search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "540 children"

    கடந்த 6 மாதங்களில் வீடுகளை விட்டு ஓடிவந்து ரெயில் நிலையங்களில் தவித்த 540 குழந்தைகள் மற்றும் 52 பெண்களை மீட்டு பெற்றோர் மற்றும் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
    சென்னை:

    ரெயில் நிலையங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீட்கப்பட்டது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தெற்கு ரெயில்வேயில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கடந்த 6 மாதத்தில் பயணிகள் தவறவிட்ட 1,385 உடமைகளை மீட்டு தந்துள்ளனர். ரெயில் பயணத்தின் போது மருத்துவ உதவி தேவைப்பட்ட 735 பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    பல்வேறு பிரச்சினைகளுக்காக வீடுகளை விட்டு ஓடிவந்து ரெயில் நிலையங்களில் தவித்த 540 குழந்தைகள் மற்றும் 52 பெண்களை மீட்டு பெற்றோர் மற்றும் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ரெயில் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்ததோடு, குற்றத்தில் ஈடுபட்ட 133 பேரை கைது செய்தனர்.

    ரூ.5 லட்சம் மதிப்பிலான ரெயில்வே சொத்துக்களையும் மீட்டுள்ளனர். 51 ஆயிரத்து 701 விதிமீறல் சம்பவங்களில் தொடர்புடையோரிடம் இருந்து ரூ.1 கோடியே 32 லட்சத்து 5 ஆயிரத்து 256 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு படையின் பாதுகாப்பு உதவி எண் ‘182’ மூலம் 368 புகார்களும், ‘டுவிட்டர்’ மூலம் 501 புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    ×