search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "babri masjid demolition"

    • ராம ஜென்மபூமி இயக்கம் தொடர்பாக பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, இந்துத்துவா அரசியல் பற்றிய குறிப்புகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது.
    • ஜனநாயக உரிமைகள்" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில், குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன

    கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரம் ஆகிய பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.

    அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் 8வது அத்தியாயத்தில், ராம ஜென்மபூமி இயக்கம் தொடர்பாக பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, பாஜகவின் எழுச்சி, இந்துத்துவா அரசியல் பற்றிய குறிப்புகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது.

    பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தம் என கொடுக்கப்பட்ட தீர்ப்பில் இருந்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்சிஇஆர்டி கூறியுள்ளது.

    மேலும், காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, 1990-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன், 1991 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பான பகுதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    "மதச்சார்பின்மை" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில் "2002 இல் குஜராத்தில் கோத்ரா கலவரத்திற்குப் பின்பு 1,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவற்றில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள் என்ற வாக்கியம், 2002ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரத்தின் போது 1,000-த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்" என மாற்றப்பட்டுள்ளது.

    ஜனநாயக உரிமைகள்" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில், குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன

    இந்தப் புதிய மாற்றங்களை 2024- 25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த என்.சி.இ.ஆர்.டி திட்டமிட்டுள்ளது.

    பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுவதையொட்டி குமரி மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    நாகர்கோவில்:

    பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இது போல் குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அதாவது மாவட்டம் முழுவதிலும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    குறிப்பாக பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் அதிகப்படியான போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதிலும் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் முக்கியமாக ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்காக ரெயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் இந்த மெட்டல் டிடெக்டர் வழியாக தான் செல்ல வேண்டும்.

    மேலும் சந்தேகப்படும் படியாக யாரேனும் வந்தால் அவர்களில் உடமைகளை சோதனை செய்யவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ரெயில் தண்டவாளங்கள் மற்றும் ரெயில்வே பாலங்களையும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அதோடு மட்டும் அல்லாது கடல் வழி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலுக்கு படகில் சென்று கண்காணித்து வருகிறார்கள். சர்வேதச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அங்குள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றார்கள்.
    ×