search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adichanallur"

    • அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
    • விரைவில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது குறிப்பிட த்தக்கது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த வருடம் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணியில் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்க கால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தது.

    தற்போது அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி களை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறிய முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. அதில் ஆய்வாளர்களை ஆச்சரிய மூட்டும் விதமாக 4 வளையங்களைக் கொண்ட இந்த வெண்கல வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த முதுமக்கள் தாழி 30 சென்டி மீட்டர் அகலம் மற்றும் 58 சென்டி மீட்டர் உயரம் கொண்டது. இது வளைந்த மற்றும் விரல்தடம் பதித்த வாய்ப்பகுதி கொண்டதாக இருந்தது. இச்சிறிய அளவிலான ஈமத்தாழியில் 2, 3 ஈமப்பொருட்களே வைக்கப்பட்டிருந்தது. இதன் உள்ளே மிகச்சிறிய அளவிலான மண்டை ஓட்டின் எலும்பு மற்றும் கை எலும்பு கிடைத்தது. இதில் கண்டுபிடிக்கப்பட்ட வளையல்களானது 3.5 சென்டி மீட்டர் விட்டமும், 0.2 சென்டி மீட்டர் கன அளவும், 22 கிராம் எடையும் கொண்டு அளவுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளும் வடிவில் 4 வளைய ங்களைக் கொண்டதாக உள்ளது. இந்த வளையல் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த வெண்கல வளையல்கள் ஆகும். ஈமத்தாழி, மண்டை ஓடு, வளையல்கள் ஆகியவற்றின் அளவைக் கொண்டு இது 5 முதல் 8 வயது வரையிலான குழந்தை யுடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

    மற்றொரு முதுமக்கள் தாழியில் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த இரண்டு வெண்கலகாப்பு 2 மீட்டர் ஆழத்தில் கிடைத்தது. இந்த முதுமக்கள் தாழியில் குவளை, கிண்ணம், தட்டு, பிரிமனை போன்ற பல ஈமப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. ஈமத்தாழியின் உள்ளே மண்டை ஓடு, கைகால் எலும்புகள் உடைந்த நிலையில் கிடைத்தது. இதன் உள்ளே 4 ஈமப்பானைகள், 22 சென்டி மீட்டர் நீளமுள்ள இரும்பாலான குறுவாள், 5.5 சென்டி மீட்டர் விட்டமும், ½ சென்டி மீட்டர் கன அளவும், 24 கிராம் எடையும் கொண்ட இரண்டு காப்பு வடிவிலான வளையல்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தது. இதுவும் அளவுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளு ம் வடிவில் உருவாக்கப்ப ட்டிருந்தது.

    விரைவில் ஆதிச்ச நல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது குறிப்பிட த்தக்கது. 

    • பாராளுமன்றத்தில் மத்திய கலாச்சாரத் துறை மந்திரி கிஷன் ரெட்டி பதிலளித்தார்.
    • ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார்.

    புதுடெல்லி:

    ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியின் நிலை குறித்தும், இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களில் தமிழ் மொழியின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் தமிழகத்தின் கீழடியில் அமைக்க மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என பாராளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

    இதற்கு மத்திய மந்திரி கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வ பதிலளித்த விவரம் வருமாறு:

    தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு 5.25 ஏக்கர் நிலத்தை இந்திய தொல்லியல் துறைக்கு வழங்கியுள்ளதாகவும், அருங்காட்சியத்தைக் கட்டுவதற்கு சிறந்த கட்டிடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகப் பணிகள் மிக வேகமாக முடிக்கக்கூடிய வகையில் திட்டமிடல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு, விலைமதிப்பற்ற கல்வெட்டுகளை ஒரே தளத்தின் மூலம் தெரிந்து கொள்வதற்காக டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை கட்ட சிறந்த கட்டடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    • சி சைட் என அழைக்கப்படும் பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் உள்ள முதுமக்கள் தாழியில் தங்கத்தால் ஆன 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி, கல்லூரி முதுகலை தமிழ் இலக்கியம் பயிலும் 2-ம் ஆண்டு மாணவிகள் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையை பார்வையிட வந்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது.

    நெற்றிப்பட்டயம்

    இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 3 இடங்களில் நடந்து வருகிறது.

    சி சைட் என அழைக்கப்படும் பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் உள்ள முதுமக்கள் தாழியில் தங்கத்தால் ஆன 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே முதுமக்கள் தாழியில் வெண்கலத்தால் ஆன ஜாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஜாடியில் அலங்காரமாக சுற்றி ஐந்து இடத்தில் ஜாடியின் மேல் கொக்கு, வாத்து பறவைகள் நீர் அருந்துவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி, கல்லூரி முதுகலை தமிழ் இலக்கியம் பயிலும் 2-ம் ஆண்டு மாணவிகள் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையை பார்வையிட வந்தனர். சிவகளையில் தொல்லியல் இயக்குனர் பிரபாகரன், இணை இயக்குனர் விக்டர் ஞானராஜ் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    பின்னர் அவர்கள் ஆதிச்சநல்லூரில் தங்கம் கிடைத்த குழி, தங்க நெற்றி பட்டயம் மற்றும் வெண்கல பொருள்கள் கிடைத்த குழியை பார்வையிட்டனர். அவர்களுக்கு தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், தொல்லியல் ஆய்வாளர் யத்தீஸ் குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அதன் பின் ஆர்வத்தோடு கல்லூரி மாணவர்கள் ஆய்வாளர்களுடன் குழு படம் எடுத்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஏ.பி.சி. மகாலெட்சுமி கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் சுப்புலெட்சுமி, உதவி பேராசிரியர் புஷ்பக வல்லி, வரலாற்று துறை தலைவர் சங்கீதா, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கந்தசுப்பு, வரலாற்றுதுறை ஆசிரியர் சிவகளை மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தொல்லியல் மண்டல இயக்குனர் அருண்ராஜ் மற்றும் ஆய்வாளர் யத்தீஸ்குமார் மற்றும் தொல்லியல் குழுவினரை பாராட்டியுள்ளார்.

    தொல்லியல் ஆர்வலர்கள் சார்பிலும் ஆய்வாளர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை தாங்கினார். முனைவர் கந்தசுப்பு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×