search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai People"

    • கடல்போல் காட்சி அளித்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காட்சி அளிக்கிறது.
    • வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5 அடியாகும்.

    சென்னை:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். 16 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தாலுகாகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

    மேலும் சென்னை மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் வீராணம் ஏரிக்கு முக்கிய பங்கு உள்ளது. அதாவது வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், காவிரியில் இருந்து தண்ணீர் வராததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது. இதனால் கடந்த மாதம் பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    கடல்போல் காட்சி அளித்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காட்சி அளிக்கிறது. இதனால் கடந்த 2 வாரத்துக்கு முன்பு சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கி இருப்பதால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியாத காலங்களில் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவன சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை அனுப்புவது வழக்கம். அதன்படி என்.எல்.சி. சுரங்க நீரை வடலூா் அருகே உள்ள வாலாஜா ஏரியில் தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5 அடியாகும். தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் 50 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து பரவனாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு தனி கால்வாய் வெட்டி அதில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் வீராணம் குழாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வீராணம் ஏரி கைவிட்டபோதிலும் சென்னை மக்களின் தாகத்தை என்.எல்.சி. சுரங்க நீர் தீர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் பற்றாக்குறையால், லாரி தண்ணீருக்கு பொதுமக்கள் 12 நாட்களாக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகள் உள்ளிட்ட முக்கிய ஏரிகள் கடும் கோடையால் வறண்டு விட்டன.

    பொதுமக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் தண்ணீரை தேடி வீதி வீதியாக அலைந்து வருகிறார்கள்.

    தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கல்குவாரி தண்ணீர், வீராணம் தண்ணீர், திருவள்ளூர் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து சென்னை நகர மக்களுக்கு சப்ளை செய்து வருகிறார்கள். இருந்த போதிலும் குடிநீர் பற்றாக்குறையால் சென்னை மாநகர பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சென்னை மாநகர மக்களுக்காக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. லாரி தண்ணீருக்கு பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    குடிசை பகுதி மக்களுக்கு லாரி தண்ணீர் இலவசமாக வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் 3282 லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    வீடுகளுக்கு லாரி தண்ணீர் கேட்டு பதிவு செய்துள்ளவர்கள் 12 நாட்களாக காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து கோடம்பாக்கத்தை சேர்ந்த குடியிருப்புவாசி கோபி கூறியதாவது:-

    பருவமழை சரியாக பெய்யாததாலும் கடும் கோடை வெயிலாலும் சென்னை மாநகர மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறோம். நிலத்தடி நீர்மட்டம் 300 அடிக்கு கீழே சென்றுவிட்டது.

    குடிதண்ணீர் தேவைக்காக லாரி தண்ணீரை நம்பி இருக்கிறோம். லாரி தண்ணீர் கேட்டு பதிவு செய்து 12 நாட்களுக்கு காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அன்றாட பணிகள் செய்ய முடியவில்லை. தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க புதிய மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். கூடுதல் லாரிகள் மூலம் வீடுகளுக்கு லாரி தண்ணீர் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×