என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Fatalities"
- தீவிர பனிப்பொழிவும், பனிப்புயலும் மக்களின் வாழ்வை முடக்கி உள்ளது
- குடிநீர் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு மக்கள் குடிநீருக்கு தவிக்கின்றனர்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பருவநிலையில் தோன்றிய தீவிர வானிலை மாற்றங்களினால் அமெரிக்காவில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவுடன் பனிப்புயலும் தாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.
டென்னிசி மாநிலத்தில் 25 பேரும், ஒரேகான் மாநிலத்தில் 16 பேரும் கடும் பனிப்பொழிவால் உயிரிழந்ததையடுத்து அங்கெல்லாம் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசிசிபி, வாஷிங்டன், கென்டுக்கி, விஸ்கான்சின், நியூயார்க், நியூ ஜெர்சி உள்ளிட்ட 8 மாநிலங்களில் உயிரிழப்பு நடந்துள்ளது.
கடந்த புதன்கிழமையன்று ஒரேகான் மாநில போர்ட்லேண்டு பகுதியில் 3 பேர் சென்று கொண்டிருந்த காரின் மீது ஒரு மின்சார லைன் அறுந்து விழுந்தது. இதில், அந்த வாகனத்தில் இருந்த ஒரு குழந்தையை தவிர அனைவரும் உயிரிழந்தனர்.
பல மாநிலங்களில் மின்சார தடை ஏற்பட்டு நாடு முழுவதும் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்படுகின்றனர்.
சியாட்டில் பகுதியில் வீடுகள் இல்லாத 5 பேர், கடந்த 4 நாட்களில் உயிரிழந்தனர்.
மிசிசிபி மாநிலத்தில் அவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
டென்னிசி மாநிலத்தில் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் காய்ச்சிய குடிநீரையே உணவு சமைப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பல இடங்களில் உணவகங்கள் குடிநீர் இல்லாததால் மூடப்பட்டன.
நியூயார்க் மாநில விளையாட்டு அரங்கங்களில் பெருமளவு பனி நிறைந்துள்ளதால், அவற்றை அகற்ற விளையாட்டு ரசிகர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களுக்கு பனிப்பொழிவு தொடரலாம் என வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பாஷா மூங்கில்துறைப்பட்டில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.
- சிகிச்சை பலனின்றி பாஷா பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு தேவ நகரை சேர்ந்தவர் பாஷா(50). மூங்கில்துறைப்பட்டில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவர் இருசக்கர வாக னத்தில பவுஞ்சிப்பட்டில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் மூங்கில்துறைப் பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தார். இளையாங்கன்னி கூட்டு சாலை அருகே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பாஷா ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஷா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாலமுருகன் சென்னையில் இருந்து அரியலூருக்கு கனரக வாகனம் ஓட்டி சென்றார்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.
கடலூர்:
திட்டக்குடி அருகே ராமநத்தம் போலீஸ் சரகம் தனியார் பள்ளி முன் இரவு சுமார் 11மணி அளவில் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (28) இவர் சென்னையில் இருந்து அரியலூருக்கு கனரக வாகனம் ஓட்டி சென்றார். ராமநத்தம் அருகே தனியார் பள்ளி அருகில் அங்கு வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நடந்து சென்றபோது அவ்வழியே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- கண்டமங்கலம் அருகே தந்தை-மகளை உயிர்ப்பலி வாங்கிய டிப்பர் லாரிைய டி.எஸ்.பி. பார்த்திபன் மடக்கி பிடித்தார்.
- இளைஞர்களும், பொதுமக்களும் நேரில் வந்து வாழ்த்து கூறினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம், அவரது மகள் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அடையாளம் தெரியாத ஒரு டிப்பர் லாரி மோதி உயிரிழந்தனர். அப்போது, விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியைப் பிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கிராம பொதுமக்கள், இளைஞர்கள் இறந்தவர் உடல்களை போலீசார் மீட்க விடாமல் தடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை அறிந்த விழுப்புரம் போலீஸ் டி.எஸ்.பி பார்த்திபன் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடமும், கிராம இளைஞர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, அவர் பேசிய விதமும், அவர் அளித்த உத்த ரவாதமும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதன்பின், இறந்தவர் உடல்களை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, 24 மணி நேரத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை பிடித்து விழுப்புரம் போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதையடுத்து, வெளிப்படையான முறையிலும்,அதே நேரத்தில் தனது சாதுரியதனத்தால் விசாரணை நடத்தி, விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுத்த டி.எஸ்.பி. பார்த்திபனுக்கு, கேணிப்பட்டு-திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும் நேரில் வந்து வாழ்த்து கூறினர். மேலும் இதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல் வாட்ஸ் அப்பில் டி.எஸ்.பி. க்கு சல்யூட் என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்து பெருமை சேர்த்துவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்