என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "affair couple suicide"
- மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னிகுண்டு கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி, மற்றும் மதுரை மாவட்டம், சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பது தெரிந்தது.
- கடந்த 4-ந்தேதி இருவரும் மாயமாகி இருப்பதாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ளது சிலவாட்டம் கிராமம். இங்குள்ள வயல்வெளி பகுதியில் உள்ள வேப்பமரத்தில் இன்று காலை ஒரு ஆண் மற்றும் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணமாக தொங்கிய 2 பேரின் உடலையும் மீட்டு பரிசோதனைக்காக மதுராந்தகம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் இருந்த அடையாள அட்டையில் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னிகுண்டு கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி (வயது 23), மற்றும் மதுரை மாவட்டம், சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (35) என்பது தெரிந்தது.
கடந்த 4-ந்தேதி இருவரும் மாயமாகி இருப்பதாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அருள்ஜோதியும், முத்து லட்சுமியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
தூக்குப்போட்டு தற்கொலை செய்த அருள்ஜோதியும், முத்துலட்சுமியும் உறவினர்கள் ஆவர். அருள்ஜோதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. முத்துலட்சுமிக்கு திருமணம் ஆகி கணவரும், 3 குழந்தைகளும் உள்ளனர். அருள்ஜோதி சென்னையில் தங்கி சினிமா துறையில் வேலை பார்த்து வந்து உள்ளார். உறவினர்களான இருவருக்கும் முறைதவறிய கள்ளக்காதல் ஏற்பட்டு இருக்கிறது. இதனை அறிந்த உறவினர்கள் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்ததாக தெரிகிறது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அருள்ஜோதியும், முத்துலட்சுமியும் இந்த பகுதிக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரையை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் மதுராந்தகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி காலனியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி பெயர் ஜோதி (வயது 37). கூலி வேலை பார்த்து வருகிறார். ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை அடுத்த சீரங்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (39). எலக்ட்ரீசியனாக இருந்தார். இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
ஜோதி வேலைக்கு செல்லும் இடத்தில் சுரோசும் மின்சாரம் பணி சம்பந்தமாக சென்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுவே கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலர்கள் இருவரும் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் கள்ளக்காதலர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இருவரது வீட்டிலும் விஷயம் தெரிந்ததால் அவமானமாக உள்ளது என்று புலம்பிய அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.
அத்தாணி காலனி மாதேஸ்வரன் தோட்டத்துக்கு நேற்று இரவு கள்ளக்காதலர்கள் சென்றனர். அங்கு இருந்து மின் கம்பத்தில் கொக்கி மூலம் மின்சாரத்தை எடுத்து இருவரது உடலிலும் மின் சாரத்தை பாய்ச்சினர்.
இதில் இருவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.
இன்று காலை தோட்டத்துக்கு வந்த தோட்டத்துக்காரர்கள் மேலும் அந்த வழியாக சென்றவர்களும் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்