search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Christian Priests"

    • 4 கால வேள்வி பூஜைகள் முடிவுற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தது.
    • பாதிரியார்கள் இருவரும் கோவில் கோபுரத்தின்மீது ஏறி கலசத்துக்கு புனித நீர் ஊற்றுவதை ஆர்வமுடன் பார்த்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி, வரசித்தி விநாயகர், மஹா மாரியம்மன். வீரனார் மற்றும் ஊருக்கு வெளியே காட்டில் காவல் காக்கும் அய்யனார் கோவில் என 3 கோவில்கள் அப்பகுதி மக்களால் திருப்பணி செய்யப்பட்டது.

    இதையடுத்து கும்பாபிஷேக பணிகள் தொடங்கின. இதன் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 4 கால வேள்வி பூஜைகள் முடிவுற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தது.

    இதனையடுத்து ராஜகணபதி, வரசித்தி விநாயகர், மஹா மாரியம்மன், வீரனார் மற்றும் ஐயனார் கோயில் கலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். இதைத்தொடர்ந்து நெல் பூக்கள் நவதானியங்களுடன் புனித நீரானது பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவர்களுக்கு அபிஷேகம் மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

    இதில் கிராம நாட்டாண்மைகள், மண்டகபடி வகையறாவினர், நடுவலூர் ஜல்லிக்கட்டு பேரவை உட்பட 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் கிறிஸ்துவ பாதிரியார்கள் ராபர்ட், ஜோசப் தன்ராஜ் ஆகியோர் பங்கேற்றது.

    இது மதநல்லிணத்தை எடுத்துக்கட்டும் விதமாக அமைந்தது. கும்பாபிசேகம் நடைபெறும்போது பாதிரியார்கள் இருவரும் கோவில் கோபுரத்தின்மீது ஏறி கலசத்துக்கு புனித நீர் ஊற்றுவதை ஆர்வமுடன் பார்த்தனர்.

    இந்து கோவில் கும்பாபிஷேகத்தில் கிருஸ்வர்கள் கலத்து கொண்டது மத நல்லிணக்கத்தையும், கிராம மக்களின் ஒற்றுமையும் எடுத்துக்காட்டுவதாக பக்தர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

    குழந்தைகள் கல்வி குறித்து சிந்திக்க வேண்டியவர்கள் செக்ஸ் தொல்லை கொடுத்திருப்பதால் கிறிஸ்தவ மதகுருக்களுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் எச்சரிக்கை விடுத்தார். #PopeInIreland
    டூப்ளின்:

    போப் ஆண்டவர் பிரான்சிஸ் 39 ஆண்டுகளில் முதன் முறையாக அயர்லாந்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதை தொடர்ந்து நடந்த விழாவில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்து கொண்டு பேசினார்.

    அயர்லாந்தில் குழந்தைகளுக்கு கிறிஸ்தவ மதகுருக்களால் நிகழ்த்தப்பட்ட வெறுக்கத்தக்க (‘செக்ஸ்’) குற்றங்கள் குறித்து கத்தோலிக்க திருச்சபைகள் போதுமான அளவு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. அதற்காக வெட்கப்படுகிறேன் என்றார்.

    அதற்கு முன் அவர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதம் குறித்து பேசினார். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்து கவனத்தில் கொள்ள வேண்டிய கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்கள் அவர்களை பாலியல் (செக்ஸ்) துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

    இந்த கொடூர நிகழ்வு குறித்து நான் பேசாமல் இருக்க போவதில்லை. பேராயர்கள், மதகுருக்கள், பாதிரியார்கள் போன்ற திருச்சபை ஊழியர்கள் இம்மாதிரியான வெறுக்கதக்க குற்றங்கள் மீது போதுமான நடவடிக்கை எடுக்காததால் அது நியாயமான பெரும் சீற்றத்தை எழுப்பியுள்ளது.

    அது கத்தோலிக்க மக்களுக்கு வலியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதை நானும் உணர்கிறேன். எந்த சூழ்நிலையிலும் இம்மாதிரியான குற்றங்கள் தேவாலயங்களில் நடைபெற அனுமதிக்க போவதில்லை என்றும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் எச்சரிக்கை விடுத்தார். #PopeInIreland #PopeFrancis
    ×