search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai police commissioner"

    • சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது.
    • குழந்தை கடத்தல் குறித்த தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

    குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் குழந்தை கடத்தல் குறித்து தேவையற்ற வதந்திகளை யாரும் பகிர வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், பர்தா அணிந்து பெண் வேடமிட்ட ஆண்கள் சுற்றி வருவதாகவும், இக்கடத்தலுக்காக வடமாநிலங்களில் இருந்து 400 பேர் தமிழகத்தில் குவிந்துள்ளதாகவும், கடத்தப்படும் சிறுவர், சிறுமிகளின் உடல் உறுப்புகளை ஒரு கும்பல் எடுப்பதாக கூறப்படும் தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வருகின்றன

    இதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் கடத்தல் என்ற வதந்திகளை பரப்புபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சைபர் கிரைம் குறித்த ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதுபோன்ற ஹேக்கத்தான் போட்டிகளில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் யுக்திகளையும் கண்டுபிடித்து வருகின்றனர். அவை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். குழந்தை கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அதே போல் உண்மையில்லாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம்." என்று அவர் தெரிவித்தார்.

    சென்னை முழுவதும் செப்டம்பர் மாத இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடையும் என சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று தெரிவித்தார்.
    சென்னை :

    சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகம், நடைபாதை, உடற்பயிற்சி கூடத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் திறந்து இன்று வைத்தார்.

    அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில், ‘ வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். சென்னை மக்கள் அனைவரும் ஆர்வமுடன் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.

    தங்கள் வீட்டை பார்பத்து இருப்பது போல் மட்டும்  சி.சி.டி.வி கேமராக்களை அமைக்காமல் வீடு அமைந்துள்ள தெருவை கண்காணிக்கும் விதத்திலும் கேமாரக்களை பொருத்த வேண்டும்.

    காவலர்கள் படிப்பதற்காக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் திறக்கப்பட்ட நூலகம் போன்று அனைத்து காவல்நிலையங்களிலும் நூலகங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என அவர் தெரிவித்தார்.

    காவலர்கள் படிப்பதற்கென பிரத்யேகமாக காவல்நிலையத்தில் நூலகம் திறக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    ×