என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Deepika
நீங்கள் தேடியது "Deepika"
- பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே திருப்பதி சென்றுள்ளார்.
- இவரின் புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் அதிகம் லைக் செய்யப்படுகின்றன.
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இவர் பாலிவுட்டில் மிகவும் பிசியாக உள்ளார். அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தீபிகா படுகோனே கிராமிய பாடகர் மேமே கான் பாடலுக்கு நடனமாடினார்.
இந்நிலையில், தீபிகா படுகோனே திருப்பதி சென்றுள்ளார். இன்று அதிகாலை விஜபி தரிசனம் செய்ததை அடுத்து தேவஸ்தானம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர், தரிசனம் முடிந்து வெளியே வந்த தீபிகா படுகோனேவுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, பொய் தகவல்களை தடுக்க இணையதளம் ஒன்றை தொடங்க இருக்கிறார். #DeepikaPadukone
ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனே தொடர்ந்து நடிக்க கதைகள் கேட்டு வருகிறார். ஆனால் சரியான கதைகள் அமையவில்லை. கணவர் ரன்வீர் சிங் நடிக்கும் 83 என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இது 1983 -ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற நிகழ்வின் அடிப்படையில் அமைந்த கதை. கேப்டன் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் நடிக்கிறார். திருமணமாகி விட்டதால் இனி முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பது என்பது அரிதான ஒன்று என்பதை புரிந்துகொண்ட தீபிகா, அடுத்த கட்டமாக தனக்காக தனி இணையதளம் ஒன்றை தொடங்க உள்ளார்.
தன்னைப் பற்றி நிறைய பொய் தகவல்கள் வருவதால் இந்த இணையதளத்தை தொடங்க உள்ளதாக கூறும் அவர் இதில் தன்னைப் பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட இருக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். #DeepikaPadukone #Deepika
ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
பத்மாவத் படத்தில் ராணி பத்மினியாக வந்து மேலும் பிரபலமானார். இந்த படத்தில் சர்ச்சைகளையும் சந்தித்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் சில நாட்கள் போலீஸ் பாதுகாப்பும் அளித்தனர்.
இப்போது ஒரு படத்துக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார். பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் அவருக்கு காதலும் வந்துள்ளது. இருவருக்கும் இத்தாலியில் வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடக்க உள்ளதாகவும் திருமண ஏற்பாடுகளில் இருவரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிரிப்பிள் எக்ஸ் ஹாலிவுட் படத்தில் நடித்து இருந்த தீபிகா படுகோனே அதன் அடுத்த பாகத்திலும் இப்போது நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த தகவலை படத்தின் இயக்குனர் டி.ஜே.கருசோ வெளியிட்டு உள்ளார். சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கேள்விக்கு பதில் அளித்தபோது இதனை அவர் தெரிவித்தார்.
வின்டீசல், சாமுவேல் ஜாக்சன், டோனி யென் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது. பிரியங்கா சோப்ராவும் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் படத்துக்காக இந்தியில் சல்மான்கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். #DeepikaPadukone
தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள் பலர் படங்கள் தயாரிக்கிறார்கள். நடிகைகளுக்கும் இந்த ஆசை வந்து தயாரிப்பில் இறங்க கதை கேட்கிறார்கள்.
இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே விரைவில் தயாரிப்பாளராக மாறப்போவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளேன். படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. சினிமா எனக்கு நிறைய கொடுத்து உள்ளது. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு காட்டுகிறார்கள். பத்மாவத் படம் வசூல், கான் நடிகர்களை மிஞ்சிவிட்டது என்று பேசினார்கள். அதற்கு காரணம் ரசிகர்கள்தான்.
அவர்களுக்கு என்னால் என்ன திருப்பி கொடுக்க முடியும்? எனக்கு தெரிந்தது சினிமா மட்டும்தான். எனவே நல்ல படங்கள் தயாரித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த முடிவு செய்துள்ளேன். வித்தியாசமான படங்களை தயாரித்து திரைக்கு கொண்டு வருவேன்.” இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X