search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cinema Gossip"

    • இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருவரது புகைப்படமும் இல்லை.
    • இருவருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது.

    இந்தி திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகாபடுகோனே கர்ப்பம் அடைந்ததாக சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

     இந்தநிலையில் தீபிகா படுகோனே ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருவரது புகைப்படமும் இல்லை. இதை தொடர்ந்து இருவருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது. இது பற்றி அவரது தரப்பு கூறுகையில்:-

    ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் ஒரு அமைதியான பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். மற்றபடி அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. வரப்போகும் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    வாழ்க்கையில் இப்போது அவர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் மிகவும் அழகாக வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையை எதிர்நோக்கி இந்த தருணத்தில் காத்திருக்கின்றனர் என்றனர்.

    இந்நிலையில் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் ஒரு சுற்றுலாவில் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

    நான்கெழுத்து நடிகை ஒருவர் தனது ரூட்டை மாற்றி காமெடி பக்கம் திரும்ப முடிவு செய்துள்ளாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள நான்கெழுத்து நடிகை பற்றி காதல் கிசுகிசு தான் அடிக்கடி வருமாம். இதனால் நாயகிக்கு படவாய்ப்புகள் குறைந்ததால், காதலை மறைத்து வந்தாராம்.

    நாயகி நடிப்பில் தற்போது சில படங்கள் தயாராகி இருக்கிறதாம். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பேய் படம் ஒன்றுக்கு போதிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லையாம். இதனால் வருத்தப்பட்ட நடிகை இனி பேய் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளாராம்.

    தனது ரூட்டை மாற்றி, அடுத்ததாக காமெடி படமொன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நம்பர் நடிகை மீண்டும் காதலில் விழுந்திருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளுள் ஒருவரான பிரபல மூன்றெழுத்து நடிகைக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையாம். திருமணம் பற்றி கேள்வி கேட்டாலே, ‘டென்ஷன்’ ஆகிற அந்த நடிகை, சமீபத்தில் திருமணத்துக்கு சம்மதம் சொன்னதால், நடிகையின் வீட்டில் மாப்பிள்ளை வேட்டையை தீவிரப்படுத்தினார்களாம்.

    நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகை தான் ஒப்பந்தமான படங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்.

    இந்த நிலையில், நடிகையின் தற்போதைய ஸ்டேட்டஸ் பற்றி சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, நாயகி காதலில் விழுந்திருப்பதாக கூறினாராம். அதேசமயம் திருமணம் பற்றி கேட்டதற்கு ஏதோ சொல்லி குழப்பியிருக்கிறாராம். எனினும் நாயகி காதலில் விழுந்திருப்பது உறுதியாகியிருப்பதால், அவரது காதலர் யார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.

    தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகை ஒருவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வரும் நிலையில், திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டாராம்.
    விரல் வித்தை நடிகர் அறிமுகமான காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாராம் அந்த மூன்றெழுத்து நடிகை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வந்த நடிகை சமீபகாலமாக நடிப்பதை தவிர்த்து வருகிறாராம்.

    நடிப்பதை விட படங்களை தயாரிப்பதை தான் விரும்புவதாக கூறுகிறாராம். நாயகியின் திருமணம் பற்றி பலரும் கேள்வி கேட்க, திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றும், திருமணமே தான் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் நடிகை கூறிவிட்டாராம்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்வீட் கடை நடிகை இனி தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிக்கவே விரும்புகிறாராம்.
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்வீட் கடை நடிகைக்கு, சமீபத்தில் எந்த தமிழ் படமும் ரிலீசாகவில்லையாம். நாயகி தெலுங்கில் நடித்த படங்கள் வெளியாகுவதால் நாயகி மகிழ்ச்சியில் இருக்கிறாராம். எனினும் தமிழ் சினிமாவையும் விடவும் நாயகிக்கு மனமில்லையாம்.

    நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் அவர் நடித்திருக்கும் படமும், கோமாளியான நடிகருடன் அவர் நடித்துள்ள படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறாராம். இந்த நிலையில், தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வராததால், சமீபத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் கசியவிட்டாராம்.

    நாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமில்லாமல், மற்ற நடிகைகளை போல தானும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பதே நாயகியின் எதிர்பார்ப்பாக உள்ளதாம். தாமதமானாலும் அதுமாதிரி படங்களில் நடிக்கவே அவர் முடிவு செய்திருக்கிறாராம்.

    குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்திருக்கும் நடிகை ஒருவர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தயங்குகிறாராம்.
    மாயமான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைக்கு வாழ்க்கை வரலாற்று படம் ஒன்று பெரிய அளவில் கைகொடுத்ததாம். அந்த படத்திற்கு பிறகு நடிகையின் பெயரும், மார்க்கெட்டும் விரிந்ததாம். 

    எனினும், அவரது அடுத்தடுத்த படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லையாம். அதன்பிறகு சிறு இடைவேளை எடுத்துக்கொண்ட நடிகை தற்போது வட இந்தியா பக்கம் சென்றுவிட்டாரம். இந்த நிலையில், பிரபல தமிழ் பட இயக்குனர் ஒருவர் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாம்.

    இந்த நிலையில், மற்ற முன்னணி நடிகைகளை போல தானும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிக்க விரும்புகிறாராம். அதேநேரத்தில் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க நடிகை தயக்கம் காட்டுவதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.

    தமிழில் முக்கிய நடிகையாக வலம் வந்த பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில், தனது வேதனையை பதிவு செய்திருக்கிறாராம்.
    ஒல்லி நடிகருக்கு ஜோடியாக அறிமுகமானாராம் காதல் கொண்ட நடிகை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மற்ற தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்தாராம். தமிழில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரையே காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்களாம்.

    பின்னர் நாயகி நடிப்பில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்தாராம். இந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறாராம். நாயகியாக மட்டுமில்லாமல், முக்கிய வேடத்திலும் நடிக்கிறாராம். சமீபத்தில் நாயகி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லையாம்.

    இந்த நிலையில், தான் அம்மாவாக நடிக்க தயார், ஆனால், தனது வயதுடைய நடிகர்களுக்கு என்னை அம்மாவாக நடிக்க சொல்வது தான் என்னை எரிச்சலாக்குகிறது என்று நாயகி வேதனையுடன் புழம்பியிருக்கிறாராம்.

    இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் உச்ச நடிகர் ஒருவருக்கும், அவரது படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாம். #Gossip
    இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் உயர்ந்த நடிகர், முதல்முறையாக தமிழில், குஷியான இயக்குநருடன் இணைந்து நடிக்கிறாராம். படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், உச்ச நடிகர் படத்தில் இருந்த விலகியதாக சிலர் வதந்திகளை கிளப்பி விட்டார்களாம்.

    இதையடுத்து, உச்ச நடிகர் படத்தில் இருந்து விலகவில்லை என்றும், தயாரிப்பு நிறுவனத்துக்கும், அவருக்கும் ஏதோ பிரச்சனை, அதனை விரைவில் சரி செய்து படப்பிடிப்பு விரைவில் தொடங்குவோம் என்றும் குஷியான இயக்குநர் நடிகர் கூறியுள்ளாராம். #Gossip
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முயற்சித்து வரும் மூன்றெழுத்து நடிகர் திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் மாறியிருக்கிறாராம். #Gossip
    தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு பிரியாணி கொடுத்த நடிகர் என்று பிரபலமான மூன்றெழுத்து நடிகருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாம். அவருடன் இணைந்து நடித்த பிரபல நடிகையையே திருமணம் செய்து கொண்டாராம்.

