search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto Industry"

    ட்விட்டரில் பாலியல் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்கள் நடத்தி வரும் #MeToo புகார் ஆட்டோமொபைல் துறையிலும் எழுந்துள்ளது.



    அமெரிக்காவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களின் முகத்திரையை கிழிப்பதற்காக பாதிக்கப்பட்ட பிரபலங்கள் #MeToo (நானும் பாதிக்கப்பட்டேன்) என்னும் பெயரில் ட்விட்டர் மூலம் பிரசார இயக்கத்தை தொடங்கினர். 

    அதேவேளையில், இந்திய திரையுலகிலும் இந்த #MeToo இயக்கம் வேரூன்ற ஆரம்பித்தது. பாலிவுட் நாயகி தனுஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி உள்ளிட்டோர் பரபரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

    பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ட்விட்டரில் நடத்தி வரும் மீடூ புகார், ஆட்டோமொபைல் துறையையும் விட்டுவைக்கவிலை. 




    சினிமா துறையை தொடர்ந்து, மீடூ புகார் கார்ப்பரேட் துறையிலும் பரவியுள்ளது. அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் தலைமை தகவல் பரிமாற்ற அலுவலர் சுரேஷ் ரங்கராஜன் மீது ட்விட்டரில் புகார் எழுந்துள்ளது. 

    பெண் ஊழியர்களை அச்சுறுத்தியதாக ரங்கராஜன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளன. எனினும் இந்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை இதுவரை துவங்கவில்லை. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    டாடா மோட்டார்ஸ் குழுமத்தில், பணியாளர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைத்து புகார்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்த நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. 

    மேலும் சட்டத்திற்கு உட்பட்டு உள்புற புகார் அமைப்பு மூலம் விசாரிக்கப்படுகிறது. விசாரணை நிறைவுற்றதும் முறையான நடவடிக்கை எடுக்கப்படும். என டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×