search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Excavation work"

    • அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
    • விரைவில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது குறிப்பிட த்தக்கது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த வருடம் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணியில் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்க கால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தது.

    தற்போது அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி களை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறிய முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. அதில் ஆய்வாளர்களை ஆச்சரிய மூட்டும் விதமாக 4 வளையங்களைக் கொண்ட இந்த வெண்கல வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த முதுமக்கள் தாழி 30 சென்டி மீட்டர் அகலம் மற்றும் 58 சென்டி மீட்டர் உயரம் கொண்டது. இது வளைந்த மற்றும் விரல்தடம் பதித்த வாய்ப்பகுதி கொண்டதாக இருந்தது. இச்சிறிய அளவிலான ஈமத்தாழியில் 2, 3 ஈமப்பொருட்களே வைக்கப்பட்டிருந்தது. இதன் உள்ளே மிகச்சிறிய அளவிலான மண்டை ஓட்டின் எலும்பு மற்றும் கை எலும்பு கிடைத்தது. இதில் கண்டுபிடிக்கப்பட்ட வளையல்களானது 3.5 சென்டி மீட்டர் விட்டமும், 0.2 சென்டி மீட்டர் கன அளவும், 22 கிராம் எடையும் கொண்டு அளவுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளும் வடிவில் 4 வளைய ங்களைக் கொண்டதாக உள்ளது. இந்த வளையல் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த வெண்கல வளையல்கள் ஆகும். ஈமத்தாழி, மண்டை ஓடு, வளையல்கள் ஆகியவற்றின் அளவைக் கொண்டு இது 5 முதல் 8 வயது வரையிலான குழந்தை யுடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

    மற்றொரு முதுமக்கள் தாழியில் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த இரண்டு வெண்கலகாப்பு 2 மீட்டர் ஆழத்தில் கிடைத்தது. இந்த முதுமக்கள் தாழியில் குவளை, கிண்ணம், தட்டு, பிரிமனை போன்ற பல ஈமப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. ஈமத்தாழியின் உள்ளே மண்டை ஓடு, கைகால் எலும்புகள் உடைந்த நிலையில் கிடைத்தது. இதன் உள்ளே 4 ஈமப்பானைகள், 22 சென்டி மீட்டர் நீளமுள்ள இரும்பாலான குறுவாள், 5.5 சென்டி மீட்டர் விட்டமும், ½ சென்டி மீட்டர் கன அளவும், 24 கிராம் எடையும் கொண்ட இரண்டு காப்பு வடிவிலான வளையல்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தது. இதுவும் அளவுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளு ம் வடிவில் உருவாக்கப்ப ட்டிருந்தது.

    விரைவில் ஆதிச்ச நல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது குறிப்பிட த்தக்கது. 

    • தொல்லியல் துறை சார்பாக 2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
    • அதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டி கிராமமும் அடங்கும்.

    வள்ளியூர்:

    தொல்லியல் துறை சார்பாக 2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நெல்லை மாவட் டத்தில் உள்ள துலுக்கர்பட்டி கிராமமும் அடங்கும். ராதாபுரம் தாலுகாவில் உள்ள துலுக்கர்பட்டி கிராமம் நம்பி ஆற்றின் தென் கரையில் அமைந்து ள்ளது. இந்த தொல்லியல் மேடானது விளாங் காடு என்றழைக்கப் படுகிறது. இவ்வாழ்வியல் மேடானது, சுமார் 2.5 மீ உயரம், 36 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது.

    கலெக்டர் தொடங்கி வைத்தார்

    இந்த தொல்லியல் தளமானது சிவகளை, ஆதிச்ச நல்லூருக்கு சமகால கட்டமாகும். இங்கு 2-ம் கட்ட அகழாய்வு பணியினை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செய லாளர் டாக்டர் சந்தர மோகன் மற்றும் தொல்லி யல் துறை ஆணையர் சிவானந்தம் வழிகாட்டு தலின்படி, அகழாய்வு இயக்குநர் வசந்தகுமார், அகழாய்வு இணை இயக்குனர் காளீஸ்வரன், தலைமை யில் அகழாய்வு பணி நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் ஆனை குளம் ஒன்றிய வார்டு கவுன்சிலர் ரைகானா ஜாவித், பஞ்சாயத்து தலைவர் அசன், அரசு ஒப்பந்ததாரர் ஷேக், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். பின்னர் கலெக்டர் கார்த்தி கேயன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்று காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பண்டையத் தமிழ் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

    தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ் சமூகத்தினரின் மேம்பட்ட பண்பாடு 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதி செய்ய கூடுதல் சான்றுகளைத் தேடி அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 11.2.2022 பொருநை ஆற்றின் ஈடாக நம்பியார் படுகையிலும் அகழாய்வுகள் மேற்கொள் ளப்பட்டு ள்ளன. 8 மாதங்கள் நடைபெற்ற இந்த அகழாய்வில் 17 குழிகள் அமைக்கப்பட்டு இதுவரை 109 தொல் பொ ருட்கள் கண்டெடுக்க ப்பட்டுள்ளது.

    வெள்ளி முத்திரைக் காசுகள், செம்பிலான பொருட்கள், இரும்பில் ஆன பொருட்கள், சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண்ணால் ஆன விளையாட்டு பொருட்கள், நீலக்கல் கண்ணாடி மணிகள், பளிங்கு கல்மணிகள் ஆகிய முக்கிய தொல்பொருட்கள் ஆகும். தமிழில் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக அகழாய்வு பணிகள் இன்று தொடங்கின.

    இந்த அகழாய்வின் குறிக்கோள் செறிவுமிக்க இத்தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை மற்றும் தொல் பொருட்களின் தன்மை ஆகியவற்றை கண்டறிவது ஆகும். நம்பி ஆற்றங் கரையில் இரும்பு கால பண்பாட்டின் வேர்களைத் தேடுவதே இவ்அகழாய்வின் நோக்கமாகும்.

    நம்பியாறு நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி இதே மாவட்டத்தில் ஆத்தங்கரை பள்ளிவாசலில் கடலில் கலக்கிறது. நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி, ராதாபுரம் பகுதியில் சுமார் 45 கிலோமீட்டர் நீளமுடைய இந்த ஆற்றில் பழங்கா லத்தில் பல வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவில்கள் இருந்ததாகவும், பண்டைய மக்களின் வாழ்வியல் இடமாக சிறந்ததாகவும், பண்பாட்டுக் கூறுகள் மூலம் கண்டறியப் பட்டுள்ளன.

    இந்த நம்பியாறு படுகை பண்டைய தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தின் தொட்டில் ஆகவும், வியாபாரத் தளமாகவும், ஆன்மீக தலமாகவும் பல அரசர்கள் ஆட்சி செய்யும் இடமாகவும் திகழ்ந்துள்ளது. இதற்கு சான்றாக தான் இன்றும் இந்த பகுதியில் ராஜாக்கள் வாழ்ந்த இடம் ராஜாக்கமங்கலம் என்றும், தளபதிகள் வாழ்ந்த இடம் தளபதி சமுத்திரம் என்றும், இரணியன் என்ற அரசன் வாழ்ந்த இடம் இரணியன் குடியிருப்பு என்று பல தொல்லியல் சிறப்புடைய பகுதிகள் இங்கு அமைந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் கட்டமாக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள திருக்கோளூரில் முதல் கட்டமாக இன்று அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது.
    • ஆதிச்சநல்லூரில் இதுவரை புதைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் வாழ்விடப் பகுதியில் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 3 இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

    இந்த அகழாய்வு பணியில் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்க கால வாழ்விடப் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தது. இந்த பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நிறைவு பெற்றது.

    இந்நிலையில் தொடர்ந்து ஆதிச்சநல்லூர் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்கு அனுமதி பெற உள்ளதாகவும் அனுமதி கிடைத்த பின்னர் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்கான அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த வருட இறுதியில், ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த ஆதிமனிதனின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய 5 இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் அகரம், கொங்கராயகுறிச்சி, கால்வாய், கருங்குளம், திருக்கோளூர் ஆகிய 5 இடங்களில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் முதல் கட்டமாக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள திருக்கோளூரில் முதல் கட்டமாக இன்று அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது. தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் இந்த அகழாய்வு பணிகள் நடைபெறும் என்று ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆதிச்சநல்லூரில் இதுவரை புதைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் வாழ்விடப் பகுதியில் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்த பணிகளை மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், ஏரல் தாசில்தார் கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஆய்வாளர் எத்தீஸ் குமார், முத்துக்குமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வை உடனே தொடங்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • கடந்த செப்டம்பர் மாதத்தில் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்தது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜய கரிசல்குளம் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதத்தில் அகழாய்வு பணிகள் நடந்தது.

