என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dr.BA.Sivanthi Adhithanar"
- சுரண்டை எஸ்.வேலாயுத நாடார் கோமதியம்மாள் அறக்கட்டளை சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- நற்பணி மன்ற தலைவர் எஸ். வி.கணேசன் தலைமை தாங்கி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார்.
சுரண்டை:
தென்காசி மாவட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம், சுரண்டை எஸ்.வேலாயுத நாடார் கோமதியம்மாள் (எஸ்.வி.ஜி) அறக்கட்டளை சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் எஸ். வி.கணேசன் தலைமை தாங்கி அலங்கரிக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.
சுரண்டை நாடார் வாலிபர் சங்க செயலாளர் ஆர்.வி.ராமர், பொருளாளர் ஜி.எஸ்.எஸ். அண்ணாமலைகனி, துணை செயலாளர் எஸ்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் கே.டி.பாலன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சுரண்டை நகராட்சி தலைவர் எஸ். பி.வள்ளி முருகன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் கவுரவ ஆலோசகர் அனிதாசெல்வன், இந்திய நாடார் பேரமைப்பு தென்காசி மாவட்ட தலைவர் எஸ். ஆனந்த் காசிராஜன், சி.எம்.சங்கர், சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கை.சேர்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.
- காமராஜ் நகர் பகுதி அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
- நற்பணி மன்ற நிர்வாகிகள் மாயாண்டி பாரதி, பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு பாவூர்சத்திரம் காமராஜ் நகர் பகுதியில் இயங்கிவந்த அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு கேக் வெட்டி இனிப்புகள்,பழங்கள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் மன்றத்தின் நிர்வாகிகளான மாயாண்டி பாரதி, பரமசிவம், ஈஸ்வர பாண்டியன், பால் கண்ணன் உறுப்பினர்கள் சேர்ம ராஜா, முத்துக்குமார், சக்திவேல் என்ற ஜெகன், சண்முகராஜ், சுபாஷ் மற்றும் சிவந்தி ஆதித்தனார் கால்பந்தாட்ட அணி வீரர்களான மணி கிருஷ்ணா, அஜித்குமார், வின்ஸ்டன், ராகவா, ராம் குட்டி, சதீஷ், சிவந்தி ஆதித்தனார் கபாடி அணி வீரர்கள் காமராஜ், முத்து, பிரபு, வெண்ணிக் குமார் செல்வகுமார், அங்கன்வாடி குழந்தைகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்