search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crushed"

    • சாந்தி பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி சாந்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது
    • மேச்சேரி போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (60). இவரது மனைவி சாந்தி (54).

    இவர் மேச்சேரி வீரப்பனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சாந்தி பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி சாந்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தடுமாறி விழுந்த சாந்தி டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிக்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேச்சேரி போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் டிப்பர் லாரி ஓட்டுநரான பிரபாகரன் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலை விபத்தில் அங்கன்வாடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சீலநாயக்கன்பட்டியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் எருமா பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது ஏறி இறங்கி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    விழுப்புரம் மாவட்டம் எனத்திமங்கலம் ஓந்தவாடி தெருவை சேர்ந்ததவர் நாராயணன். இவரது மகன் கோவிந்தசாமி (வயது 32), இவர் இன்று காலை சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் எருமா பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது ஏறி இறங்கி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்து விட்டார். தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கதறிய படி சேலத்திற்கு விரைந்துள்ளனர். 

    ×