    அதில் ஏராளமான சங்கு வளை யல்கள், அயல் நாட்டு வர்த்தகத்திற்கு பயன்படுத் தக்கூடிய முத்திரைகள், சதுரங்க கட்டைகள், சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய சில்வட்டுகள், விசில், அணிகலன்கள், பெண்கள் அணியக்கூடிய தங்க ஆபரணங்கள், மண்பானைகள், தங்க காசுகள், சூது பவளம் தக்கலி, சுடுமண்ணால் ஆன பொம்மைகள், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பண்டைய கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

    இதற்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 15 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதத்தில் பணிகள் நிறைவடைந்தது. முதலாவது அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விருது நகரில் நடந்த புத்தக கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன.

    அதை ஏராளமானோர் பார்வையிட்டனர். புத்தக கண்காட்சியில் சில பொருட்கள் மட்டுமே பார்வைக்கு வைக்கப் பட்டன. முழுமையாக எடுக்கப்பட்ட பொருட்களை சிவகாசி அல்லது வெம்பக் கோட்டையில் அருங்காட்சியமாக வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    2-வது கட்ட அகழாய்வு பணி ஜனவரி மாதத்தில் தொடங்கப்படலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். ஆனால் இன்னும் 2-வது கட்ட பணி தொடங்கப்படாமல் உள்ளது. எப்போது தொடங்கும் என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை.

    2-வது கட்டப்பணி தொடங்கினால் மேலும் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஏராளமான பொருட்கள் கிடைப்பதுடன் பண்டைய கால மக்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2-ம் கட்ட அகழாய்வை உடனே தொடங்க வேண்டும் என்பதே தொல்லியல் ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

    • அகழாய்வுப் பணிகளைக் முதலமைச்சர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார்.
    • முதல் கட்ட அகழாய்வில் மொத்தம் 1,010 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் புகழ்பெற்ற சோழப்பேரரசின் இரண்டாவது தலைநகரமான கங்கைகொண்டசோழபுரம் அமைந்துள்ளது. முதலாம் இராசராசனின் மகனும் அவரைத் தொடர்ந்து ஆட்சி செய்தவருமான முதலாம் இராசேந்திரனால் சோழநாட்டின் தலைநகராக இந்நகரம் தோற்றுவிக்கப்பட்டது.

    கங்கைகொண்டசோழபுரம் தலைநகராக உருவாக்கப்பட்டதையும் சோழப்பேரரசர்களின் அரசியல் தளமாக மாற்றப்பட்டதையும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் உறுதிப்படுத்துகின்றன. கங்கைகொண்டசோழபுரத்தை உருவாக்கிய முதலாம் இராசேந்திரனின் ஆட்சியின் போது, முடிகொண்டசோழன் திருமாளிகை, கங்கை கொண்ட சோழன் மாளிகை, சோழகேரளன் திருமாளிகை என்ற பெயர்களில் இங்கு பெரிய அரண்மனைகள் கட்டப்பட்டிருந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம், மாளிகைமேடு பகுதிகளில் அகழாய்வுப் பணிகளைக் முதலமைச்சர் கடந்த 11.2.2022 அன்று தொடங்கி வைத்தார். சோழப் பேரரசின் மாமன்னன் முதலாம் இராசேந்திரனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தின் நகரமைப்பு மற்றும் மண்ணில் புதைந்துள்ள கட்டுமானங்களை வெளிக்கொணர்ந்து அரண்மனையின் வடிவமைப்பினை தெரிந்து கொள்வது இந்த அகழாய்வின் நோக்கமாகும்.

    கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள மாளிகைமேட்டில் அகழாய்வு மேற்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அகழாய்வுப் பணிகள் செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டன.

