதிக்கப்பட் நிலையில் ஓசூர் தொகுதி காலியானதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் முறைப்படி அறிவித்துள்ளார்.
2019 ஜனவரி 7 முதல் ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் ஓசூர், திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. #BalakrishnaReddy #HosurConstituency
ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி 1998ம் ஆண்டு பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது. போலீஸ் ஜீப், அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தமிழக அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணரெட்டியும் ஒருவர். இந்த வழக்கில் அவர் 72வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு கோர்ட்டு நீதிபதி சாந்தி, பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேரை குற்றவாளியாக அறிவித்து, பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஜனவரி 7-ந் தேதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பினால், அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி இழந்தார். அதேநேரம், தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு செய்தார். அத்துடன், கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும் என்று இடைக்கால மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
இந்த இடைக்கால மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், ‘கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனை தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது’ என்று கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சய்கண்ணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் விவரங்களை பரிசீலித்துதான், அந்த தண்டனைக்கு ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்துள்ளது. எனவே, கீழ் கோர்ட்டு தண்டனைக்கு நாங்களும் தடை விதிக்க முடியாது. இந்த வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்புகிறோம்’ என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை விதிக்கப்பட் நிலையில் ஓசூர் தொகுதி காலியானதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் முறைப்படி அறிவித்துள்ளார்.
2019 ஜனவரி 7 முதல் ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் ஓசூர், திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. #BalakrishnaReddy #HosurConstituency
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X