search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 suspects"

    • நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டி, கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 38).
    • காந்திஜி மேலத்தெருவில் சென்ற போது, களக்காடு கோட்டை யாதவர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (35), முரளிதரன் (27), ரமேஷ் (54) ஆகியோர், முருகனின் மனைவி பொன்மலரின் தம்பி சதிஷ் என்பவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.

    களக்காடு:

    நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டி, கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவருக்கும், களக்காடு காந்திஜி மேலத்தெருவை சேர்ந்த பொன்மலருக்கும் திருமணமாகியுள்ளது. தற்போது பொன்மலரும், அவரது குழந்தையும், தனது பெற்றோர் வீட்டில் உள்ளனர்.

    சம்பவத்தன்று முருகன், தனது மனைவி குழந்தையை பார்ப்பதற்காக மாமனார் வீட்டிற்கு வந்தார். களக்காடு புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாமனார் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். காந்திஜி மேலத்தெருவில் சென்ற போது, களக்காடு கோட்டை யாதவர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (35), முரளிதரன் (27), ரமேஷ் (54) ஆகியோர், முருகனின் மனைவி பொன்மலரின் தம்பி சதிஷ் என்பவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.

    இதைப்பார்த்த முருகன் அங்கு சென்று என்ன பிரச்சினை என்று கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், முரளிதரன், ரமேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து, முருகனை கற்களால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயம் அடைந்த முருகன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வெங்கடேஷ் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×