என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "farmer murder case"
- நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 38), விவசாயி.
- கடந்த 28-ந் தேதி இவர் தருவைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 38), விவசாயி. இவர் தற்போது நெல்லை அருகே உள்ள தருவை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 28-ந் தேதி இவர் தருவைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.
இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சேரன்மகாதேவியை சேர்ந்த மாரியம்மாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணேசன் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம்(24) என்பவர் நெல்லை கோர்ட்டில் இன்று சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே கொலையாளிகள் பயன்படுத்திய கார் மானூர் பகுதியில் ரஸ்தாவில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் கஞ்சி காளியம்மன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி (வயது 65). விவசாயி. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சின்னத்துரை (55) என்பவரிடம் விவசாயத் தேவைக்காக ரூ.2½ லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதற்காக மாதம் தோறும் வட்டி செலுத்தி வந்துள்ளார்.
மழை இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திருமலைசாமியும் விவசாயம் செய்ய முடியாமல் திணறினார். பயிரிட்ட பயிர்கள் கருகியதால் போதிய லாபம் கிடைக்கவில்லை. மேலும் சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் வட்டி மற்றும் அசல் பணத்தை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. சின்னத்துரை பல முறை திருமலைசாமியிடம் பணத்தை கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு திருமலைசாமியின் வீட்டுக்கு சென்ற சின்னத்துரை பணத்தை கொடுக்குமாறு கடுமையாக பேசியுள்ளார். தான் விவசாயத்தில் கடும் நஷ்டமடைந்துள்ளதாகவும், எனவே பணத்தை சிறிது காலம் கழித்து தருகிறேன் என திருமலைசாமி கூறியுள்ளார்.
ஆனால் இதை ஏற்க மறுத்து தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த சின்னத்துரை மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திருமலைசாமியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த திருமலைசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியனார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். அங்கு விவசாயி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து கள்ளிமந்யைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து திருமலைசாமியின் உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சின்னத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Murdercase
வத்தலக்குண்டு விராலிபட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகளை அப்பகுதியை சேர்ந்த சிலர் கல்லால் தாக்கியுள்ளனர். இதனால் இருதரப்பிற்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் அழகர்சாமி தரப்பினர் சுப்புராஜ் தரப்பை சேர்ந்த ராஜா அழகர்சாமியை (வயது32) அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
இதுதொடர்பாக அழசர்சாமி, அவரது மகன் சதீஸ்குமார், தெய்வேந்திரன், ரவிச்சந்திரன், நாகராஜன், ராமசாமி, சுதாகர் ஆகிய 7 பேர் மீது வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதில் சுதாகர் அ.தி.மு.க மாணவரணி ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு நடந்து கொண்டிருந்தபோது ராமசாமி இறந்துவிட்டார். திண்டுக்கல் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதுரசேகரன் வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)