    அவர் இதுவரை பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கான இடம் இன்னமும் கிடைக்கவில்லையாம். எனினும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாத நடிகர் இனி புது படங்களை ஒப்புக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துகிறாராம். நல்ல கதையம்சம், ரசிகர்களை கவரும் கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டுமே, படங்களில் நடிக்க சம்மதிக்கிறாராம். #Gossip

    தமிழ் சினிமாவில் பிரபலமான வளர்ந்து வரும் நடிகரும், நடிகையும் தங்களது காதலை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். #Gossip
    ஒரு இயக்குநரின் பெயரையும், அப்பாவின் பெயரையும் தனது பெயராக வைத்திருக்கும் நாயகன் சத்தமில்லாமல் சினிமாவில் வலம் வருகிறாராம். அவரது நடிப்பில் வரும் படங்களும் சத்தமில்லாமல் வந்து செல்கிறதாம்.

    அவருக்கும் அவரது நீண்ட நாள் தோழியுமான பிரியமான நடிகையும் காதலித்து வந்தார்களாம். தொடர்ந்து படங்களிலும் இணைந்து நடித்தார்களாம். 

    இருவருக்குமே பட வாய்ப்புகள் குறைந்ததற்கு அவர்களின் காதலும் ஒரு காரணம் என்று கூறினார்களாம். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக தகவலும் வெளியானதாம்.

    ஆனால் இருவரும் நட்புடன் தான் இருக்கிறார்களாம். ஆனால் வெளியே இருவரும் பிரிந்து இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்களாம். இரண்டு பேரும் நடித்து சம்பாதித்தபின், தகுந்த நேரம் பார்த்து தங்களின் காதலையும், திருமண தகவலையும் அறிவிப்பார்களாம். #Gossip

    முன்னணி நடிகை ஒருவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில், சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் திருமணம் செய்து கொள்வதாக கூறியிருக்கிறாராம். #Gossip
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நான்கெழுத்து வெள்ளை நடிகை தெலுங்கு சினிமாவிலும் ஒரு ரவுண்டு வந்தாராம். தற்போது தமிழ் படங்களுக்கே அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

    புதுசு புதுசாக புதுமுகங்கள் வந்து இறங்கி கொண்டிருப்பதால், போட்டியை சமாளிக்க தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் அவர் தயாராகி இருக்கிறாராம்.

    இந்த நிலையில், பெற்றோர் அவருக்கு திருமண பேச்சுவார்த்தை நடத்த, பட வாய்ப்புகள் வந்தால் சினிமா, இல்லையென்றால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெற்றோர்களிடம் வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம். #Gossip

    பொதுவாக நடிகைகள் படவாய்ப்பு இல்லாமல் கவர்ச்சிக்கு மாறும் நிலையில், கவர்ச்சி இருந்தால் நடிக்க தயார் என்று கூறும் நாயகியை பார்த்திருக்கிறீர்களா என்று இயக்குநர் ஒருவர் ஆச்சரியப்பட்டுள்ளாராம். #Gossip
    தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் பெரிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் ரசிகர்களை கவர்ந்த மூன்றெழுத்து நடிகை, பெண் இயக்குநர் படத்தில் நடித்து சமீபத்தில் வெளியான படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததாம். படத்தில் நாயகி படு கவர்ச்சியாக நடித்திருந்தாராம்.

    இந்த நாயகியா இப்படி என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், அவரது அடுத்தடுத்த படங்கள் எல்லாம் வித்தியாசமானதாக இருக்கும் அவரே கூறினாராம்.

    நாயகியை சந்தித்து கதை சொல்லப் போகும் இயக்குநர்களிடம் நாயகி படத்தில் கவர்ச்சியான சீன்கள் இருக்கிறதா? இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கிறதா? என்றுதான் முதலில் விசாரிக்கிறாராம். இருக்கிறது என்றால், உடனே கால்ஷீட் கொடுத்து விடுகிறாராம். இல்லையென்றால், சில கவர்ச்சியான காட்சிகளை படத்தில் சேர்த்துக் கொள்ள சொல்கிறாராம். இப்படி ஒரு நாயகியா என்று இயக்குநர் ஆச்சரியப்படுகிறாராம்.

    ×