search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BCA"

    • கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக உள்ளனர்.
    • கட்-ஆப் மார்க் 99-100 வரை செல்ல வாய்ப்பு.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து மாணவர்கள் உயர் கல்வியில் சேருவதற்கான நடை முறைகளை பின்பற்றி வருகின்றனர். வழக்கம்போல இந்த ஆண்டும் கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக உள்ளனர்.

    என்ஜினீயரிங், கலை அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் உற்சாகத்துடன் விண்ணப்பிக்கின்றனர். இந்த ஆண்டு வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் பாடங்களில் சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    அதனால் கட்-ஆப் மார்க் 99-100 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்திற்கும் மேலான இடங்கள் உள்ளன. பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ. உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் சேருவதற்கு போட்டி போட்டு விண்ணப்பிக்கின்றனர்.

    அரசு கலைக் கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் படிக்க ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிப்பதற்கு வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அரசு கல்லூரிகளை நாடுகின்றனர்.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தால் போதும். படிப்பு செலவு (சுமை) இல்லாமல் போய் விடும் என பெற்றோர்கள் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பி.காம் (பொது), பி.காம் (நிதி), கார்பரேட் மற்றும் பி.ஏ. ஆங்கிலம், வரலாறு, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளை தெரிவு செய்து இடங்களை புக் செய்து உள்ளனர்.

    சென்னையில் உள்ள டாப் கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் பிடிக்க அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் செல்வாக்கை பயன்படுத்தி சிபாரிசு கடிதம் பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

    லயோலா கல்லூரி, டி.ஜி. வைஷ்ணவக் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி, ஸ்டெல்லா மேரி உள்ளிட்ட சில கல்லூரிகளில் பி.காம் இடத்திற்கு அலை மோதுகிறார்கள்.

    கட்-ஆப் மார்க் அடிப் படையில் மாணவர் சேர்க்கை என்றாலும் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி எப்படியாவது இடம் வாங்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.

    இதுதவிர பாரதி மகளிர் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, மாநில கல்லூரி போன்ற அரசு கலைக் கல்லூரிகளுக்கும் எம்.பி., எம்.எல்.ஏ. அமைச்சர்களின் சிபாரிசு கடிதம் பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.

    ஒரு சில கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டு உள்ளது. அதற்கும் போட்டி ஏற்பட்டு உள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இது வரையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டு மாதத்திற்கு முன்பு தேர்வுக்குழு உறுப்பினராக இருந்து எம்எல்ஏ மகன் ஒருவர், தற்போது சீனியர் அணி வீரராக தேர்வு செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. #BCA
    பீகார் ரஞ்சி டிராபி அணி உள்ளூர் தொடர்களில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், லோதாக கமிட்டியின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஓட்டுதான் போன்ற பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் ஏற்றது.

    இதற்கிடையில் வடகிழக்கு மாநிலம், யூனியன் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் ரஞ்சி டிராபியில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வருடத்தில் இருந்து பீகார் அணி ரஞ்சி டிராபியில் விளையாட இருக்கிறது.

    பாட்னா சென்ட்ரல் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ அருண் குமார் சிங்கா. இவரது மகன் ஆஷிஷ். 28 வயதாகும் இவர் கடந்த 2010-ம் ஆண்டு ரஞ்சி டிராபியில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடினார். அப்போது ராஜஸ்தானை எதிர்த்து விளையாடினார். அதில் முதல் இன்னிங்சில் 16 ரன்களும், 2-வது இன்னிங்சில் 12 ரன்களும் அடித்தார். இந்த ஒரு போட்டியில் மட்டும்தான் அவர் விளையாடியுள்ளார்.

    அதன்பின் முக்கியமான தொடரில் அவர் பங்கேற்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 23 வயதிற்கு உட்பட்டோருக்கான பீகார் மாநில அணியை தேர்வு செய்யும் தேர்வாளர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார்.

    இந்நிலையில் தற்போது இரண்டு மாதங்கள் கழித்து விஜய் ஹசாரே தொடருக்கான பீகார் சீனியர் அணியில் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது சக வீரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தேர்வுக்குழுவில் இருந்தவர், தற்போது எப்படி சீனியர் அணிக்கு தேர்வாக முடியும் என்ற கேள்வி எழுந்தது.



    இந்த சர்ச்சை குறித்து ஆஷிஸ் கூறுகையில் ‘‘ஆமாம், நான் தேர்வுக் குழுவில் இடம் பிடித்திருந்தேன். தற்போது நான் அந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளேன். மேலும், நான் தேர்வுக்குழுவில் குறுகிய காலமே இடம்பிடித்திருந்தேன். அதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் ஏதும் தரப்படவில்லை. பீகார் மாநில கிரிக்கெட் சங்கம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே தேர்வாளராக இருந்தேன்.

    எல்லோருக்கும் நான் சொல்வது என்னவென்றால், நான் ஜார்க்கண்ட் அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடும்போதும் எனது தந்தை எம்எல்ஏ தான். அதனால் இது எப்படி பிரச்சனையாகும். தற்போது நான் கிளப் அளவினால் போட்டியில் அக்டிவ் ஆக உள்ளேன். பீகார் அணி மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றதும், சீனியர் அணியில் விளையாட விரும்பினேன். பீகார் அணி மீண்டும் ரஞ்சி டிராபியில் விளையாட இருக்கும் நிலையில் அனைவரும் அதற்காக பெருமைப்பட வேண்டும். மாற்றாக வீரர்கள் மீத அவதூறு மறப்பக்கூடாது’’ என்றார்.
    ×