search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Environmental pollution"

    • உழவர்கரை நகராட்சி, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • சாலையோ ரங்களிலும் பொதுமக்கள் மற்றும் வியாபார நிறுவனங்களால் குப்பைகள் கொட்ட ப்படு வது கள ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உழவர்கரை நகராட்சி, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் தினசரி உருவாகும் குப்பைகளை ஸ்வச்சதா கார்பரேஷன் நிறுவனத்தின் மூலம் வீடு மற்றும் வியாபார நிறுவனங்களுக்கே சென்று தினசரி குப்பை பெறப்படுகிறது.

    இருப்பினும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் காலி மனைகளிலும், சாலையோ ரங்களிலும் பொதுமக்கள் மற்றும் வியாபார நிறுவனங்களால் குப்பைகள் கொட்ட ப்படு வது கள ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.

    இதனை சரிசெய்யும் பொருட்டு உழவர்கரை நகராட்சி தீவிர துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறது. இதில் காலி மனை கள் மற்றும் தெருவோரம் கொட்டப்பட்டுள்ள குப் பைகள் முதற்கட்டமாக கண்டறியப்பட்டு அகற்றப் பட்டு வருகிறது.

    எனவே தெருவோரம் மற்றும் காலி மனைகளில் குப்பைகளை போடுபவர்கள் அதனை உடனடியாக தவிர்த்து குப்பைகளை சேகரிக்க வருபவர்களிடம் கொடுக் குமாறு அறிவுறுத்தப்படுகி றது. மேலும் சாலையோர வியாபாரிகள் தங்களிடம் உருவாகும் குப்பைகளை குப்பைத்தொட்டிகள் அமைத்து சேகரித்து வியாபாரம் முடிந்த பின்னர் அருகில் இருக்கும் நகராட்சியின் குப்பை தொட்டியில் கொட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இதனை பின்பற்றாமல் சுற்றுப்புறத்தை அசுத்தம் செய்பவர்கள் மீது கடு மையான நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும்.மேலும் தங்கள் பகு தியில் தினமும் குப்பை களை சேகரிக்க வாகனம், ஊழியர்கள் வரவில்லை என்றால் 18004255119 என்ற இலவச எண்ணில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை தெருக்களில் கொட்டாமல் பசுமை மறுசுழற்சி மையங்களில் ஒப்படைக்கலாம்.
    • குப்பைகளை எக்காரணம் கொண்டும் நகராட்சி பகுதியில் எரிக்க கூடாது என நகராட்சி சேர்மன் தெரிவித்துள்ளார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சங்கரன்கோவில் நகராட்சியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தேவையற்ற குப்பைகள் மற்றும் பொருட்களை எரிக்ககூடாது எனவும், நகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகையை சுற்றுச்சூழல் மற்றும் மாசு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் புகையில்லா பொங்கலாக கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    மேலும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தங்கள் வீடுகளில் சுத்தம் செய்து அகற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை தெருக்களில் கொட்டாமல் அவற்றை வாரச்சந்தை ரோடு, திருவேங்கடம் சாலை உரக்கிடங்கு மற்றும் பி.எஸ். நகர் பகுதிகளில் உள்ள நகராட்சி எம்.சி.சி. பசுமை மறுசுழற்சி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 2 மணி வரை ஒப்படைக்கலாம்.

    மேலும் டயர், துணி மற்றும் பழைய குப்பைகளை எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளதால் எக்காரணம் கொண்டும் நகராட்சி பகுதியில் குப்பைகளை எரிக்க கூடாது எனவும், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த பணிகளை நகராட்சி கமிஷனர் (பொ) ஹரிஹரன் தலைமையில் நகராட்சி சுகாதார அலுவலர் பாலசந்தர் முன்னிலையில் நகராட்சி ஆய்வாளர்கள் கருப்பசாமி, மாரிமுத்து, மாரிச்சாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கண்ட பணியை கண்காணித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    வெளிநாடுகளில் பிரபலமடைந்து வரும் சைக்கிள் ஷேரிங் திட்டத்தை சென்னையில் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. #BiCyclesharing
    சென்னை:

    நகர்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாக்க சென்னை மாநகராட்சி சார்பில் “மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்து கொள்கை” உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தியாகராயநகர், பாண்டிபஜார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் நடந்து செல்வோருக்கு நடைபாதைகள், சைக்கிள் பாதைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    வெளிநாடுகளில் பிரபலமடைந்து வரும் சைக்கிள் ஷேரிங் திட்டத்தை சென்னையில் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இந்த சேவையை ஜெர்மனி நிறுவனத்தின் கூட்டு நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக மெரினா, பெசன்ட்நகர், அண்ணாநகர் ஆகிய 3 இடங்களில் ‘சைக்கிள் ஷேரிங்’ மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.

    சைக்கிளின் மையங்கள் திறக்க 440 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் 2,500 சைக்கிள்கள், ஜூன் மாதத்திற்குள் மேலும் 2500 சைக்கிள்கள் என மொத்தம் 5 ஆயிரம் சைக்கிள்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

    சைக்கிள் பயணத்திற்கு முதல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் தலா ரூ.9 கட்டணம் வசூலிக்கப்படும்.

    மேலும் ரூ.49 செலுத்தி ஒருநாள் முழுவதும் சைக்கிளை பயன்படுத்தும் வசதி, நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.249, 3 மாதங்களுக்கு ரூ.699 கட்டணத்தில் பயன்படுத்தும் வசதிகளும் உள்ளன. இந்த கட்டணங்களுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.

    இந்த சைக்கிள்களில் ஜி.பி.எஸ். வசதி உள்ளது. அதனால் இந்த சைக்கிள்கள் இருக்கும் இடத்தை எளிதில் அறிய முடியும். இத்திட்டத்தை காவல்துறை உதவியுடன் இணைந்து மேற்கொள்கிறோம். இந்த சேவையை ஸ்மார்ட் மொபைல் போன் செயலி வழியாக பெற முடியும். அந்த செயலி மூலமாக சைக்கிளை பூட்டவும், திறக்கவும் முடியும்.


    இந்த திட்டத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் இடம் மட்டுமே தருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் தன் சொந்த செலவில் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.

    சேவை நிறுவனத்துக்காக 3 இடங்களில் சைக்கிள் பழுது பார்க்கும் பணிமனைகள் அமைக்கவும் ஒரு இடத்தில் கட்டுப்பாடு அறை அமைக்கவும், மாநகராட்சி இடம் வழங்க உள்ளது. ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மிகுந்த கவனத்துடன் திட்டங்களை வகுத்து வருகிறோம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர். #BiCyclesharing #ChennaiCorporation
    ×