    அதன்படி, புதையுண்ட செங்கல் கட்டுமானங்கள் இருந்ததற்கான சான்றுகள் வெளிக் கொணரப்பட்டுள்ளன. கிடைக்கப்பட்ட சான்றுகளின் மூலம் கட்டடப்பகுதிகள் செங்கற்களின் அடிப்பகுதியில் எழுப்பப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மேலும், கிடைக்கப்பெற்ற செங்கற்கள் மற்றும் கூரை ஓடுகள் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகின்றன.

    செங்கல் கட்டுமானங்களுடன் பல்வேறு வகையான பானையோடுகள் மற்றும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. உலோகப் பொருட்கள் குறிப்பாக அதிக அளவில் இரும்பு ஆணிகள், செம்பினாலான பொருட்கள், செப்புக் காசுகள், தங்கக் காப்பு, கண்ணாடி மணிகள் மற்றும் வளையல் துண்டுகள், தந்தத்தினாலான பொருட்கள், வட்டச்சில்லுகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் கெண்டி மூக்குகள் ஆகியவை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    செலடன் மற்றும் போர்சலைன் எனப்படும் சீனப் பானையோடுகளும் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இடைக்காலத்தின் தொடக்கத்தில் காணப்படுகின்றன. இவை 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் சீனாவுடன் கொண்டிருந்த வணிகத்தொடர்பை வெளிப்படுத்துகின்றன.

    கங்கைகொண்டசோழபுரம் (மாளிகைமேடு) அகழாய்வுப் பணிகள் 2021 மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டன. மொத்தமாக, 5 அகழாய்வுக் குழிகளைக் கொண்ட 19 காற்பகுதிக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவ்வகழாய்வில் மொத்தம் 1010 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. 


    இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.11.2022) அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த பணிகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அகழ்வாய்வின் போது கிடைத்த பொருட்களையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.ஆ.ராசா, தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழடியில் 8-ஆம் கட்ட அகழாய்வுப்பணிகள் முடிந்த பிறகு அகழாய்வு வைப்பகம் திறந்து வைக்கப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • புதிய தொழில்நுட்பத்தில் ஒலி அமைப்புடன் கண்ணாடியில் காட்சிப்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கொந்தகை கிராமத்தில், கீழடியில் கட்டப்பட்டு வரும் புதிய அகழாய்வு வைப்பக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன், பி.மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகழாய்வு வைப்பக கட்டுமானப் பணிகள் முழுமை பெற்றுள்ளது. அகழ் வைப்பகத்தில் அகழ்வராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப் பொருட்கள் உலகத்தரத்திலான வகையில் காட்சிப்படுத்த துறை வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, வரைபடங்கள்

    தயாரிக்கப்பட்டு சுவற்றில் காட்சிப்படுத்த வேண்டிய பொருட்கள், புதிய தொழில்நுட்பத்தில் ஒலி அமைப்புடன் கண்ணாடியில் காட்சி ப்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

    அந்தவகையில் ஏறத்தாழ 10,210 வகை பொருட்களை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அகழ்வராயச்சி பொ ருட்களை காட்சிப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்ப ணிகளால் அகழாய்வு வைப்பகம் திறந்து வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை கிடைத்துள்ள பொருட்களையும் காட்சிப்படுத்த இதுவும் ஒருவகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    தற்போது 8-ஆம் கட்ட அகழாய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற்றபின் முதலமைச்சர் மூலம் அகழாய்வு வைப்பகம் திறந்து வைக்கப்படும். கீழடியில் அகழ்வராய்ச்சியின் மூலம் கிடைக்கும் பொருட்களை காட்சிப்படுத்தியும் அந்த பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு புரியும் வகையில் குறும்படங்கள் மூலம் விளக்கப்படுத்திடவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    முன்காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் முதல் தற்போது வரை பயன்படுத்திய பொருட்கள் குறித்த குறும்படம் தயாரிக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது தமிழரசிரவிக்குமார் எம்.எல்.ஏ., முதன்மை தலை மைப்பொறியாளர் விஸ்வநாதன், மதுரை மண்டல தலைமைப்பொ றியாளர் ரகுநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (பாரம்பரிய கட்டிடக்கோட்டம்) மணிகண்டன், தொல்லியியல் துறை இணை இயக்குநர் ரமேஷ், திருப்புவனம் பேரூராட்சித்தலைவர் சேங்கைமாறன், கீழடி ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் அருகே நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியை அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார். அப்போது 353 தொல்பொருட்கள் கிடைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. #MinisterPandiarajan
    திருவள்ளூர்:

