search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tipper lorry"

    • சாந்தி பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி சாந்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது
    • மேச்சேரி போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (60). இவரது மனைவி சாந்தி (54).

    இவர் மேச்சேரி வீரப்பனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சாந்தி பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி சாந்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தடுமாறி விழுந்த சாந்தி டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிக்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேச்சேரி போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் டிப்பர் லாரி ஓட்டுநரான பிரபாகரன் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலை விபத்தில் அங்கன்வாடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூரில் இருந்து விருத்தாசலத்திற்கு சென்றார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்தவர் இளவரசன் (வயது 32). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூரில் இருந்து விருத்தாசலத்திற்கு சென்றார். வேப்பூர் கூட்ரோடு அருகே மணலை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன் நிலை தடுமாறி, டிப்பர் லாரியின் பின்னால் மோதினார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த இளவரசனை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இளவரசனை பரிசோதித்த டாக்டர்கள், இவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இது தொடர்பான புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
    • கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் பட்டி மணிகாரம்பாளை யத்தில் தனியார் கல்குவாரி இயங்கி வந்துள்ளது. இதற்கான உரிமையை புதுப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கல் குவாரியில் இருந்து டிப்பர் லாரி மூலம் நம்பியூர் வேமாண்டம் பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மண் மற்றும் ரப்கல் ஏற்றி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட சுரங்கத்துறை மற்றும் புவியாளர் அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் மாவட்ட அதிகாரிகள் லட்சுமி, சிலம்பரசன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    அப்போது பனங்காட்டு பாளையம் அருகில் ரப் கல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரணை செய்தனர். இதை தொடர்ந்து வாகன டிரைவரிடம் ஆவணங்களை கேட்ட பொழுது டிரைவர் அதிகாரி களை தரக்குறை வாக பேசியதாக கூறப்படு கிறது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுரங்கத்துறை மற்றும் புவியாளர் அதிகா ரிகள் கொடுத்த புகாரின் அடி ப்படை யில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் நிர்மலா விசார ணை மேற்கொ ண்டா ர்.

    அப்போ து கல் குவா ரிக்கு முறை யான ஆவணம் இல்லை என வும், டிரை வர் சரியா ன பதில் அளிக்க வில்லை.

    அதைத்தொ ட ர்ந்து போலீ சார் டிப்பர் லாரியை ஓட்டி வந்த நம்பியூர் அருகே உள்ள குருமந்தூரை சேர்ந்த கதிர்வேல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவரை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அதிக பாரம் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரியை வேகமாக ஓட்டி வந்ததும் தெரிய வந்தது.
    • இதையடுத்து அவர்கள் லாரியை பறிமுதல் செய்தனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி கொண்டு ஒரு டிப்பர் லாரி வந்து கொண்டு இருந்தது.

    அந்த டிப்பர் லாரி வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட பொதுமக்கள் அந்த பகுதி யில் உள்ள ஒரு பள்ளியின் அருகே வந்த போது டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சிறை பிடித்தனர்.

    இது குறித்து நம்பியூர் தாலுகா அஞ்சனூர் கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் நில வருவாய் அலுவலர் ராஜாமணி ஆகியோருக்கு தகவல் தெரிந்தது.

    இதை யடுத்து நிலவருவாய் ஆய்வாளர் ராஜாமணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து டிப்பர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் டிப்பர் லாரியின் டிரைவர் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு லாரியை வேகமாக ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் லாரியை பறிமுதல் செய்தனர்.

    அதனை தொடர்ந்து வேமண்டம்பாளையம் நில வருவாய் ஆய்வாளர் ராஜா மணி நம்பியூர் தாசில்தாரி டம் பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரியை ஒப்படைத்தனர்.

    அதிக பாரம் ஏற்றி கொண்டு வேகமாக வந்த டிப்பர் லாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் பெரியசாமி உறுதி அளித்தார். இதை யடுத்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    • கண்டமங்கலம் அருகே தந்தை-மகளை உயிர்ப்பலி வாங்கிய டிப்பர் லாரிைய டி.எஸ்.பி. பார்த்திபன் மடக்கி பிடித்தார்.
    • இளைஞர்களும், பொதுமக்களும் நேரில் வந்து வாழ்த்து கூறினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம், அவரது மகள் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அடையாளம் தெரியாத ஒரு டிப்பர் லாரி மோதி உயிரிழந்தனர். அப்போது, விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியைப் பிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கிராம பொதுமக்கள், இளைஞர்கள் இறந்தவர் உடல்களை போலீசார் மீட்க விடாமல் தடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை அறிந்த விழுப்புரம் போலீஸ் டி.எஸ்.பி பார்த்திபன் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடமும், கிராம இளைஞர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, அவர் பேசிய விதமும், அவர் அளித்த உத்த ரவாதமும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    அதன்பின், இறந்தவர் உடல்களை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, 24 மணி நேரத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை பிடித்து விழுப்புரம் போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதையடுத்து, வெளிப்படையான முறையிலும்,அதே நேரத்தில் தனது சாதுரியதனத்தால் விசாரணை நடத்தி, விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுத்த டி.எஸ்.பி. பார்த்திபனுக்கு, கேணிப்பட்டு-திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும் நேரில் வந்து வாழ்த்து கூறினர். மேலும் இதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல் வாட்ஸ் அப்பில் டி.எஸ்.பி. க்கு சல்யூட் என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்து பெருமை சேர்த்துவருகின்றனர். 

    தேனி அருகே டிப்பர் லாரியில் கரம்பை மண் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தேனி:

    தென்கரை வருவாய் ஆய்வாளர் ராஜகோபால் தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் தேனி அருகே உள்ள பின்னதேவன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது வைகை ஆற்றங்கரையில் இருந்து கரம்பை மண்ணை டிப்பர் லாரியில் 2 பேர் கடத்தி வந்தனர். அவர்களை அதிகாரிகள் மடக்கி பிடித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் லாரி உரிமையாளர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில் பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (32) என்பதும் லாரி டிரைவர் காமாட்சி தேவன்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (25) எனவும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மண் கடத்தி வந்த லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×