என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "america president"
- அதிபர் ஜோ பைடனின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை.
- சூழ்நிலை சரியானப் பிறகு பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் தங்கள் வீட்டிற்கு திரும்பினர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கடற்கரை வீடு உள்ள பகுதியில் தகவல் இன்றி விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் ஜோ பைடன் பாதுகாப்பான இடத்திற்கு அவசரமாக வெளியேற்றப்பட்டார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வாஷிங்டனுக்கு கிழக்கே சுமார் 200 கி.மீ (120 மைல்) தொலைவில் உள்ள டெலாவேரின் ரெஹோபோத் கடற்கரையில் உள்ள அதிபர் ஜோ பைடனின் வீட்டின் மீது தடைசெய்யப்பட்ட வான்வெளியில் ஒரு சிறிய தனியார் விமானம் ஒன்று பறந்தது. இதனால், அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவியை பாதுகாப்பான இடத்திற்கு அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும், தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. அதிபர் ஜோ பைடனின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. சூழ்நிலை சரியானப் பிறகு பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் தங்கள் வீட்டிற்கு திரும்பினர்.
மேலும், அதிபரை பாதுகாக்கும் ரசசிய சேவை, தவறுதலாக விமானத்தை தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து உடனடியாக வெளியேற்றப்பட்டது தெரியவந்தது. அமெரிக்க ரகசிய சேவை விமானியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்கா இதுவரை பின்பற்றி வந்த பல விஷயங்களை எந்த அதிபராக இருந்தாலுமே அதை மாற்றுவது இல்லை. ஆனால், டொனால்டு டிரம்ப் அதுபோன்ற விஷயங்களையும் மாற்றி வருகிறார். இது, நாட்டின் நலனுக்கு ஆபத்தான விஷயம் என்று பலரும் கருதுகின்றனர்.
இதனால் அவருடைய சொந்த கட்சியான குடியரசு கட்சியில் கூட எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தற்போது இந்த கட்சியின் மூத்த தலைவரும், செனட் உறுப்பினருமான மிட்ரூம்னி அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் போது அதில் மிட்ரூம்னியும் போட்டியிட்டார். அப்போதே மிட்ரூம்னி, டிரம்பை கடுமையாக விமர்சித்திருந்தார். டிரம்ப் ஒரு பொய்யர். போலியான மனிதர். மோசடிக்காரர் என்று அப்போது அவர் கூறினார்.
இந்த நிலையில் இப்போது கருத்து தெரிவித்துள்ள மிட்ரூம்னி, டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று கூறி இருக்கிறார்.
இதுபற்றி மேலும் கூறிய அவர், கடந்த 2 ஆண்டாக டிரம்ப் அதிபராக இருந்துள்ளார். அவர் பணியாற்றும் விதத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.
இதில் இருந்து பார்க்கும் போது அமெரிக்க அதிபர் பதவிக்கு இவர் தகுதி இல்லாதவர் என்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் அவர் எடுத்துள்ள சில நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் தகுதிக்கு மாறான விஷயமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் டிரம்பின் நடவடிக்கைக்கு குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் செனட் உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். #Trump #americapresident
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்