    தொல்லியல் துறை சார்பில் கடந்த மாதம் 25-ந் தேதியில் இருந்து திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் உள்ள பழம்பெரும் சிவன் கோவிலுக்கு மேற்கே அகழ்வாய்வுக்காக 2 ஏக்கர் நிலத்தில் 11 குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுவரை நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய கருப்பு சிவப்பு பானை ஓடுகள், கருப்பு நிற பானை ஓடுகள், மெருகூட்டப்பட்ட கருப்பு பானை ஓடுகள், சொரசொரப்பான மண்பாண்ட ஓடுகள், சிவப்பு நிற மண்பாண்ட ஓடுகள், வழவழப்பான சிவப்பு மண்கலன்கள், செம்பழுப்பு பூச்சு கொண்ட காவி நிற மண்பாண்ட ஓடுகள், காவி வண்ணம் பூசப்பட்ட சிவப்பு பானை ஓடுகள், தாழிகளின் ஓடுகள், ஜாடிகளின் மூடிப்பகுதிகள், பழமையான செங்கல் துண்டுகள், கற்கருவிகள், இரும்பு கருவிகள், எலும்பு மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட மணிகள், சூது பவளமணிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் ஆன சில்லுகள், இரும்பு பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், அரியவகை கல்மணிகள், தேய்ப்பு கற்கள், பல்வேறு வகையான குறியீடுகள் பொறித்த பனை ஓடுகள், தமிழ் பிராமி எழுத்து பொறிப்புகளுடன் கூடிய பனை ஓடுகள், ஏராளமான எலும்புகள், வரலாற்று தொடக்க காலத்தை சேர்ந்த செங்கற்களின் துண்டுகள் என 353 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

    மேலும் இங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியை நேற்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து அங்கிருந்தவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பட்டரைபெரும்புதூர், கீழடி அகழ்வாய்வால் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அகரம்பாக்கம் பகுதியில் மனிதன் வாழ்ந்திருப்பது என்பது விஞ்ஞானிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 3 லட்சத்து 75 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகின் முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் தான் இருந்தான் என்ற நம்பிக்கை மாறி முதலாவதாக தமிழகத்தில் இருந்து உலகம் முழுவதும் சென்றதாக நிரூபிக்க முடியும். வரலாறு ரீதியாக இந்த சான்றுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    திருவள்ளூரை அடுத்த பூண்டியில் உள்ள அருங்காட்சியகத்தை மேம்படுத்த ஒரு திட்டம் தீட்டி அதற்கு செயல்வடிவம் தந்து கொண்டிருக்கிறோம். வரும் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

    பட்டரைபெரும்புதூரில் பல கோவில்கள் சார்ந்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. பல்லவ மன்னன் அபராஜிதவர்மன் காலத்தில் இருந்த கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இப்பகுதியில் பழங்குடியினர் மற்றும் இருளர் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளது. அவர்களின் வாழ்வுமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்வெட்டுகளுடன் ஒப்பிட்டு இந்த இடத்தின் தொன்மை, வரலாற்றை உலகுக்கு அரிய செய்யப்படும்.

    இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் மாணவர்கள் அருகில் உள்ள அருங்காட்சியகத்துக்கு செல்ல அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அங்கு மாணவர்களுக்கு ஒரு நாள் முழுக்க வகுப்புகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது தொல்லியல்துறை ஆணையர் நாகராஜ், பட்டரைபெரும்புதூர் அகழ்வாய்வு இயக்குனர் பாஸ்கர், துணை இயக்குனர் சிவானந்தம், கலெக்டர் சுந்தரவல்லி, ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் உடன் இருந்தனர். #MinisterPandiarajan
    ×